Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு

பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது.

’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ என்ற அழுத்தம் ஜனாதிபதியின் மீது அதிகரித்து வருவதாகவும், தாமதங்களுக்கு அதிகாரிகளை குறை கூறும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குற்றவியல் வழக்குகளில் முழுமையாக விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசாரால் விசாரணையில் சில பகுதிகளின் அறிக்கைகளை மாத்திரம் அனுப்பப்படும் போது, அப்படியான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்கப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உயர்மட்டத்தில் எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, போதிய அரச சட்டத்தரணிகள் இல்லாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடுத்து, சட்ட மா அதிபர் திணைக்களம் அப்படியான வழக்குகளின் விசாரணையை முன்னெடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதிலும் முக்கியமாக தீவிரமான பல வழக்குகளில் பொலிஸ் விசாரணைகள் முழுமையாக நிறைவடையாத காரணங்களினால், தம்மால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த திணைக்களம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக நாட்டின் சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்வதில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

“ஆவணக் கோப்புக்களை சட்ட மா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகள் வரையில் பூட்டி வைத்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சில வழக்குகளில் அவை பதிவு செய்யப்பட்ட நாளுக்கு பின்னர் ‘தூசு தட்டாமல்’ அப்படியே வைத்திருந்து காலம்கடந்து நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன”, என ஜனாதிபதி அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

 

https://oruvan.com/பல-உயர்மட்ட-வழக்கு-விசார/

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கூட்டுக்களவாணிகள், அனுராவின் அடுத்த move எனப்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் - ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 7  07 JAN, 2025 | 08:47 AM

image
 

நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும். அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாபதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் குறித்து விசேடமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

'அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி வீண் விரயம் என்பன பரவியுள்ளன. எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது. ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கும்  என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை  (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திய வழக்குகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தன்மை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீதித்துறை கட்டமைப்பின்  மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு  தெரிவித்தார்.

அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும்  வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும் சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார,  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-01-07_at_8.41.12_AM_

WhatsApp_Image_2025-01-07_at_8.41.13_AM.

WhatsApp_Image_2025-01-07_at_8.41.14_AM_

WhatsApp_Image_2025-01-07_at_8.41.14_AM.

https://www.virakesari.lk/article/203172

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.