Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?

 
கெம்செக்ஸ், இலங்கை

Getty Images சித்தரிப்புப் படம்

  • தினுக் ஹேவாவிதாரண
  • பிபிசி சிங்களம்
  •  

''எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர் தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது'' என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.

ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாக பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார்.

உடலுறவு கொள்ளும் போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்டாயம் அவசியமான நிலைமை ஏற்படுவதாக அவர் மேலும் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

தனது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவரையும், அவரது அனுபவங்களை பற்றி கருத்து தெரிவித்தவர்களையும் குறிப்பிடுவதற்கு பிபிசி புனைப் பெயர்களை பயன்படுத்த தீர்மானித்தது.

 

 

கெம்செக்ஸ் என்றால் என்ன?

 

உடலுறவில் அதிக இன்பத்தை பெற்றுக்கொள்வதற்காக, உடலுறவிற்கு முன்பாக போதைப்பொருள் அல்லது மருந்து வகைகளை பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடு கெம்செக்ஸ் (Chemsex) என அழைக்கப்படும் என்று பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''உடலுறவு செய்வதற்கு முன் ஏதேனும் ரசாயன பொருட்களை எடுத்துக்கொண்டால், அதை கெம்செக்ஸ் என அடையாளப்படுத்துவோம். பலர் இதனை உடலுறவு இன்பத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் கூறவில்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர்களின் அனுமதியுடனான மருந்துகள் அல்லது அனுமதியற்ற மருந்துகள் அல்லது ரசாயன பொருட்களாக இருக்கக்கூடும். பார்ட்டி நிகழ்வுகளிலேயே அதிகளவானோர் இதனை பயன்படுத்துகின்றனர். அவ்வாறான இடங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான இடங்களில் பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுகின்றது'' என்கிறார்.

மேலும், ''அதிகளவில் தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இது தொடர்பான தரவுகளை சேகரிக்கும் திட்டமொன்று இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.'' என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண், பெண் உறவின் போது உடலுறவு செயற்பாடுகளை அதிக நேரம் செய்வதற்கு மற்றும் அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு போதைப்பொருள் பயன்பாடு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தினால் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி வெளியான அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக தன்பாலின சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த கெம்செக்ஸ் பாலியல் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு உட்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 43 வீதம் ஆண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் உடலுறவு செயற்பாடுகளில் ஈடுபடுவோர் என எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமான 'UNAIDS'-னால் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் இடையில் கெம்செக்ஸ் அதிகரித்துள்ளதுடன், ஏனைய தரப்பினரும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்'

 

தனது முன்னாள் காதலனால், தான் முகம் கொடுத்த அனுபவங்கள் குறித்து நயோமி, பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டார்.

''எனது முன்னாள் காதலன் வெளிநாட்டில் இருந்த ஒருவர். அவர் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு பழகியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவர் இலங்கைக்கு வந்தவுடன் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களை போன்று பழகினோம்''

''இந்த சந்தர்ப்பத்தில் எனது முன்னாள் காதலனை நேசித்த பெண் திடீரென வேறொரு திருமணத்தை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை அடுத்து மனஅழுத்தத்திற்கு உள்ளானமையினால் மீண்டும் ஐஸ் போதைப்பொருளை அவர் பயன்படுத்த முற்பட்டார்.''

''நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன். அவருடைய மனதை சரி செய்யும் அதேவேளை, மெதுவாக இதனை நிறுத்துமாறு மனதை மாற்றினேன். இவ்வாறு சிறிது காலம் செல்லும் போது எங்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டது''

''நான் குறிப்பாக போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை ஏற்கனவே பயன்படுத்தி இருந்தாலும், ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்து பார் என அவரே எனக்கு ஐஸ் போதைப்பொருளை ஒரு நாள் வழங்கினார். எனக்கிருந்த ஆர்வத்தினால் நான் அதனை முயற்சி செய்தேன்.'' என அவர் கூறுகின்றார்.

 
கெம்செக்ஸ், இலங்கை

Getty Images

'நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன்' என்கிறார் நயோமி

 

போதைப்பொருளின் விளைவுகள்

 

ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதன் பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது தனக்கு இதற்கு முன்னர் ஏற்படாத உணர்வொன்று ஏற்பட்டதாகவும், சோர்வின்றி இருந்ததாகவும், தான் அதற்கு பின்னர் தொடர்ச்சியாக இதை பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''நானும், காதலனும் சந்திக்கும் போது நாங்கள் பயன்படுத்த பழகியிருந்தோம். அவர் வீட்டிலிருந்து வரும் போது அதனை தேடி எடுத்துக்கொண்டு வருவார். நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் செக்ஸ் செய்யும் போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது.''

''எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செக்ஸ் செய்ய முடிந்ததுடன், பல தடவைகள் செக்ஸ் செய்ய முடிந்தது. அதனை எடுத்துக்கொண்டு செக்ஸ் செய்யும் போது ஒரு பலம் இருந்தது.''

''நாங்கள் ஒரு வருட காலத்திற்கு அண்மித்த காலம் ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு செக்ஸில் ஈடுபட்டோம். இறுதியாக நாங்கள் இருவரும் சந்திக்கும் வரை, இந்த போதைப்பொருள் இல்லாமல் முடியாதிருந்தது''

''சிறிது காலத்தில் பின்னர் போதைப்பொருளை எனது காதலனுக்கு கண்டுபிடிக்க முடியாது போகும் போது, எனக்கு அந்த தொடர்பு இருந்தது. இறுதியாக அவரை காப்பாற்ற வந்த நானே, அவருக்கு அதனை வாங்கிக் கொடுக்கும் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.''

''போதைப்பொருளை வாங்குவதற்காகவே என்னை அவர் தேடி வருகின்றார் என்பதை சிறிது காலம் செல்லும்போதே நான் உணர்ந்தேன், ஏனென்றால், இறுதியில் அதனை தேடிக்கொள்ள முடியாத இடத்தில் அவர் இருந்தார்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

 
கெம்செக்ஸ், இலங்கை

Getty Images

'நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் செக்ஸ் செய்யும் போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது' என்கிறார் நயோமி

 

'இதன் பாரதூரத்தை நானே உணர்ந்தேன்'

 

சிறிது காலம் செல்லும் போது தனது காதலனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவரும், தானும் மனதளவில் மாத்திரமன்றி, உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் நயோமி தெரிவிக்கின்றார்.

''நானும், எனது காதலனும் போதைப்பொருள் உட்கொள்வதனால் பாதிக்கப்பட்டுவதை சிறிது காலம் சென்றே உணர்ந்தேன். அதனை பயன்படுத்தி ஒரு நாள் செல்லும் வரை எதனையும் உட்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் மெலிவடைந்தோம்."

"என்ன நடந்தது என நண்பர்கள் எங்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள். போதைப்பொருள் பயன்படுத்தி ஒரு வருடம் ஆகும் போது எனது காதலன் செக்ஸ் செய்ய கூட சிரமப்பட்டார். அதன் பின்னர் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையான மருந்துகளை கூட அவர் எடுத்துக்கொண்டார். செக்ஸ் செய்ய முடியாத இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.'' என்கிறார் நயோமி.

தொடர்ந்து விவரித்த நயோமி, ''எனது காதலன் அவரது வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் அறையிலிருந்து வெளியில் வரவில்லை என நண்பர்கள் கூறும் போதே அதன் பாரதூரத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதன்பின்னர் நான் அது தொடர்பில் தேட ஆரம்பித்தேன். சில வேலைகளில் வானொலி கேட்பேன். இசைகளை கேட்க ஆரம்பித்தேன்.''

''சிறிது காலம் செல்லும்போது எனது காதலனின் மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில சந்தர்ப்பங்களில் 'மருத்துவரை நாடுவோம்' என கூறும் போது கூட இறுதி வரை அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் சண்டையிட்டார். சந்தேகப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூட கூறாமல் அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார். நான் மனோ வைத்திய ஆலோசனைகளை பெற்று தற்போது சிறியளவு வழமைக்கு திரும்பி வருகின்றேன்.'' எனக் கூறினார்.

கெம்செக்ஸ், இலங்கை

Getty Images

"இதைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் ஒரு நாளைக்கு எதுவும் சாப்பிட முடியாது. நீ குடிப்பவை மட்டுமே உன் உடலுக்குள் நுழையும்" 

 

'பாலியல் சார்ந்த நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம்'

 

''போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், பின்னர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதனூடாக ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்" என பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் நிமாலி ஜயசூரிய பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''இலங்கைக்குள் இந்த செயற்பாடுகள் இருக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் இருக்கின்றன. எனினும், எங்களுக்கு அது தொடர்பில் சரியாக தெரியாது. ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றல்ல, சிறந்த கல்வி அறிவை கொண்ட 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையோர் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது'' என அவர் குறிப்பிடுகின்றார்.

 

 

'எனது தொழிலுடன் இதனை பழகிக் கொண்டேன்'

 

தான் சில சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போது சில போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக 20 வயதான யோமால் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

''நான் பணியாற்றும் தொழிலுடன் பல சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பேன். அந்த நிகழ்ச்சிகளில் மக்களுடன் உணர்வை எடுக்க வேண்டும் என்றால், சில போதைப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நான் பயன்படுத்தினேன்''

''அந்த போதைப்பொருளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும் போது, அந்த உணர்வு உடலுக்கு தெரியும். சில சந்தர்ப்பங்களில் 7 - 8 மணித்தியாலங்கள் ஆனாலும் ஆடிப்பாடி இருக்க முடியும். அதன் பின்னர் எனது காதலியுடன் நான் செக்ஸ் செய்துள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட்டுள்ளேன்'' என்கிறார் யோமால்.

''எனினும், இந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய பின்னர், பல நாட்களுக்கு அதன் தாக்கம் எனக்கு இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நடுக்கம் ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் எனது அருகாமையிலுள்ள நண்பர்களை கூட நான் தேடுவேன். போதைப்பொருளின் தாக்கத்தினால் காரணமாகவே அவர்களை தேடுவேன். இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ள முடியாது" என யோமால் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

கெம்செக்ஸ், இலங்கை

Getty Images

"அந்த போதைப்பொருளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும் போது, அந்த உணர்வு உடலுக்கு தெரியும்"

 

'நான் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன்'

 

அதிக நேரம் உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் காரணமாக பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்ததாக 36 வயதான பெத்தும் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''நான் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இதனை எடுத்துக்கொண்டால், அதிக நேரம் செக்ஸ் செய்ய முடியும் என எனது நண்பர் ஒருவனே தெரிவித்தான்''

''எனது நண்பனுடன் ஒருநாள் நான் முயற்சி செய்தேன். அதன் பின்னர் ஸ்பா சென்றேன். அன்று அது உண்மை என்பதை புரிந்துக்கொண்டேன். அதன் பின்னர் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பார்ட்டிகளில் பயன்படுத்துவேன். சில போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தேன்" என்று கூறுகிறார்.

தற்போது அதனை நிறுத்துவதற்கு நான் பாரியளவில் முயற்சி செய்கின்றேன் என்று கூறிய அவர், "ஏனென்றால், நான் கதைக்கும் விதம் கூட மாறியுள்ளதை நான் உணர்கின்றேன். இதனை எடுத்துக்கொண்டால் தூக்கம் வராது. ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று எனது மனைவி கேட்கின்றார். என்னை அவர் மருத்துவரிடம் அழைத்து செல்ல முயற்சிக்கின்றார். நான் போக மாட்டேன்.'' என்கிறார்.

''நான் அவரிடம் சென்றால், நான் இவ்வாறானதை பயன்படுத்துவதே இதற்கான காரணம் என்பது சிறிது நேரத்தில் தெரியவரும. நான் இதிலிருந்து மீண்டு வர பாரியளவில் முயற்சி செய்கின்றேன்" என பெத்தும் கூறுகின்றார்.

 
கெம்செக்ஸ், இலங்கை

Getty Images

"எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து பெரும்பாலும் உள்ளது"

 

பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?

 

மூட நம்பிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கதைகள் காரணமாகவே உடலுறவை நீடிக்க போதைப்பொருள் பாவனைக்கு மக்கள் தூண்டப்படுகின்றார்கள் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மனோஜ் பெர்ணான்டோ பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவிக்கின்றார்.

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் போதைப்பொருளை பயன்படுத்துவது இலகுவான நிலைமை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

''வெற்று நம்பிக்கை காரணமாகவே போதைப்பொருளை பயன்படுத்த அதிகளவான மக்கள் முன்வருகின்றனர். பாலியல் சக்தி வலுவடையும் என எந்தவிதமான விஞ்ஞான ரீதியான உறுதிப்பாடுகளும் இல்லை. அனைத்து போதைப்பொருட்களுக்கும் இந்த கதையே இருக்கின்றது. ஹெராயின், ஐஸ் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையான போது மனிதனிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. பாலியல் சக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி இருக்கும் போன்ற கதைகள் சில இருக்கின்றன.''

''சிலர் மனதளவில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக போதைப்பொருட்களை எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு பிம்பத்தை இந்த போதைப்பொருட்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். திரைப்படங்களில் பார்க்கின்ற விடயங்கள் போன்றே போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் பல்வேறு நடைமுறைகளை முன்னெடுக்கின்றனர். நண்பர்கள் ஏற்படுத்துகின்ற விடயங்கள் காரணமாக பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்.'' என்கிறார் பெர்ணான்டோ.

"மருந்துகளுக்கு பாலியல் செயல்முறையை நீட்டிக்கும் திறன் இல்லை. இந்த மாதிரியான போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் நீண்ட நேரமாக உடலுறவு கொள்கிறார் என்று நினைக்கிறார். அப்படி நடந்தாலும், தாங்கள் அந்தச் செயலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவிட்டதாக மனதளவில் நினைக்கிறார்கள்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

"மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சிலர் தூக்கம் மற்றும் உயிரற்றதாக உணர்கிறார்கள். இந்த வகையான மருந்தை உட்கொள்பவர்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாற நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இந்த உயிர் சக்தியை அடைய எடுக்கும் காலப்போக்கில், அவர்கள் உடலுறவில் ஈடுபட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்."

ஆனால் உண்மை என்னவென்றால், ஐஸ் அல்லது ஹெராயின் அல்லது பிற போதைப்பொருள்களால் பாலுறவு செயல்முறையை நீண்டதாக ஆக்க முடியாது' என பெர்னாண்டோ கூறினார்.

(இங்கு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

 

https://www.bbc.com/tamil/articles/ckg0p993er9o?at_campaign=ws_whatsapp

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பார்ட்டி நிகழ்வுகளிலேயே அதிகளவானோர் இதனை பயன்படுத்துகின்றனர். அவ்வாறான இடங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான இடங்களில் பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுகின்றது'' என்கிறார்.

போதைப்பொருளின் விளைவுகள்

'இதன் பாரதூரத்தை நானே உணர்ந்தேன்'

 

சிறிது காலம் செல்லும் போது தனது காதலனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவரும், தானும் மனதளவில் மாத்திரமன்றி, உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் நயோமி தெரிவிக்கின்றார்.

''நானும், எனது காதலனும் போதைப்பொருள் உட்கொள்வதனால் பாதிக்கப்பட்டுவதை சிறிது காலம் சென்றே உணர்ந்தேன். அதனை பயன்படுத்தி ஒரு நாள் செல்லும் வரை எதனையும் உட்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் மெலிவடைந்தோம்."

"என்ன நடந்தது என நண்பர்கள் எங்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள். போதைப்பொருள் பயன்படுத்தி ஒரு வருடம் ஆகும் போது எனது காதலன் செக்ஸ் செய்ய கூட சிரமப்பட்டார். அதன் பின்னர் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையான மருந்துகளை கூட அவர் எடுத்துக்கொண்டார். செக்ஸ் செய்ய முடியாத இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.'' என்கிறார் நயோமி.

 

''சிறிது காலம் செல்லும்போது எனது காதலனின் மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில சந்தர்ப்பங்களில் 'மருத்துவரை நாடுவோம்' என கூறும் போது கூட இறுதி வரை அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் சண்டையிட்டார். சந்தேகப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூட கூறாமல் அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார். நான் மனோ வைத்திய ஆலோசனைகளை பெற்று தற்போது சிறியளவு வழமைக்கு திரும்பி வருகின்றேன்.'' எனக் கூறினார்.

'பாலியல் சார்ந்த நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம்'

''போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், பின்னர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதனூடாக ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்" என பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் நிமாலி ஜயசூரிய பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''இலங்கைக்குள் இந்த செயற்பாடுகள் இருக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் இருக்கின்றன. எனினும், எங்களுக்கு அது தொடர்பில் சரியாக தெரியாது. ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றல்ல, சிறந்த கல்வி அறிவை கொண்ட 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையோர் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது'' என அவர் குறிப்பிடுகின்றார்.

 

''எனினும், இந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய பின்னர், பல நாட்களுக்கு அதன் தாக்கம் எனக்கு இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நடுக்கம் ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் எனது அருகாமையிலுள்ள நண்பர்களை கூட நான் தேடுவேன். போதைப்பொருளின் தாக்கத்தினால் காரணமாகவே அவர்களை தேடுவேன். இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ள முடியாது" என யோமால் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

'நான் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன்'

தற்போது அதனை நிறுத்துவதற்கு நான் பாரியளவில் முயற்சி செய்கின்றேன் என்று கூறிய அவர், "ஏனென்றால், நான் கதைக்கும் விதம் கூட மாறியுள்ளதை நான் உணர்கின்றேன். இதனை எடுத்துக்கொண்டால் தூக்கம் வராது. ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று எனது மனைவி கேட்கின்றார். என்னை அவர் மருத்துவரிடம் அழைத்து செல்ல முயற்சிக்கின்றார். நான் போக மாட்டேன்.'' என்கிறார்.

 

''நான் அவரிடம் சென்றால், நான் இவ்வாறானதை பயன்படுத்துவதே இதற்கான காரணம் என்பது சிறிது நேரத்தில் தெரியவரும. நான் இதிலிருந்து மீண்டு வர பாரியளவில் முயற்சி செய்கின்றேன்" என பெத்தும் கூறுகின்றார்.

பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் போதைப்பொருளை பயன்படுத்துவது இலகுவான நிலைமை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

''வெற்று நம்பிக்கை காரணமாகவே போதைப்பொருளை பயன்படுத்த அதிகளவான மக்கள் முன்வருகின்றனர். பாலியல் சக்தி வலுவடையும் என எந்தவிதமான விஞ்ஞான ரீதியான உறுதிப்பாடுகளும் இல்லை. அனைத்து போதைப்பொருட்களுக்கும் இந்த கதையே இருக்கின்றது. ஹெராயின், ஐஸ் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையான போது மனிதனிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. பாலியல் சக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி இருக்கும் போன்ற கதைகள் சில இருக்கின்றன.''

 

''சிலர் மனதளவில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக போதைப்பொருட்களை எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு பிம்பத்தை இந்த போதைப்பொருட்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். திரைப்படங்களில் பார்க்கின்ற விடயங்கள் போன்றே போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் பல்வேறு நடைமுறைகளை முன்னெடுக்கின்றனர். நண்பர்கள் ஏற்படுத்துகின்ற விடயங்கள் காரணமாக பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்.'' என்கிறார் பெர்ணான்டோ.

 

"மருந்துகளுக்கு பாலியல் செயல்முறையை நீட்டிக்கும் திறன் இல்லை. இந்த மாதிரியான போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் நீண்ட நேரமாக உடலுறவு கொள்கிறார் என்று நினைக்கிறார். அப்படி நடந்தாலும், தாங்கள் அந்தச் செயலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவிட்டதாக மனதளவில் நினைக்கிறார்கள்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

 

"மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சிலர் தூக்கம் மற்றும் உயிரற்றதாக உணர்கிறார்கள். இந்த வகையான மருந்தை உட்கொள்பவர்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாற நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இந்த உயிர் சக்தியை அடைய எடுக்கும் காலப்போக்கில், அவர்கள் உடலுறவில் ஈடுபட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்."

 

ஆனால் உண்மை என்னவென்றால், ஐஸ் அல்லது ஹெராயின் அல்லது பிற போதைப்பொருள்களால் பாலுறவு செயல்முறையை நீண்டதாக ஆக்க முடியாது' என பெர்னாண்டோ கூறினார்.

நமது மண்ணிலும் வெளித்தெரியாமல் நடக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.