Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரி.எம்.வி.பி. யின் செயலாளர் திருமதி. பத்மினி சிவகுமார் தப்பி ஓட்டம்!

Featured Replies

ரி.எம்.வி.பி. யின் செயலாளர் திருமதி. பத்மினி சிவகுமார் தப்பி ஓட்டம்!

ஜ சனிக்கிழமைஇ 27 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ

ரி.எம்.வி.பி. செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்த திருமதி. பத்மினி சிவகுமார் என்பவர் இலங்கையை விட்டு நேற்றைய முன்தினம் செவ்வாய்கிழமை தப்பி ஓடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு கருணாவால் அரசியல் செயலாளராக அறிவிக்கப்பட்டவர். இவரும் இவரது கணவரான மகேஸ்வரன் என்று அழைக்கப்படும் சிவகுமார் மற்றும் பத்மினி சிவகுமார் அவர்களின் தயார் திருமதி. சத்தியமூர்த்தியும் மேலும் இவர்களுடன் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரும் சேர்ந்து நேற்றைய முன்தினம் பிற்பகல் முதல் கொழும்பிலிருந்து காணமல் போய்விட்டனர். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பத்மினி சிவகுமார் அவர்கள் பிள்ளையானை ஆதரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தலைமறைவாயிருக்கும் கருணா, பத்மினி சிவகுமார் அவர்களுக்கு தொலைபேசியில் ஒரு உத்தரவு வழங்கியுள்ளாராம் அதில், இவரது செயலாளர் பணியை ராஜினாமா செய்யும்படியும் அந்தப் பதவியை லண்டனில் வசித்துவரும் சுப்பையா கிருஸ்ணப்பிள்ளைக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டதாக நம்பகரமான தகவல்கிடைத்துள்ளது. அதைப்பற்றி திருமதி பத்மினி சிவகுமார் அவர்கள் கருணாவிடம். யாழ்ப்பாணத்தானை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொன்ன நீங்களா இந்த யாழ்பாணத்தானை கட்சியின் செயலாளரா நியமிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கிருஸ்ணப்பிள்ளையிடம் தங்களது இயக்கத்தின் பணம் பல கோடி ரூபாய் மாட்டியுள்ளதாகவும் அவருக்கு ஏதாவது முக்கிய பதவி வழங்கப்பட்டால் மட்டுமே அவரிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறமுடியும். ஆகவே, நீங்கள் பதவி விலகுவது நல்லது என்று கருணா கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த திருமதி. பத்மினி சிவகுமார் அவர்கள் உங்களுக்கு பணம்தான் முக்கியம் என்றால் நான் பதவி விலகுகிறேன் என்று சொல்லி உடனே தொலை தொடர்பை துண்டித்துக் கொண்டாராம். இதன் பின்னர்தான் (23-10-2007) கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் முதல் தனது குடும்ப சகிதமாக அருகில் உள்ள நாடு ஒன்றிற்கு சென்று தனது ரி.எம்.வி.பி. வாழ்க்கையை முடித்துக்கொண்டார். குறிப்பு:- (கடந்வொரு ஆறு மாதங்களாக சுப்பையா கிருஸ்ணப்பிள்ளைக்கும் கருணாவுக்கும் இடையில் ஒரு பதவிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

அந்தப் பேச்சுவார்த்தையில், கிழக்கு மாகாணத்துக்கு கவர்னர் நியமிக்கப்படுவதாக இருந்தால் அந்தப் பதவிக்கு தன்னை நியமிக்க மகிந்த ராஜபக்சேயிடம் முன்மொழியும்படி கருணாவுக்கு கிருஸ்ணப்பிள்ளை நிர்ப்பந்தம் கொடுத்து வந்திருந்தார். ஆனால், கருணாவோ, மகிந்த ராஜபக்சேவுக்கோ அல்லது அவரது தம்பியான கோத்தபாய ராஜபக்சேவுக்கோ இவரது பெயரை முன்மொழியவில்லை. இறுதியாக கருணா மூன்றாவது தடவையாக கோத்தபாய ராஜபக்சேவை சந்தித்திருந்த கருணா அவரிடத்தில் கிழக்கு மாகாணத்திற்கான கவர்னரை நியமிக்கும்பொழுது, தனது பழைய நண்பரும். யு.என்.பி. எம்.பி.யான மௌலானாவை நியமிக்கும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் செய்தி சுப்பையா கிருஸ்ணப்பிள்ளைக்கு தெரியவந்ததும். கருணாவின் பெரும் பணத்தை லண்டன் பகுதியில் முடக்கிவிட்டார். இப்பொழுது அந்தப் பணத்தை மீட்பதற்குத்தான் திருமதி. பத்மினி சிவகுமார் அவர்களை பலிகொடுத்துள்ளார் கருணா.

நன்றி

நிதர்சனம்

நிச்சயமாக இச்செய்திகள் பார்ப்பதற்கு முக்கியமானவையல்லத்தான்!! இது மட்டுமல்ல ...

1) கருணாவின் குடும்பம் லண்டனில் குடியேற்றம்!

2) கருணா மூலம் சுருட்டிய நிதியில் டென்மார்க்கில் ஓர் குடும்பம் ஆடம்பர வாழ்வு!!

3) கருணாவினால் சுருட்டிய நிதியில் பாரிஸில் கூலியொன்று பல வீடுகளை வாங்கியுள்ளமை!!!

4) லண்டனிலுள்ள கிருஸ்ணன் எனும் கூலி, கருணாவிடமிருந்து உருவிய பணத்தில் பல முதலீடுகள்!!!

5) .....

.... இவைகளும் முக்கியமானவையல்லத்தான்!!!!! ஆனால் .......எங்கிருந்து, யார் பணத்தில் இந்த ஆடம்பர வாழ்வுகளும், முதலீடுகளும்?????????? எல்லாம் எம்மவர்களை கடத்தியும், படுகொலை செய்தும், கொள்ளை அடித்ததிலிருந்து பெறப்பட்டவைகளே இவைகள்!!!!

kp1ys2.png

வடிமுட்டாள் கருணாவின் அட்டகாசங்கள் மட்டு/அம்பாறையில் ஆரம்பமாகியபோது, அதை தூண்டி விட்டு, அவற்றின் மூலகாரணியாக இருந்த இராஜன் சத்தியமூர்த்தியின் மகள் இன்று ஓடியுள்ளாரென்றால், அவளோடு சேர்ந்து எம்மவர் பணமும் பாரியளவில் சென்றிருக்கிறது!!!! இவை எம்மவர்களின் இரத்தங்களைப் புளிந்து பெறப்பட்டவைகள்!!!

இவர்களை நாம் அடையாளம் காட்டாமல் விட்டோமாயின், நாளை ஓர் பத்மினியல்ல, ஓர் குமாரதுரை குடும்பமல்ல, ஓர் கிருஸ்ணன் மட்டுமல்ல .... ஒராயிரம் கூலிகள் சுகபோக வாழ்வுக்காக .... எம்மவர் இரத்தங்களில் .... புலத்தில் குளிர் காயுங்கள்!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.