Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 06 APR, 2025 | 11:48 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை  பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

us_pro.jpg

டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இவை  என கார்டியன் தெரிவித்துள்ளது.

us__pro1.png

தலையிடவேண்டாம் என்ற இந்த ஆர்ப்பாட்டங்கள்  அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கார்டியன் 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் கலந்துகொண்டன என தெரிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது,சமூக பாதுகாப்பு நிர்வாக அலுவலகங்களை மூடுவது,குடியேற்றவாசிகளை நாடுகடத்துவது,திருநங்கைகளிற்கான பாதுகாப்பை அகற்றுவது,சுகாதார பாதுகாப்பு திட்டங்களை குறைப்பதுபோன்ற டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

us_pro_3.jpg

வோசிங்டனிலும் புளோரிடாவிலும் சுமார் 500,00 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு விதமான பதாகைகளையும், உக்ரைனின் கொடியையும் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ள கார்டியன், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஸ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே உக்ரைன் கொடிகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ளது.

தாங்களுடைய இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏனையவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உந்துதலை வெளிப்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

us_pro4.jpg

மக்களை எழுச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என 63 வயது டயனே கொலிபிராத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தன்னை எதிர்ப்பவர்களிற்கு எதிராக ஆக்ரோசமாகவும்,வன்முறைபோக்குடனும் நடந்துகொண்டுள்ளதால் பலர் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட தயங்குகின்றனர் என தெரிவித்துள்ள டயனே கொலிபிராத் நாங்கள் டிரம்பிற்கு எதிராக குரல்கொடுக்கின்றோம் என்பதை மௌனமாக உள்ள அமெரிக்கர்கள் பார்க்கவேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

எங்கள் துணிச்சலை அவர்கள் பார்க்கும்போது டிரம்பை எதிர்ப்பதற்கு அவர்களும் துணிவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

us_pro5.jpg

அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக  ஆர்ப்பாட்டங்களை  ஏற்பாடு செய்த மூவ்ஒன் அமைப்பினை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் முன்னால் மண்டியிட தயாராகவுள்ள மக்களிற்கும் ஸ்தாபனங்களிற்கும் அதனை எதிர்ப்பதற்கான மக்கள் இயக்கம் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

us_pro_6.jpg

நமது அரசியல் தலைவர்களிற்கு டிரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான துணிச்சல் உள்ளது என்றால் அவர்கள் அதற்கு தயாராகயிருந்தால்,நாங்கள் அவர்களின் பின்னால் நிற்போம்,என தெரிவித்துள்ள அவர் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தினை பாதுகாக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/211298

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

20 APR, 2025 | 09:58 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

எல்சல்வடோருக்கு அமெரிக்க அரசாங்கம் தவறாக நாடு கடத்திய கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை திருப்பிஅழைக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

trump_protest_1.jpg

அமெரிக்காவில் அரசாங்கவேலைகளை குறைப்பதற்கான, ஏனைய நலன்புரி சேவைகளிற்கான நிதியை குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து தமது விரக்தியை ஆர்ப்பாட்டக்காரர்கள், வெளியிட்டுள்ளனர்.

கில்மெர் அப்ரெகோ கார்சியா என்ற நபரை டிரம்ப் நிர்வாகம் தவறுதலாக எல்சல்வடோரிற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள ஒருவர் அவரை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவருவதற்காக எல்சல்வடோர் மீது டிரம்பினால் அழுத்தங்களை கொடுக்க முடியும் என  தெரிவித்துள்ளார்.

பல ஆர்ப்பாட்டக்காராகள் மன்னர்கள் தேவையில்லை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் சுலோக அட்டைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வாசகம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவில் புரட்சி ஆரம்பித்த 250 வருடத்தின் ஆரம்பத்தை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு இது மிகவும் ஆபத்தான தருணம் என தோமஸ்பாஸ்போர்ட் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.

trump_protest_2.jpg

இந்த நாட்டின் தோற்றம் பற்றியும் நாம் சிலவேளை சுதந்திரத்திற்காக போரிடவேண்டியிருக்கும் என்பது குறித்தும் அடுத்த தலைமுறை அறிந்திருக்கவேண்டும் என அவர் பொஸ்டனில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 50501 என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, அதாவது 50 ஆர்ப்பாட்டங்கள் 50 மாநிலங்கள் ஒரே நோக்கம் என்பதே இதன் அர்த்தம்.

https://www.virakesari.lk/article/212414

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.