Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 MAY, 2025 | 04:31 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது.

2023.08.23ஆம் திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கையை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்திருந்தார். அதற்கு அமைய, நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயன், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டதோடு, புத்தசாசன, சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இணையவழியில் பங்கேற்றிருந்தார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250529-WA0009.jpg

IMG-20250529-WA0005.jpg

IMG-20250529-WA0010.jpg

IMG-20250529-WA0011.jpg

https://www.virakesari.lk/article/215993

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்தில் வேறு கூட்டங்களும் நடைபெறுகிறதா…அல்லது முகாமையாளர் மட்டும் கூடி கூடி கதைப்பது மட்டும்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மண்டபத்தில் வேறு கூட்டங்களும் நடைபெறுகிறதா…அல்லது முகாமையாளர் மட்டும் கூடி கூடி கதைப்பது மட்டும்தானா?

மண்டபத்தின் திறப்பு இன்னும் இந்தியத் தூதரகத்தில் மட்டுமே உள்ளது.

அதனால் யாழ்ப்பாணிகள்.. மண்டபத்தின் வெளியில் நின்று கட்டிடத்தை பார்த்து விட்டு, போக வேண்டியதுதான்.

தமிழனின் மையப் பகுதியில் அமைந்த கட்டிடத்தினை, தமிழன் பாவிக்கக் கூட உரிமை இல்லை. பெயர் மட்டும்... கலாச்சார மண்டபமாம். இது என்ன காலாச்சாரமோ... கட்டினவனுக்குத்தான் வெளிச்சம்.

பிற் குறிப்பு: எனது அறிவுக்கு எட்டியவரை.... இந்த மண்டபத்தை இந்தியா தனக்குப் பாவிக்க கட்டியதாகவே கருதுகின்றேன். ஒரு காலத்தில் இந்தியாவின் சொல்லுக்கு... இலங்கை கீழ்ப்படியாமல் முறுகல் நிலை ஏற்பட்டால்... இந்திய இராணுவத்தை பலாலியில் கொண்டுவந்து இறக்கி.. இதனை இந்திய ராணுவ முகாமாக பாவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. மையப் பகுதியில் இந்த நிலத்தை யாழ். மாநகரசபை இந்தியாவிடம் கொடுத்ததே பெரிய தவறு.

கோடிக்கு கணக்கில்... கோவிலுக்கு செலவு செய்யும் நம்மவர்கள்... அந்த மண்ணுக்கு என்று பொதுவாக ஒரு அழகிய பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி இருக்கலாம்.

நம்மிடம்தான்... தூர நோக்குப் பார்வை என்றும் இருந்ததில்லையே.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

மண்டபத்தின் திறப்பு இன்னும் இந்தியத் தூதரகத்தில் மட்டுமே உள்ளது.

அதனால் யாழ்ப்பாணிகள்.. மண்டபத்தின் வெளியில் நின்று கட்டிடத்தை பார்த்து விட்டு, போக வேண்டியதுதான்.

தமிழனின் மையப் பகுதியில் அமைந்த கட்டிடத்தினை, தமிழன் பாவிக்கக் கூட உரிமை இல்லை. பெயர் மட்டும்... கலாச்சார மண்டபமாம். இது என்ன காலாச்சாரமோ... கட்டினவனுக்குத்தான் வெளிச்சம்.

பிற் குறிப்பு: எனது அறிவுக்கு எட்டியவரை.... இந்த மண்டபத்தை இந்தியா தனக்குப் பாவிக்க கட்டியதாகவே கருதுகின்றேன். ஒரு காலத்தில் இந்தியாவின் சொல்லுக்கு... இலங்கை கீழ்ப்படியாமல் முறுகல் நிலை ஏற்பட்டால்... இந்திய இராணுவத்தை பலாலியில் கொண்டுவந்து இறக்கி.. இதனை இந்திய ராணுவ முகாமாக பாவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. மையப் பகுதியில் இந்த நிலத்தை யாழ். மாநகரசபை இந்தியாவிடம் கொடுத்ததே பெரிய தவறு.

கோடிக்கு கணக்கில்... கோவிலுக்கு செலவு செய்யும் நம்மவர்கள்... அந்த மண்ணுக்கு என்று பொதுவாக ஒரு அழகிய பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி இருக்கலாம்.

நம்மிடம்தான்... தூர நோக்குப் பார்வை என்றும் இருந்ததில்லையே.

ஆங்கிலத்தில் வெள்ளை யானை என்பார்கள். ஒரு விடயத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கும் போது இப்படி சொல்வார்கள்.

மத்தள விமானநிலையம் சீனா கட்டிய வெள்ளையானை. இது இந்தியா கட்டிய வெள்ளையானை.

மேனாடுகளில் p3 model அல்லது public private partnership PPP என்பார்கள். அரச அமைப்பும், தனியாரும் பரஸ்பர நன்மை அடையும் வகையில் ஒரு விடயத்தை நிர்வகிப்பது. மாநகரசபை இதை ஒரு கலியாணமண்டபமாக/கச்சேரி சபாவாக/ இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு எவரேனும் தனியார் நிறுவனத்துடன் போகலாம்.

அப்படியும் மாநகரசபையால் பராமரிக்க முடியாதளவு எண்டால் அதை பல்கலைகழகத்துக்கு கொடுக்கலாமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.