Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓமந்தைசோதனைச் சாவடி மூடப்பட்டது.

Written by Seran - Oct 18, 2007 at 01:14 PM

வவுனியா ஓமந்தை சிறிலங்காப் படைச் சோதனைச் சாவடி இன்று காலை முதல் மக்கள் போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை வன்னி ஊடாக வவுனியாவிற்கும் வவுனியா ஊடாக வன்னிக்கும் போக்கு வரவில் ஈடுபடுவதற்கென மக்கள் சோதனைச் சாவடியை வந்தடைந்தபோது சோதனைச்சாவடி திறக்கப்படாமல் படையினரால் மககள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வவுனியா படை நிலைகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிகள் மீது எறிகணைத்தாக்குதல்களை நடாத்திவந்த படையினர் சோதணைச் சாவடி ஊடாக வன்னியிலிருந்து பயணம் செய்த மக்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியும் வந்தனர்.

இவ்வாறான நிலையில் படையினரின் இத்திடீர் பாதைத் தடையால் நோயாளிகள் உட்பட போக்குவரவில் ஈடுபடவிருந்த மக்கள்

பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை படைநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே இச்சோதனைச் சாவடி மூடப்பட்டிருக்கலாம் என்று மக்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.sankathi.net/index.php?option=c...61&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு உத்தரவாதத்தையடுத்து இன்று ஓமந்தை சாவடி திறக்கப்படும் ஐ.சி.ஆர்.சி.யின் பேச்சாளர் அறிவிப்பு

இராணுவமும் விடுதலைப்புலிகளும் நேற்று பிற்பகல் போதிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியதையடுத்து இன்று காலை ஐ.சி.ஆர்.சி. அதிகாரிகள் ஓமந்தை சூனியப் பிரதேசத்துக்கு கடமைக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று காலை ஓமந்தை பாதை பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என ஐ.சி.ஆர்.சி.யின் பேச்சாளர் டாவிடி விக்னட்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த டாவிடி மேலும் கூறியதாவது:

நேற்று பிற்பகல் இருதரப்புடனும் ஐ.சி.ஆர்.சி. விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இதையடுத்து இராணுவமும் விடுதலைப்புலிகளும் எமக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினர்.

எனவே, இன்று காலை ஓமந்தை சூரியப் பிரதேசத்துக்கு கடமைக்கு செல்வதென தீர்மானித்துள்ளோம்.

எனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்வற்கான ஓமந்தை சோதனை சாவடியூடான பாதை இன்று மீண்டும் பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்றார்.

நேற்று முன்தினம், ஓமந்தை சூனியப்பிரதேசத்துக்கு அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற நடவடிக்கை மற்றும் கடும் ஷெல்தாக்குதலையடுத்து நேற்று ஐ.சி.ஆர்.சி. சூனியப் பிரதேசத்துக்கு கடமைக்கு செல்வதிலிருந்து விலகிக் கொண்டனர்.

இதனால் நேற்று ஓமந்தை சோதனைச் சாவடி ஊடான பாதை பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்படவில்லை. மேலும் கருத்து தெரிவித்த டாவிடி விக்னட்டி,

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கான உயிலங்குளம் பாதையும் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருதரப்பும் மேற்கொண்ட ஷெல் தாக்குதல்கள், படையினரின் இராணுவ நடவடிக்கை காரணமாக எமது அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதையடுத்து செப்டெம்பர் 3ஆம் திகதி உயிலங்குளம் சூனியப்பிரதேசத்துக்கு கடமைக்கு செல்வதில் இருந்து ஐ.சி.ஆர்.சி. விலகிக் கொண்டது.

எதிர்பார்த்த மட்டத்தில் இருதரப்பில் இருந்தும் எமக்கு போதிய பாதுகாப்பு உத்தரவாதம் இதுவரை வழங்கப்படவில்லை எனவே அந்தப் பாதை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொதுமக்களின் போக்குவரத்துகாக திறக்கப்படவில்லை என்றார்.

இதேவேளை, நேற்று பாதை திறக்கப்படாததால் கிளிநொச்சிக்கு செல்லவிருந்த மக்கள் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- வீரகேசரி

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னட்டி கூறியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.