Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

arrest-1.jpg?resize=670%2C375&ssl=1

பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது.

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இக் கைது நடவடிக்கை  இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இவ் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக மூன்று பெண்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த விருந்தில் பங்கேற்றிருந்த 12 இளம் பெண்களும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1426143

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-301.jpg?resize=750%2C375&ssl

விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது!

பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருந்துபசார நிகழ்வானது சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஹோட்டலில் இன்ஸ்டாகிராம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் போபை்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பயன்படுத்திக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர்.

அதேநேம், போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், விருந்து இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 03 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள், கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1426203

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.