Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வெசும தொடர்பில் அதிரடி வர்த்தமானி

  புதிய விசேட வர்த்தமானி மூலம், அஸ்வெசும நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்தப் பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 17.05.2024 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலும், இது தொடர்பில் இதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 

2025 ஜனவரி முதல் மார்ச் வரை 480,000 இடைநிலைக் குடும்பங்கள் 5000 ரூபாய். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை 480,000 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு 5000 ரூபாய், 960,000 ஏழைக் குடும்பங்கள் 480,000 மாதாந்திர நிவாரணப் பலன்கள் 17,500 ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், இந்த கொடுப்பனவுகளில் பாதிக்கு உரிமை உண்டு.

மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில், பிற திறன் கொண்டவர்களுக்கு 7500 ரூபாயும், சிறுநீரக நோயாளிகளுக்கு 7500 ரூபாயும், முதியோர்களுக்கு 3000 ரூபாயும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது பாராளுமன்றத்தின் ஒப்புதல் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.R

image_b68dea5a21.jpg
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அஸ்வெசும-தொடர்பில்-அதிரடி-வர்த்தமானி/150-349251

  • கருத்துக்கள உறவுகள்

‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி வெளியீடு

25 DEC, 2024 | 01:41 PM
image

(எம்.மனோசித்ரா)

நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 'நிலையற்றவர்கள்' என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480, 000 நபர்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

மேலும் 'பாதிப்புக்குட்பட்டவர்கள்' என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

'வறியவர்கள்' என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 960,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10, 000 ரூபா வழங்கப்படவுள்ளது. 

'மிகவும் வறியவர்கள்' என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17, 500 ரூபா வழங்கப்படவுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2க்கு குறைவாகக் காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள், முதியோருக்கான கொடுப்பனவுகள் குறித்த விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 410, 000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50, 000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 820, 000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இந்தக் கொடுப்பனவுகள் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன.

2024 மே 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே நலன்புரி நன்மைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட மேலும் பல்வேறு காரணிகளால் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள பயனாளிகள் மேன்முறையீடுகளை சமர்ப்பித்து தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது தகுதிக்கேற்ப 2024 டிசம்பர் 31ஆம் திகதி வரை குறிப்பிட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/202117

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.