Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
05 Feb, 2025 | 05:18 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை மீறல் பத்திரத்தில்  உள்ள விடயங்களைத் தவிர்த்து சபையில் உரையாற்றிய ஏனைய அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது. தயவு செய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் குறிப்பிட்டார்

பாராளுமன்றம் புதன்கிழமை (5)  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து ஜனாதிபதியின் அறிவிப்பு, குழுக்களின் அறிவிப்புக்களை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிறப்புரிமை  மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

2025.01.21ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து தான் கொழும்பு நோக்கி வரும்போது அநுராதபுரம் பகுதியில் தனது வாகனத்தை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து அர்ச்சுனா உரையாற்றினார்.

அர்ச்சுனா  தமிழில் உரையாற்றிய நிலையில் அதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் 'நீங்கள் உங்களின் சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான பத்திரத்தை  ஆங்கிலத்தில் சமர்ப்பித்துள்ளதால் ஆங்கிலத்திலேயே உரையாற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

இதன்போது “நான் சிங்களத்தில் உரையாற்றவா?” என்று அர்ச்சுனா சபாநாயகரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் “முடியாது. நீங்கள் ஆங்கிலத்தில் கடிதத்தை முன்வைத்துள்ளதால் அந்த மொழியிலேயே உரையாற்ற முடியும்” என்றார்.

அதனை தொடர்ந்து அர்ச்சுனா ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்ட சபாநாயகர் “நீங்கள் வழங்கிய கடிதத்தில் உள்ள விடயங்களை மட்டுமே குறிப்பிட முடியும்” என்று அறிவுறுத்தினார். எனினும் அர்ச்சுனா தொடர்ந்தும் வேறு விடயங்களை முன்வைத்ததுடன் சபாநாயகரை நோக்கி விரல் நீட்டி உரையாற்றினார்.

இதன்போது அர்ச்சுனாவின் உரை தொடர்பில் அறிவித்தல் விடுத்த சபாநாயகர், அர்ச்சுனாவினால்  முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை கடிதத்தில் இல்லாத விடயங்கள் அனைத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து  உரையாற்றிய சபாநாயகர் அர்ச்சுனாவை நோக்கி 'நீங்கள் போக்குவரத்து விதியை மீறியுள்ளமை தொடர்பிலும், உங்களுக்கு எதிராக போக்குவரத்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் பொலிஸாரால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவருக்கும் சட்டத்தை மீறிச் செல்ல முடியாது. இதனால் தயவுசெய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை நீங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வசதிகளை வழங்குமாறும் நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளோம். இதற்கு அப்பால் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

அதனை தொடர்ந்து மீண்டும் உரையாற்ற  அர்ச்சுனா  முயன்ற நிலையில், “நீங்கள்  சமர்ப்பித்த  பத்திரத்துக்கு அப்பாற்பட்ட  விடயங்களை  முன்வைக்கின்றீர்கள்” என்று குறிப்பிட்டு,    தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குவதை மறுத்தார், சபாநாயகர்.

எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது - அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பி.க்கு தலையில் பிரச்சினை; தயாசிறியின் பேச்சால் சபையில் சலசலப்பு

இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றில் சாசலப்பு ஏற்பட்டது.

கடந்த 29 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸார் மறித்து விசாரணை நடத்தினர்.

எனது, வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உரையை இடைநிறுத்திய சபாநாயகர் நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என அறிவித்த பின்னர் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அர்ச்சுனா,

“தன்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து பொலிஸார் மறித்ததாகவும், தனது அடையாள அட்டையை கேட்டதாகவும், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் என்னுடைய அடையாள அட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, நாடாளுமன்றத்தால் தரப்பட்ட தற்காலிக அட்டை என்னிடம் உள்ளது என்று அதனைக் காட்ட முற்பட்டும் அந்த போக்குவரத்து பொலிஸார் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார்.

இதனையடுத்து, குறுக்கிட்ட சபாநாயகர், அர்ச்சுனா எம்.பியைப் பார்த்து “உங்களுடைய அடையாள அட்டை நாடாளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தான் பெற்றுக் கொள்ள தவறியுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா,

தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த உரையாடலை பொலிஸார் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், பொலிஸாரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு பொலிஸார் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறினார். இந்த நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இது தொடர்பில் வெட்கப்பட வேண்டும் என்றும் சபையில் மீண்டும் மீண்டும் சத்தமாக தெரிவித்தார்

இதன்போது, இடையில் குறுக்கிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, உரையாற்றிய சபாநாயகர்,

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும். இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார்.

எவ்வாறாயினும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இந்த உரைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதால் பயனில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரபல யூடியூபர் என்றும், அவர் உரையாற்றும் இந்த நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/315139

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.