Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்த வாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தியதாகவும் தனக்கு எதிராக எவ்வித வழக்கும் விசாரணைகளும் இல்லாத சூழலில் இவ்வாறு செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தன்னுடன் வருகை தந்திருந்தார். அவர் இந்த விடயங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த உதவினார் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.

இதன்போது எழுந்த ரவூப் ஹக்கீம், அதிகாரிகளின் இந்த செயல்பாட்டை கண்டித்ததுடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய விசாரணைகளை செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் காலத்திலும் பயங்கரவாத எதிர்ச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.” என்றார்.

ஆளும் தரப்பில் சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ”சிறீதரன் எம்.பிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் பின்னர்தான் அறிய கிடைத்தது. இதுகுறித்து வருந்துகிறோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் எவ்வாறு தடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அங்கிருந்த அதிகாரிகள்தான் இதனை செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை அறிக்கைகளை கோரியுள்ளோம்.

இந்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவில்லை. புதிய சட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமையால் பயங்கரவார எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இருக்கும் சட்டத்தை பயன்படுத்த முடியும். அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவது எமது நோக்கமல்ல.” என்றார்.

 

https://oruvan.com/anti-terrorism-act-will-remain-in-effect-until-new-law-is-passed/

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரிகளுக்கு சிறீ மாஸ்டருடன் என்ன கொழுவல்? 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க.

புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் விருப்பமோ கொள்கையோ அல்ல. புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படும். புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்தினை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது.

அது தொடர்பாக நீதியமைச்சர் காரணிகளை முன்வைத்திருந்தார் அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விமான நிலையத்தில் எதிர்நோக்கிய அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இந்த விடயம் தொடர்பாக தற்போதே எனக்கு அறியக்கிடைத்தது. விமான சேவைகள் நிறுவன தலைவரிடம் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளேன்.அதுபோல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிடமும் நான் இந்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளேன். ஸ்ரீதரனின் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1417497

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் ஜனாதிபதி மீண்டும் உறுதி - பிரதி அமைச்சர் சுனில் வடகல

Published By: VISHNU   23 JAN, 2025 | 05:02 AM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு  நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை  நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே  சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில்  வடகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில்  உரையாற்றிய   பாராளுமன்ற  உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் அரசாங்கத்தின்  விருப்பத்துக்கு அமைய இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியாது. பொலிஸார் இந்த சட்டத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார்.

இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அது தயாரிக்கப்பட்டதும் குழுவில் ஆராய்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்படும். அது தொடர்பான விபரங்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் உறுதிப்படுத்துவோம். இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதுடன் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல,பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி பேசப்படுகிறது. ஏனைய கட்சிகளை காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாங்கள் தான் பாரதூரமாக பாதிக்கப்பட்டோம். ஆகவே இதன் பாரதூரம் எமக்கு நன்கு தெரியும்.

பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு  நியமிக்கப்பட்டுள்ளது.

உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இச்சட்டத்தை நீக்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/204613

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.