Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 MAY, 2025 | 07:25 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜம்மு - காஷ்மீரில்  சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இந்த பதற்றங்களின் எதிரொலியாக இலங்கையிலும் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர கருத்து மோதல்கள் மோலோங்கியுள்ளன. இலங்கையை பொறுத்த வரையில் இரு நாடுகளுடனுமே சிறந்த உறவுகளை கொண்டுள்ளது.

ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களும் ஏற்பட கூடிய  ஆயுத ரீதியிலான மோதல்களும், இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளாக உள்ளது.

மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் கடல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையிலிருந்து தான் இந்தியா இலங்கையுடன் புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளது.

ஆனால் சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய போர் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கு இந்த ஒப்பந்தம் தடையாக அமையலாம் என்பது பலரின் நிலைப்பாடாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்களை செய்து, மிக குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல்களின் எதிரொலியாக தற்போது இலங்கையிலும் இரு நாடுகளுக்கு இராஜதந்திர சொற்சமர் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இது குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமான ஒரு விடயமல்ல என்றும், அங்கு வந்த அப்பாவி மக்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் எங்கே வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என்பது கூடத் தெரியாது. இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கும் சக்திகள், சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பற்றியோ அல்லது விதிகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களையோ மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு பொறுப்புள்ள நாட்டையும் போலவே பாகிஸ்தானும் ஏற்கனவே இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணையை கோரியுள்ள நிலையில், இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்  மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலிலேயே இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொண்டா பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஜயத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் - இலங்கை படைகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கூட்டு பயிற்சி நடவடிக்கை இந்தியாவின் அழுத்தத்தில் நிறுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/213610

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.