Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

December 18, 2024  12:32 pm

Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்

பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax  தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது.

"நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது.

மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது.

மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.

அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம்."

 

https://tamil.adaderana.lk/news.php?nid=197474

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு கம்பனிகளுக்கு software developer ஆக தொழில் புரியும் இளைஞர்கள் அதியுச்ச tax bracket இல் வர இடமுண்டு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு

உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும். ஆலோசனைகள் கூறுபவர்கள் அப்போது அவர்களுக்கு கூறியிருக்க முடியும். 2028 ஆம் ஆண்டளவில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரி விலக்கு வரம்பை ரூகப 100,000 முதல் 150,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மீளாய்வு தொடர்பாக ஐ.எம்.எப். உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வருமான வரி வரம்பை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

புதிய வரி திருத்தங்களின் பிரகாரம் தனிநபர் வருமானமாக  ரூ. 500,000 முதல் ஒரு மில்லியனை பெறுபவர் வரியின் முதல் கட்டத்தில் உள்ளடகப்பட்டுவதுடன், அவர் 6 வீத வரி விகிதத்திற்கு உட்படுவார். 150000 ரூபாவுக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் முழுமையாக வரி விலக்குக்கு உட்படுவர். 2 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவருக்கு 71 வீதம் விரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,

ரூ.250,000 வரை வருமானம் பெறுபவருக்கு 61 வீதமும்,  300,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 47 வீதமும்,  350,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு  25.5 வீதமும்  அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு அதிகமான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரியும் காணப்பட்டது. தற்போது, குறைவான வரி பெறுவோருக்கு குறைவான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறவிடும் முறை உருவாகியுள்ளது.

தடுத்து வைக்கும் வரி 5 வீதத்திலிருந்து 10 வீதமாக அதிகரிக்கப்படும். சேவைகள் ஏற்றுமதிக்கான வரியை 30 வீதத்திலிருந்து 15 வீதமாக  குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது. அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்பட்டள்ளது. வாகன சந்தையும் அதை சார்ந்த தொழில்துறையும் மிகவும் பெரியது. நீண்டகாலம் இதனை மூடி வைத்திருக்க முடியாது.

இதுவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்கள் தொடர்பில் மீண்டும் மறுபரிசீலமை செய்யப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்கும் வகையில் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கிக் கணக்கை திறக்க முடியாது 67ஆயிரம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கை திறப்பதற்கான அனுமதியை வழங்க மத்திய வழங்கியுடன் நடத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒன்றரை வருட நிலுவை தொகையுடன் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு 6ஆயிரம் ரூபா வவுச்சர் ஒன்றை பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி முதல் குறித்த வவுச்சர்கள் வழங்கப்படும். அதேபோன்று அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது குறித்த வவுச்சர்களை பெற்றுக்கொள்ள தகுதியுடைய மாணவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
 

 

https://oruvan.com/income-tax-reduction-presidential-action-plan/

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பெரும் முதலைகளிடமும் சரியாக அறவிட்டாலே போதுமான வருவாய் கிடைத்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

வரி திருத்தம் தொடர்பில் IMF விசேட அறிவிப்பு

வரி திருத்தம் தொடர்பில் IMF விசேட அறிவிப்பு

இலங்கையின் அண்மைய வரி திருத்தங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு நிறைவேற்று சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து பணியாளர் அறிக்கையில் முழுமையான மதிப்பீடு உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=197568

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.