Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: மத்திய அரசுக்கு எதிராக காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 FEB, 2025 | 10:59 AM

image

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.

இலங்கை அரசின் தொடர் துப்பாக்கிச்சூடு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் பெண்கள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள்   காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணி ரயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய அரசுக்கு எதிராக காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

rameshwaram.jpg?resize=700%2C375&ssl=1

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையிர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால், கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைக்கால் மீனவர்கள் பாரிய போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் செயற்பாடுகள், மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய இந்திய மத்திய அரசாங்கமான பா.ஜ.க. அரசாங்கத்தை கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஆதரவினை வழங்கும்பொறுட்டு, அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும், காரைக்கால் ரயில் நிலையத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில் முன்பு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1421951

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.