Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 APR, 2025 | 02:08 PM

image

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மொஹமட் ருஷ்டி என்ற இளைஞன் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 11 ஆம் திகதி அவர் எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பில் இல்லை என கூறப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு முஸ்லிம் இளைஞரை 90 நாட்கள் சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்தியமை 'பெரிய தலைப்பாக' மாறியதால் மன்னாரில் நடந்த தேர்தல்  பிரச்சாரத்தில் கேலிக்குள்ளான பிரதமர் அந்த சட்டத்தை நீக்க 'நீக்க' ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

மார்ச் 25 அன்று கொழும்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், மொஹமட் ருஷ்டி என்ற இளைஞரை தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏப்ரல் 11 அன்று, அந்த இளைஞன் எந்த பயங்கரவாத அமைப்புடனும் தொடர்புபட்டிருக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

ஏப்ரல் 12 அன்று மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பயங்கரவாதச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மக்கள் எந்த வகையிலும் துன்பப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், ஒரு அரசாங்கம் என்ற வகையில், நெருக்கடிகளை ஒருபோதும் இனவெறி மனப்பான்மையுடன் பார்க்க மாட்டோம் எனவும் பிரதமர் கூறியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.

காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து குப்பைத் தொட்டியில் ஸ்டிக்கரை ஒட்டிய ஒரு இளைஞனை சிறையில் அடைக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியமைக்காக அரசாங்கத்தை விமர்சித்தமையானது, அரசாங்கம் தொடர்பில் "தேடுவதற்கு எந்தத் தவறும் இல்லை" என்பதாலேயே என்பது பிரதமரின் வாதம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 11ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நீதி அமைச்சில் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு ஏப்ரல் 13ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலம் உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வரைபாக இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை அது மீறக்கூடாது எனவும் கடந்த 11 ஆம் திகதி நீதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் வலியுறுத்தினார்.

"முன்னைய அரசாங்கங்கள் இந்தத் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை, மேலும் இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தச் சட்டத்தை இரத்து செய்வதற்கான பொருத்தமான விடயங்களை அடைய வேண்டும் எனவும் அமைச்சர் குழுவின் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்," என அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெற்றதாக அரசாங்கம் பெப்ரவரியில் அறிவித்தது.

"சட்ட வரைஞர்களால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, அந்த வரைவு மசோதாவை மேலும் மேம்படுத்த பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவை நியமிக்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது" என அமைச்சரவை தீர்மானம் குறிப்பிடுகிறது.

மே மாத ஆரம்பத்தில் பொதுமக்களின் கருத்துகளையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெறவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களையும் பெறவும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் குழுவிற்கு அறிவுறுத்தியதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடக்குமுறை சூழ்நிலையில் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 7 ஆம் திகதி நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டபோது, அவர் தனது தொழிலை இழந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியிருந்தார்.

https://www.virakesari.lk/article/212378

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.