Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 Feb, 2025 | 05:36 PM

image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (26) குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.கஜதீபன், உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.

குறித்த கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பிலான முடிவு கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சார்பில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சங்குச் சின்னத்தில் ஈ.பி.டி.பி.யும் இணையலாம்; சுரேஷ் அழைப்பு

2078437957.JPG

சங்கு சின்னத்தின் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சித் தேர்தலை வடக்கு, கிழக்கில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காகப் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். பல கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்குத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளன.

இந்தக் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணியாக அல்லாமல், தமிழ் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கூட்டணியாகவே அமைய வேண்டும். இன்று (நேற்று) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் சமத்துவக் கட்சி, சனநாயக தமிழரசு கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி என்பன கலந்து கொண்டன – என்றார். 

https://newuthayan.com/article/சங்குச்_சின்னத்தில்_ஈ.பி.டி.பி.யும்_இணையலாம்;_சுரேஷ்_அழைப்பு

On 26/2/2025 at 08:42, பிழம்பு said:

26 Feb, 2025 | 05:36 PM

image

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.கஜதீபன், உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.

இதில் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ,நா.சிறீகாந்தா ஆகியோர் இந்திய கொலை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்து, தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து, நூற்றுக் கணக்கானோரை காணாமல் செய்து, புலிகளின் போராளிகளை கொலை செய்த விடயங்களில் நேரடியாக பங்குகொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள்.

இன்று வரைக்கும் தம் ஈனச் செயல்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்காத கொலைகாரர்கள்.

அத்துடன் மு.சந்திரகுமார் முன்னால் , பல போராளிகளை காட்டிக் கொடுத்து, கொன்று, தீவகத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகக் காரணமான ஒட்டுக் குழு ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். அத்துடன் அக் கட்சியின் சித்திரவதைகளுக்கு பொறுப்பான தினமுரசு ஆசிரியர் அற்புதனின் (அப்பிளின்) சகாவும் ஆவார்.

இவர்களின் கூட்டு என்பது தமிழ் மக்களுக்கான பெரும் சாபம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.