Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

21 JAN, 2025 | 10:42 PM
image

இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. நீண்டகாலமாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக ஓர் ஒற்றைத்தீர்வை யாராலும் முன்வைக்கமுடியாது. மாறாக இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். 

பிரித்தானிய தமிழர் பேரவையினால் கடந்த வாரம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இந்திய - ஈழத்தமிழர் உறவானது இயற்கையாகவே உணர்வு ரீதியாக, வரலாற்று ரீதியாக, கலாசார ரீதியாகப் பிணைந்திருக்கின்றது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் ஈழத்தமிழர் பிரச்சினையானது பல்வேறு பரிமாணங்கள், பல்வேறு வடிவங்களில் மாற்றமடைந்துகொண்டிருக்கக்கூடிய  சூழலில் இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியின் பிரதிநிதியாகவும், சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் நீண்டகாலப் பிரச்சனைக்கான ஓர் ஒற்றைத் தீர்வை யாராலும் முன்வைக்க முடியாது. 

ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும்.  அதனை முன்னிறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறது. அதேவேளை உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி செயற்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் தங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இணைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். 

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியும். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவைப் பேணுவதென்பதும் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளுடன் பொருத்திப் பார்ப்பதென்பதும் முக்கியமானதாகும். ஒரு நாடானது பல்வேறு விதமான இராஜதந்திர உத்திகளுடன் தான் இயங்கும். 

 2014 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேசியதுடன் நின்று விடாது, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களுடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடினார் என்ற செய்தி, "யாழ்ப்பாண மக்களுடன் நிற்கிறேன், அவர்களுக்கென்று இருக்கின்ற அந்த நீண்டகால கோரிக்கையை நான் இலங்கை மண்ணிலே உங்கள் முன் வைக்கிறேன்" என்ற அவரது நிலைப்பாட்டைக் காண்பித்தது.

பொருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான விழாவை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசு "அனைவருக்கும் வீடு" என்னும் திட்டத்தை இந்தியாவில் செயற்படுத்துவதுடன் மாத்திரமன்றி, இலங்கையிலும் அதனைச்  செயற்படுத்தியது எனச் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/204488

  • கருத்துக்கள உறவுகள்

BJP யின் மேலிட  அனுமதியுடன்தான் அவர் Britain சென்றிருப்பார். அங்கே என்ன பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதையும் BJP  அவரிடம் சொல்லி அனுப்பியிருக்கும்  என்பதை யூகிப்பது கடினம் அல்ல. 

எனவே 

இலங்கையில் இனப்பிரச்சனை முடிவின்றித் தொடரும் என்பதையும் அதன் தொடர்ச்சியாக  இந்தியாவின் செல்வாக்கை   இலங்கைக்குள் வைத்திருக்க இந்தியா முனையும் என்பதை மறைமுகமாகக்  கூறுகிறார். 

இலங்கையில் இனப்பிரச்சனை முடிவுக்கு வந்தால் இந்தியாவுக்கு இலங்கையில் என்ன வேலை? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.