Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

07 MAY, 2025 | 12:07 PM

image

ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தினை அபகரிக்கும் அரசாஙகத்தின் முயற்சிக்கு எதிராக மே 29 ம் திகதி இடம்பெறவுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது உடைந்துவிட்டது என சொல்கின்ற செய்திகளை எல்லாம் கடந்த காலத்திலே நான் மறுத்துவந்திருக்கின்றேன்.

நாடாளுமன்றத்தின் இறுதிவரைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இயங்கினோம் நாடாளுமன்ற தேர்தலிலே அவர்கள் தனித்து போட்டியிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலிலே தனித்து போட்டியிடக்கூடாதுஇஇந்த தேர்தலில்தான் தனித்து போட்டியிடவேண்டும்.

இந்த வேளையிலே நாங்கள் சொன்னதுதான் சரி அவர்கள் சொன்னது பிழை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லைஇ நாங்கள் சேர்ந்து இயங்கவேண்டிய காலம்.நேரம்.

மிகவும் விசேடமாகஇஎங்களுடைய நிலங்களிலே 6000 ஏக்கர் பறிபோகின்ற சூழ்நிலை எழுந்திருக்கின்றது.

நான் ஏற்கனவே அதற்கான ஒரு அறைகூவலை விடுத்திருக்கின்றேன், மீண்டும் நான் மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கவிரும்புகின்றேன்.

2025 மார்ச் மாதம் 28ம் திகதி பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி பிரசுரத்தை உடனடியாக மீளப்பெறுமாறு மக்கள் ஆணையோடு கோருகின்றோம்.

அது உடனடியாக மீளப்பெறவேண்டும்  மே 28 வரை அரசாங்கத்திற்கு காலக்கெடுவை வழங்குவதாக நான் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றேன்.

மற்ற தமிழ் கட்சிகளிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்இஅரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப்பெறாமலிருந்தால் மே 29ம் திகதி அதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்போம்அனைத்து கட்சிகளும் அதற்கு இணைந்து வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்இ

இது இலங்கை தமிழரசுகட்சி பொதுச்செயலாளராக நான் விடுக்கும் அழைப்பாகயிருந்தாலும் கூட பொதுவாக மக்கள் சார்பாக விடுக்கப்படுகின்ற அழைப்பாக ஏற்று ஒரு கட்சி விடுக்கின்ற வேண்டுகோளாக அதனை கருதாமல் பொதுவாக அனைவரும் ஒன்றுசேர்ந்து அதனை செய்யவேண்டும்ஆதற்கு முன்னர் அரசாங்கம் அந்த வர்த்தமானியை மீளப்பெறவேண்டும் இல்லாவிட்டால் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.நிலம் அழிந்தால் அனைத்தும் அழிந்துபோகும்.

https://www.virakesari.lk/article/214088

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

28 ஆம் திகதிக்குள் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் 29 இல் போராட்டம் வெடிக்கும்; சுமந்திரன் அறிவிப்பு

sumanthiran-ammpara-500.png

வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரசு மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317702

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.