Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 FEB, 2025 | 05:27 PM

image

மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் விருப்பமின்றி இந்த கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான  நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாக சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். 

மன்னார் தீவுப் பகுதி என்பது மிகவும் குறுகிய தாழ்வான நிலப்பகுதியாகும். இது, கடல் நீர் மட்டத்திலிருந்து தாழ்வான நிலப்பகுதி என்பதால் மழைக்காலத்தில் நீர் வழிந்தோட முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்தும் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தை தாங்குதிறன் கொண்டதாக தீவுப்பகுதியின் தரைத்தோற்ற அமைவிடம் இல்லை. அதனால்தான் மன்னார் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டடங்களை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்குவதில்லை. ஆகவே, இப்பகுதியில் கனியமணல் அகழ்வதென்பது மிகவும் பாரதூரமான விளைவுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையின் கீழ் 23 அரச திணைக்களங்கள் மன்னார் தீவுப் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை வழங்குவதற்குரிய ஏற்பாட்டுக்காக முன்னர் இரண்டு முறை சென்றபோதும் மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாக கள ஆய்வு மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் (17) மன்னார் நீதிமன்றத்தில் போராட்டத்துக்கு எதிராக தடை உத்தரவு பெற்றுக்கொண்டு, நாளை (19) அப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்த மக்களுடைய விருப்பம் இல்லாமல் தனியார் காணிக்குள் அத்துமீறி உட்புகுந்து இந்த ஆய்வை மேற்கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு கனியமணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதென்பது அந்த மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.

எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்களுடைய விருப்பமின்றி செயற்படுத்த முடியாது. பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் ஆபத்தான  நிலைமைகள் தோன்றலாம். சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

ஆகவே, நாளைய கள ஆய்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையும் ஏனைய திணைக்களங்களும் உடனடியாக நிறுத்தவேண்டும் என இந்த உயரிய சபையின் ஊடாக கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக அதிகாரிகள் கள விஜயம் - எதிர்த்த மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட திணைக்களத்தினர்

19 FEB, 2025 | 05:34 PM

image

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கள ஆய்வு செய்து, கனிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை வழங்க சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் இன்று (19) அப்பகுதியில் கள விஜயம் செய்தபோதும்  மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு தடவை கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்றைய தினம் மூன்றாவது தடவையாக,  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிக்கு கள விஜயம் செய்தனர். 

DSC_0516.JPG

மன்னார் தீவு பகுதியில் கனிய மணல் அகழ்வினை முன்னெடுப்பதற்கான ஆய்வுப் பணிகளில் முன்னதாக இரு தடவைகள் ஈடுபட முற்பட்டும் முடியாமற்போனதைத் தொடர்ந்து, மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக மூன்றாவது முறையும் திணைக்களத்தினரின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. 

DSC_0536.JPG

இந்நிலையில் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்களும் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு கட்டங்கட்டமாக வருகை தந்தன.

இதன்போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டலில் சுமார் 23 திணைக்களங்களைச் சேர்ந்த குழுவினர் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர்.

அவ்வேளை, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் அப்பகுதிக்கு கள விஜயம் செய்த அதிகாரிகளின் வருகைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

எனினும், மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கனிய மணல் பரிசோதனைக்கான கள விஜய நடவடிக்கைகள் தொடர்ந்தபோது மக்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

DSC_0479.JPG

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இந்த கனிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தனர். 

அதன் அடிப்படையில் இவ்விடயம் உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அதன் பின்னர், உடனடியாக இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பிரவேசித்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உட்பட கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

DSC_0524.JPG

DSC_0535.JPG

DSC_0501.JPG

DSC_0494.JPG

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக அதிகாரிகள் கள விஜயம் - எதிர்த்த மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட திணைக்களத்தினர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.