Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-389.jpg?resize=750%2C375&ssl

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானப் படையணியை மாற்றியமைக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொது நிறுவன அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் சில அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1423061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

961bce57-532b-42af-840c-1f21fa5a9cca.jpg

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல்!

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பொது நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தை விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், ஜே.வி.பி உறுப்பினர்களின் சில அறிக்கைகள்இ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1423156

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.