Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

எழுத்தாளர்: சபா கிரிஸ்

தமிழ் மக்களுக்காக உயிர்துறந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த "வில்லியம் ஐயே" உம், போராளியாக மாறி வீரச்சாவடைந்த அவரது மகனது கதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் டிசம்பர் 04, 1984ஆம் உயிர்த்தராசன் குளத்துச் சந்திக்கு அருகில் நடைபெற்ற படுகொலையில், படையினரால் 200+ பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய இன்னுமோர் விடயத்தைக் கட்டாயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். மேற்சொன்ன சம்பவத்தில் ஒரு பேருந்தில் வந்தவர்களும் சுடப்பட்டார்கள்.

அப்பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, அடையாள அட்டை பார்க்கப்போவதாக கூறி, வரிசையில் நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்பேருந்தில் மட்டும் ஏறக்குறைய ஐம்பது(50) பேரளவில் இருந்திருக்கின்றார்கள்.

பேருந்திலிருந்து பயணிகளை இறக்கி அவர்களைச் அழித்தொழிக்கப் போகின்றார்கள் என்பதைத்தன் மதுநுட்பத்தால் புரிந்துகொண்ட பேருந்து நடத்துனரான சிங்கள இனத்தைச் சேர்ந்த ‘வில்லியம் ஐயே(ஐயா)’, பயணிகளை இறக்க அனுமதிக்காது படையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வில்லியம் ஐயாவை முதலில் பலவந்தமாக இழுத்து வெளியே வைத்துக்கொண்டு, எல்லாப் பயணிகளையும் இறக்கிவரிசையில் வைத்துச் சுட்டபோது இந்த ஓட்டுனரையும் கொன்றொழித்திருக்கின்றார்கள். அப்பேருந்தில் பயணம்செய்த திருமணமாகி மூன்று நாள்களான எங்கள் கணித ஆசிரியர், அச்சூட்டுச் சம்பவத்தில் தப்பிப்பிளைத்தவர். அவரே இச்சம்பவத்தை கண்ணீரோடு எங்களுக்கு ஒருமுறை விரித்தார்.

அன்றைய காலத்திலேயே எம் மக்களுக்காக உயிர்கொடுத்த உறவு வில்லியம் ஐயே. சகோதர மொழிபேசும் சகோதர இனத்தவர்.

மறந்துபோகாது இன்றும் பலருடைய நெஞ்சங்களில் இருப்பவர். பூசையறையில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர்.

மடுறோட்டில்தான் வாழ்ந்தவர். அடிக்கடி மடுவுக்குச் செல்கின்றபோது இவரைப் பல தடவைகளில் பேருந்தில் கண்டிருக்கின்றேன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர், என் கண்களுக்குள் இன்றும் நிழலாடுகின்றார். எல்லா மக்களையும் அறிந்திருந்தார். இயல்பாகப் பழகுகின்ற பண்பான மனிதர். பெருத்த உருவம் உடையவர், சிங்கள உச்சரிப்பில் தமிழைத் தமிழர்களைவிட நன்றாகப் பேசும் திறமையானவர், வறுமைப்பட்டவர்கள் பேருந்தில் ஏறுகின்றபோது அரசினுடைய வர்த்தமானி அறிவிப்பு இல்லாமலேயே அக்காலத்திலேயே சிறப்புச் சலுகை வழங்கியவர், மாணவர்களை அன்றைய காலத்திலேயே இலவசமாக ஏற்றிப் பறித்த பாரி அவர்! தன் பொறுப்பில் உள்ள மக்களுக்காக தன்னுயிரைப் பொருட்படுத்தாத தியாகி அவர்.

அன்று அவர் தாராளமாகத் தப்பித்திருக்கலாம். அவரின் உயிருக்கு எந்த ஊறும் நிகழ்ந்திருக்காது! ஆனால், தன் மக்களுக்கா, நீதிக்காக நின்றதினால் அவர் தன் இன்னுயிரை எமக்காய் இழந்தார். அவ்வாறே அவருடைய மகனும் தமிழீழ விடுதலைப்போரில் புலியாகி நின்று வீரச்சாவடைந்தார்.

கப்டன் பிரவின்ராஜ் (கேடி ஜெயசேன ஆரியவன்ச, 24.02.1993) மடு வீதி, மன்னார். 1993 ஆம் ஆண்டு மன்னார் நானாட்டான் படை முகாமிற்கும் கட்டைக் காட்டிற்கும் இடையில் அமைந்திருந்த தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்தார். இவரது பெயரில் ஓர் எழுச்சிக் குடியிருப்பு, "கப்டன் பிரவின்ராஜ் எழுச்சிக் குடியிருப்பு", மன்னாரில் 22/08/1993 அன்று மாவட்டக் கட்டளையாளர் திரு கதிர் மற்றும் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு கணேஸ் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தையே ஏற்றிவைத்தார் (24/8/1993 ஈழநாதம், பக்-4).

இப்படிக் கதைகள் கனக்கவே இருக்கின்றன. கதைக்க வெளிக்கிட்டால் இதயம் கனத்துப்போகின்றது…! இருப்பினும் அவை எழுதப்பட வேண்டும். வில்லியம் ஐயா போன்ற மனிதாபிமானிகள், தியாகிகள், உத்தமர்கள், எங்கும் இருக்கின்றார்கள். அவர்கள், இனங்களை மதங்களை நிறங்களை மொழிகளை, மனித வரையறைகளைக் கடந்து — வாழ்ந்தவர்கள் — வாழ்பவர்கள் — வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

main-qimg-86f79b05a029c16650662c1e5dd806

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.