Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 80 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பில்லியன் கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் ஏன் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து போன பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை கைவிட்டு முந்தைய கொள்கைகளுக்கும் சிவன் மற்றும் நாக வழிபாடுகளுக்கும் திரும்பிச் சென்றார்களா? அல்லது புத்தர் சரியாகப் போதிக்கவில்லையா?

அத்தியாயம் 14: தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவநம்பிய தீசன் வேட்டையாடுவதில் உள்ள இன்பத்தை அனுபவிக்கப் நாற்பதாயிரம் ஆண்களுடன் வேட்டைப் பயணத்திற்குச் சென்றார். மலையின் உச்சியில் இறங்கிய மகிந்தவிடம் மன்னனை வழிநடத்த விரும்பிய மலைக் கடவுள் (தேவன்), ஒரு ஆண் மானின் வடிவத்தை எடுத்தார். வேடடைக்குச் சென்ற மன்னன் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மான், மன்னனை மகிந்த தேரரிடம் அழைத்துச் சென்று, அதன் பின் மறைந்தது விட்டது. கட்டாயம் இது ராமாயணத்தில் நடந்த நிகழ்வின் ஒரு நகல், அதில் ராமர் தனது மனைவி சீதையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மாயை மானைப் பின்தொடர்ந்தார்.

குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச்
சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்;
நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா!

[மகளிர் மனம் போல நின்றும் ஓடியும் மான் மாயம் செய்தது / கம்பராமாயணம் - மாரீசன் வதைப் படலம்]

மேலே கூறிய நம்பமுடியாத பல நிகழ்வுகளில் இருந்து, இது ஒரு உண்மையான வரலாற்று நிகழ்வாக இருக்க முடியாது என்பது, கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் புரியும். அவர்கள், மன்னனும் மகிந்தவும் பல விடயங்களில் விவாதங்களை நடத்தினர். இறுதியில் மன்னனும் அவரது நாற்பதாயிரம் ஆட்களும் புத்த மதத்திற்கு உடனேயே மாறினர். வின்சென்ட் ஏ. ஸ்மித் [Vincent A. Smith], புத்த மதத்திற்கு மதமாற்றம் மிகவும் படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார். நிதானமான வரலாறாகக் கருத முடியாத பல அற்புதங்களும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளும் இங்கு கூறப்பட்டு உள்ளன. அசோகரின் மகன் மகிந்தவைப் பற்றி மன்னர் தேவநம்பிய தீசன் அறிந்தது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், மன்னர் அசோகரும் மன்னர் தேவநம்பிய தீசனும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்? 11- 18 முதல் 19 வரை பார்க்கவும்.

[1 5 (முத்துக்கள்) கடலில் இருந்து வெளிவந்து குவியலாக கரையில் கிடந்தன. 16 இவை அனைத்தும் தேவநம்பியதீசனின் பெருமையால் நிகழந்தவை. நீலமாணிக்கம் [Sapphire], பெரில் (Beryl) அல்லது காமதகம் , மாணிக்கம் [ruby], இரத்தினக்கல் அல்லது இரத்தினம் [gems] மற்றும் பல நகைகள் மற்றும் 17 முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் அனைத்தும் ஒரே வாரத்தில், மன்னனுக்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதைக் கண்ட மன்னன் மனதார மகிழ்ச்சியடைந்தார். 1 8 ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதி உள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினான். / 19 தேவநம்பியதீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள் என்கிறது இந்தப்பகுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், அசோகர் தனது மகன் மற்றும் மகளைப் பற்றி தனது நீண்டகால நெருங்கிய நண்பரான மன்னன் தேவநம்பிய தீசனுடன் விவாதிக்க மறந்துவிட்டார்! நெருங்கிய நண்பர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளைப் பற்றி முதலில் விவாதிப்பார்கள். ஆனால் இங்கு அதைக் காணவில்லை? இது ஒரு வினோதமான நட்பு அல்லது தோழமை!

அத்தியாயம் 15 [மகா விகாரை]: இது ஒரு நீண்ட அத்தியாயம், பெரும்பாலும் புத்தர் மற்றும் முந்தைய புத்தர்களைப் பற்றிய நம்பிக்கையைப் பற்றியது, ஆனால் இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. மேலும் புராணக் கதைகள் கண்டுபிடிக்கப்படும் போது அத்தியாயங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ராணி அனுலாவும் [Queen Anula] ஐநூறு பெண்களும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] பெற விரும்பினர்.

பப்ஜா (Pabbajjā) என்பது பௌத்த மதத்தில் மடாலய வாழ்க்கைக்குள் நுழைவதற்கான ஆரம்ப புத்த மத சடங்கு ஆகும். இது ஒரு துறவி (பிக்கு) அல்லது கன்னியாஸ்திரி (பிக்குனி) ஆக முழுமையாக வாழ்வை ஈடுபடுத்த முன், அதற்கான முதல் கட்டம் ஆகும், இதில் ஒரு நபர் உலகியலான வாழ்க்கையை விட்டு பௌத்த மதத்தின் வழியில் செல்வதை குறிக்கிறது. அதாவது, இங்கு கட்டாயம் நான்கு விடயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும்.

ஆண்-பெண் கலவி கூடாது.
புல்லைக் கூட திருடக் கூடாது.
உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது.
இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது.

இப்ப இலங்கையில் , பர்மாவில் பிக்கு அல்லது பிக்குணியின் வாழ்வு மற்றும் அவர்களின் செயல்கள், வாய்மொழி பேச்சுக்கள் இப்படித்தானா இருக்கிறது என்பதைக் நீங்களே கூறுங்கள்?

எனவே இந்த நோக்கத்திற்காக சங்கமித்தாவை [Sanghamitta] அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. மேலும் தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 15 - 22 முதல் 26 வரை பார்க்கவும்.

‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் அவள் இங்கே வருவாள். அவளுடன், புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணிகளும் உடன் வருவார்கள். இகைக் குறித்து என்னுடைய தந்தையாகிய அரசனுக்குச் செய்தி அனுப்புக. அந்தத் தேரி இங்கு வந்ததும் இந்தப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்றார் மகிந்த, அதுதான் நல்லது" என்றான் மன்னன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மகிந்த தேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுத்தான். "இந்த மகா மேகவனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று மன்னன் சொன்னான். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்த போது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் தேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போது முதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனால்" என்று தேரர் பதிலளித்தார்.

[எப்படியான புத்த தர்மம் உண்மையில் இலங்கையில் வேரூன்றிவிட்டது என்பதை வடக்கு கிழக்கில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்?]

Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 14: The King Devanampiya Tissa was having a water festival, and went on a hunting expedition with forty thousand men. The mountain god (Deva) wanted to guide the king to Mahinda who has just alighted on the top of the mountain. The mountain god took the form of a male deer and the king followed it. The deer lead the king to Mahinda Thera and vanished. This is a copy of the event that happened in the Epic Ramayana in which Rama went after an unreal deer on the urging of his consort Sita. This cannot be a real historical event. They, the king and Mahinda, had discussions on many subjects, and in the end, the king and his forty thousand men converted to Buddhism. Vincent A. Smith strongly expresses that the first conversion to Buddhism must have taken place in a very gradual manner. There are so many miracles and unnatural happenings, which cannot be considered as sober history. This is the first time the King Devanampiya Tissa came to know about Mahinda, the son of Asoka. However, it is alleged that the King Asoka and the King Devanampiya Tissa were intimate friends, 11- 18 to 19. Asoka forgot to discuss about his son and the daughter with his long-time intimate friend, the King Devanampiya Tissa! Intimate friends usually discuss first about their children. It is a queer friend ship! There is confusion with the name ‘Anula’. Anula is the consort of Sub-king Mahanaga. The sentence next to it says queen Anula! It seems that the name of the queen is also Anula and the name of the consort of the sub-king, the brother of the king who is next in line to the throne, is Anula. It seems quite strange.

Chapter 15: This is a long chapter and mostly about the faith, about Buddha, and the previous Buddhas, but not about any reliable historical events that took place in Lanka. The chapters are usually long when the narratives are invented. The Queen Anula and five hundred other women wanted to receive pabbajji ordination. It was decided to bring Samghamitta for that purpose. Water from the king fell on the ground and an earthquake occurred. Earthquake occurs so many times due to Mahinda Thera’s actions, not less than nine times. No masonry buildings of that time would have survived, not only in Lanka but also in the adjacent South India, these so many earthquakes. Lanka and South India are not earthquake prone regions. There are stories of former four Buddhas, which cannot be considered as sober history. The Buddha prophesied that Dutthagamani would build a Thupa at a particular place, 15 – 168 to 169. The episode of Dutthagamani is imagined to come from the mouth of the Buddha. Any prophesies by anyone, even if it is by the Buddha, is with suspicious motive. A mango seed grow into a tall tree bearing fruits immediately, 15 – 41 to 43. The King Tissa built the MahaVihara. Lengthier the chapter, fraudulent is the narrative.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 80 B தொடரும் / Will follow

துளி/DROP: 1971 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A]

https://www.facebook.com/groups/978753388866632/posts/33119471261034761/?

  • Replies 105
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B

பூகம்பம் மகிந்த தேரரின் செயல்களால் பல முறை ஏற்படுகிறது, குறைந்தது ஒன்பது முறை பூகம்பம் இலங்கையில்? நடைபெற்றுள்ளது . அந்தக் காலத்து எந்தக் கொத்து கட்டிடங்களும் [கற்கட்டிடமும்] , இலங்கையில் மட்டுமல்ல, அருகிலுள்ள தென்னிந்தியாவிலும், இவ்வளவு நிலநடுக்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்பட்டால், தப்பிப் பிழைத்திருக்க முடியாது. அது மட்டும் அல்ல இலங்கையும் தென்னிந்தியாவும் பூகம்பத்திற்கு ஆளாகும் பகுதிகளும் அல்ல. இந்த அத்தியாயத்தில் நான்கு முன்னாள் புத்தர்களின் கதைகளும் உள்ளன, அவற்றை நிதானமான வரலாறாகக் கருத முடியாது. மேலும் துட்டகாமினி [Duttagamini] ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தூபியை [Thupa] கட்டுவார் என்று புத்தர் தீர்க்கதரிசனம் கூறினார் என்றும் உள்ளது. அதிகாரம் 15 - 164 முதல் 172 வரை பார்க்கவும்.

"அப்போது இலங்கைத் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை, ஆதலால், இத் தீவில் வசித்த தேவர்களுக்கும், நாகர்களுக்கும் உபதேசம் செய்துவிட்டு, ஆகாய மார்க்கமாக பிக்குகளுடன் ஜம்புத்வீபத்துக்குத் திரும்பி வந்தார். [மனிதர்கள் அல்லாத தேவர்கள் மற்றும் நாகர்கள் இலங்கையில் ஏன் வாழ்ந்தார்கள்?, அவர்களுக்கு ஏன் உபதேசம்?? ஏனென்றால் புத்தரின் போதனைகள் மனிதர்களுடன் சம்பந்தப்பட்டது]* அரசனே! இவ்வாறாக இந்த இடம் நான்கு புத்தர்களால் விஜயம் செய்யப்பட்டது. பேரரசனே! இந்த இடத்திலே புத்தருடைய உடல் தாதுவை வைத்த தூபம் இருக்க வேண்டும். அது நூற்றி இருபது முழம் உயர முள்ளதாகவும் இருக்கும். 'ஹேம மாலி' என்ற பெயர் அது பெறும்." நானே அதைக் கட்டுகிறேன்" என்று அரசன் கூறினன். அரசே! நீ இங்கு ஆற்ற வேண்டிய கடமைகள் வேறு பல உள்ளன. அவற்றை நிறை வேற்றுவாயாக! ஆனால் உன் வழி வந்த ஒருவன் இந்த தூபியைக் கட்டுவான். உன்னுடைய சகோதரனும், உபராஜனுமான மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயக தீசன் என்பவன் இனிமேல் அரசன் ஆவான். அவனுடைய மகன் கோத அபயன் அடுத்து அரசனுக வருவான். அவனுடைய மகன் காகவன தீசன் எனப்படுவான். ‘இவனுடைய மகன் அபயன் என்பவன் துட்ட காமனி என்ற பெயரால் புகழ்பெற்று விளங்குவான். அவன், தன்னுடைய அதிசய சக்தியினால் இங்கு தூபியைக் கட்டுவான்." என்று கூறுகிறது.

பாளி மொழியில் "துட்ட" (Dutta) என்ற சொல்லுக்கு "தீட்டுப்படுத்தப்பட்ட" அல்லது "துன்மார்க்கன்" என்று பொருள், "காம்னி" (Gamini / காமினி) என்றால் "தலைவர்" அல்லது "போர்வீரன்" என்று பொருள். இப்ப என் கேள்வி, புத்தர் முதலில், நாடுகடத்தப்பட்ட , தீய செயல்களின் வடிவமான விஜயனை தேர்ந்தெடுத்தார். அவன் தானும் புத்த மதத்தில் இணையாமல் மற்றும் எங்கும் பரப்பாமல் , தன் ஆட்சியைத் தொடர பிள்ளைகளும் இல்லாமல் போய்விட்டான். இப்ப இதே புத்தர் மீண்டும் துன்மார்க்க போர்வீரன் ஒருவனைத்தான் தேர்ந்து எடுக்கிறார்? அது ஏன் ? புத்தருக்கு அவர்களைத்தான் பிடிக்குமா?

துட்ட காமனியின் அத்தியாயம் புத்தரின் வாயிலிருந்து வருவதாக இங்கு கற்பனை செய்யப்படுவதை வெளிப்படையாக அறிகிறோம். புத்தரால் கூறப்பட்டாலும் கூட, யாராலும் கூறப்படும் எந்தவொரு தீர்க்கதரிசனமும், எதோ ஒரு சந்தேகத்திற்குரிய நோக்கத்துடன் தான் பொதுவாக இருக்கும். இந்த அத்தியாயத்தில் பல மாயாஜால நிகழ்வுகள் நடந்துள்ளன. உதாரணமாக, 'ஒரு மாங்காய் விதை உடனே வளர்ந்து உடனடியாக பழங்களைத் தரும் ஒரு உயரமான மரமாகிறது', 15 – 41 முதல் 43 வரை பார்க்கவும்.

தேரர் அமர்ந்ததும் அரசன் மாங்கனியை அவருக்கு அளித்தான். தேரர் மாம்பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை அரசனிடம் கொடுத்து அதை நடச் சொன்னார். தன் கையாலேயே அரசன் அதை அங்கு நட் டான். அது வளர்வதற்காக அந்த இடத்தில் தேரர் தம் கையைக் கழுவினர். அதே விடிையில் கொட்டையிலிருந்து முளை வெளிப்பட்டு செடி முளைத்தது. கொஞ்சங் கொஞ்சமாக அது வளர்ந்து, இலைகளும் கனிகளும் நிரம்பிய பெரிய மரமாயிற்று என்கிறது இந்தப் பந்தி.

திவலா (Tivala , கிமு 3 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்), திவரா என்றும் குறிப்பிடப்படுகிறார், மௌரியப் பேரரசர் அசோகரின் இரண்டாவது ராணி கருவாகியின் [Karuvaki] மகன். கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட அசோகரின் ஒரே மகன் இவர் தான். இவர் அவரது தாயாருடன், ராணி அரசாணை [Minor Pillar Edict III of Ashokan edicts, known as the Queen Edict.] என்று அழைக்கப்படும் அசோகரின் ஆணைகளின் மூன்றாம் சிறு தூண் அரசாணையில் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளார். வேறு எந்த மகன்களோ அல்லது மகள்களோ எந்த கல்வெட்டுகளிலும் / அவரது ஆணைகளிலும் குறிப்பிடப்படவில்லை. இங்கே அசோகர் ராணியின் பரிசுகளுக்குப் பெருமை சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார். அலகாபாத் தூணில் [Allahabad pillar] இது காணப்படுகிறது.

"கடவுள்களின் அன்புக்குரியவரின் உத்தரவின் பேரில், இரண்டாவது ராணியின் பரிசு எதுவாக இருந்தாலும், அது ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தொண்டு வழங்கும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவாலாவின் தாயார், கருவாகியின் புகழுக்குக் கணக்கிடப்பட வேண்டும் என்று எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்." என்று பதியப்பட்டுள்ளது.

ஆனால் புத்த மதத்தை இலங்கையில் நிலைநிறுத்த, பல நூறு தேரர்களுடன் பறந்து இலங்கைக்கு வந்த பெருமைமிக்க மகிந்தவோ, போதி மர கிளையுடன் வந்த பிக்குணி சங்கமித்தவோ, இவர்களின் தாயுமான தேவியோ, கல்வெட்டில் மட்டும் அல்ல, எந்த இந்தியா வரலாற்று குறிப்பிலும் இல்லை. அப்படி என்றால், அசோகன் இவர்களை , இவர்களின் பெருமையை மறந்துவிட்டானா? அல்லது அப்படி ஒன்றுமே இல்லையா, கவனத்தில் எடுப்பதற்கு?

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 81 தொடரும் / Will follow

துளி/DROP: 1973 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B

https://www.facebook.com/groups/978753388866632/posts/33133175609664326/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 81

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 81 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

அத்தியாயம் 16 [சேதிய பர்வத விகாரை / Cetiyapabbata Vihara]: இது தேவநம்பிய தீசன் மன்னருக்கும் மகிந்தருக்கும் இடையிலான சில கட்டிட வேலைகள் பற்றிய நம்பிக்கை மற்றும் உரையாடலைப் பற்றியது. எனினும் இது இலங்கையில் நடந்த எந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. 16 - 6 இல் கூறப்பட்டுள்ள 'நாக சதுக்கத் தடாகம் [Nagacatukka-tank , தமிழ்ப் பெயரான 'நாகசதுக்க குளம்' [நாகசாதுக்க(ள்) / ‘Nagacathukka Tank’] இன் ஒரு வடிவமாக இருக்க வேண்டும். இது இன்றைய நாச்சதூவ குளம் [Nachchaduwa Tank or Nachchaduwa wewa] ஆக இருக்கலாம்? இது மகாதரகல நீர்த்தேக்கம் [Mahadaragala Reservoir] என்றும் அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் தம்மண்ணகுலமா [Thammannakulama] அருகே உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இந்த குளம் மகாசேன மன்னரால் (277 - 304) கட்டப்பட்ட பதினாறு பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. மேலும் மன்னனின் மருமகனுக்கு ஐம்பத்தைந்து சகோதரர்கள் இருந்தனர்; இது மிகப் பெரிய எண்ணிக்கையாக இருக்கிறது! 16 - 5 முதல் 7 வரை பார்க்கவும்.

தேரர் அங்கு போய் விட்டார் என்பதை அரசன் அறிந்ததும், தேரில் ஏறிக்கொண்டு, தன் இரு ராணிகளும் உடன் வர, வேகமாக தேரரைப் பின் தொடர்ந்து சென்றான். நாக சதுக்கத் தடாகத்தில் குளித்ததும், தேரர்கள் மலைமேல் ஏறுவதற்கு உரிய வரிசைப்படி நின்றர்கள் என்று இந்தப் பந்தி கூறுகிறது.

அத்தியாயம் 17 [அஸ்தி வருகை]: இது நினைவுச்சின்னம், புத்தரின் வலது கழுத்து எலும்பு மற்றும் தூபாராமயவில் (Thuparamaya, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும்.) அதை நிறுவுதல் ஆகியவற்றினைப் பற்றியது. மகிந்த தேரர் இலங்கையில் தொடர்ந்து தங்குவதற்காக புத்தரின் நினைவுச்சின்னத்தை வழிபட விரும்பினார். மன்னர் தேவநம்பிய தீசன் தான் நினைவுச்சின்னத்தை வைக்க ஒரு தாது கோபுரம் அல்லது தூபி (stupa) கட்டுவதாகவும், அதேநேரம், மகிந்த தேரர் பகவான் புத்தரின் ஒரு நினைவுச் சின்னத்தைக் கண்டு பிடிக்க உதவுவதாகவும் உறுதியளித்தார். மகிந்த, சங்கமித்தாவின் மகன் சுமனனிடம் தனது தாத்தா அசோகரிடம் சென்று ஒரு நினைவுச்சின்னத்தையும், பகவான் புத்தர் பயன்படுத்திய தானம் செய்யும் கிண்ணத்தையும், பெற்று வருமாறு கேட்டுக் கொண்டார். என்றாலும் புத்தர் பயன்படுத்திய தானம் செய்யும் கிண்ணத்தையும் மற்றும் புத்தரின் தாதுவையும் அல்லது நினைவுச்சின்னத்தையும் மன்னர் அசோகர் எவ்வாறு கைப்பற்றினார் என்பது ஒரு மர்மமாகும்?

கௌதம புத்தரின் சொந்த ஊர் இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினி ஆகும். மன்னர் அசோகரின் சொந்த ஊர் இந்தியாவின் பீகாரில் உள்ள பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா). லும்பினிக்கும் பாட்னாவுக்கும் இடையிலான தோராயமான தூரம் நேர்கோட்டில் சுமார் 350–400 கிமீ (220–250 மைல்கள்) ஆகும். அத்துடன் இருவரின் வாழ்வுக்கும் இடையில் உள்ள காலம் அண்ணளவாக 230 ஆண்டுகள் என்றும் கூறலாம். எனவே புத்தரின் தாதுவை திருப்பி தோண்டி எடுக்க, தூரத்தினதும், காலத்தினதும் இடைவெளியையும் மற்றும் இது கிருஸ்துக்கு முன்பு என்பதையும் நினைவில் வைத்து அலசவேண்டும் என்று எண்ணுகிறேன்.

எது எப்படியாகினும் இலங்கை நாளாகமம்கள் [chronicals], தோண்டி எடுத்த தாதுக்களை 84000 ஆக பிரித்ததாகவும், அதேவேளை இந்தியா மகாபரிநிர்வாண சூத்திரம் [Mahāparinibbāna Sutta / "புத்தரின் இறுதி நாட்கள்"], புத்தரின் உடல் தகனத்திற்குப் பிறகு, துரோணர் என்ற பிராமணர் புத்தரின் தாதுக்களை எட்டு பகுதிகளாகப் பிரித்தார் என்றும், அவற்றை வெவ்வேறு குழுக்கள் தூபிகளைக் கட்ட எடுத்துச் சென்றதாகவும் கூறுகிறது. அதேமாதிரி அவதான இலக்கியமும் [Avadāna Literature / "புத்த கதைகள்"] புத்தரின் தாதுவையும் மற்றும் தூபிகளையும் குறிப்பிடுகின்றன.

மற்றும் அசோகாவதானம் (Aśokāvadāna) & திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") ஆகிய இரு நூல்களிலும் அசோகர் மூல தூபிகளைத் திறந்து, நினைவுச் சின்னங்களைச் சேகரித்து, தனது பேரரசு முழுவதும் அவற்றை மறுபகிர்வு செய்து, பல தூபிகளைக் கட்டினார் என்று மட்டும் கூறுகிறது. அவ்வளவு தான்! எவ்வளவு என்றே குறிப்பிடவே இல்லை. மேலும் பேரரசர் அசோகரின் கல்வெட்டுகள் மூலப் பிரிவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், நினைவுச்சின்னங்களை மறுபகிர்வு செய்வதில் அவரது விரிவான பங்கு பிற்கால நூல்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

அசோகர் ஏற்கனவே கட்டிய எண்பத்து நான்காயிரம் மடங்களில் நினைவுச் சின்னங்களை புதைத்து இருந்தாலும், மன்னர் அசோகர், எப்படியோ, அன்னதான கிண்ணத்தையும் நினைவுச் சின்னங்களால் நிரப்பினார். பின்னர் சுமனன் கடவுள்களின் நகரத்திற்குச் [city of gods / அது எங்கே இருக்குது, எப்படி பயணித்தார் என்பதை மட்டும் கேட்கவேண்டாம்?] சென்று புத்தரின் வலது தோள் எலும்பைக் கொண்ட நினைவுச்சின்னத்தைப் பெற்றார் [புத்தரின் எரிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் எலும்பு துண்டுகளில், வலது தோள் எலும்பு, புதைக்கப்படாமல் அல்லது புதைத்து தூபி கட்டியபின் எப்படியோ அங்கிருந்து அகன்று கடவுளின் நகரத்திற்கு போய்விட்டது?, அதை எப்படியோ சுமனன் அறிந்து அங்கு சென்று பெற்றார்?]

சுமனன் இலங்கைக்குத் திரும்பி [எப்படி சென்று வந்தார் என்று கேட்கவேண்டாம்?], அந்த நினைவுச் சின்னத்தை மகிந்த தேரரிடம் ஒப்படைத்தார். பின்னர் பல அற்புதங்களும் அற்புதமான நிகழ்வுகளும் நடந்தன, மேலும் இந்த நினைவுச் சின்னம் தூபாராமயத்தில் (Thuparamaya) நிறுவப்பட்டது. நடந்த அனைத்து அற்புத மற்றும் மாயாஜால நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகள் அல்ல. கடவுள்களின் நகரம் எது? கடவுள்களின் ராஜாவான சக்காவை சுமனன் எப்படி சந்தித்தான்? பதில் இல்லாத பல கேள்விகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. முடிந்தால் பதிலைத் தேடுங்கள்?

Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Chapter 16: This is also about the faith and the discourse between the King Devanampiya Tissa and Mahinda, about some building works. This is not about any real historical events that took place in Lanka. The Nagacatukka Tank, 16-6, must be one form of the Tamil name ‘Nagacathukka Tank’. This may the present day Nachchaduwa Tank. King’s nephew had fifty-five brothers; quite a large number! The king built sixty-eight rock cells. Rock cells shall remain even now, if they were really built.

Chapter 17: This is about the arrival of the Relic, the right collar bone, and its installation in the Thuparama. Mahinda Thera wanted a relic of Buddha to worship for his continual stay in Lanka. The King Devanampiya Tissa promised to build a ‘Thupa’ to house the relic, and Mahinda Thera to find a relic of Lord Buddha. Mahinda requested Sumana, son of Samghamitta, to go to his grandfather, the King Asoka, to obtain a relic and the alms bowl used by the Lord Buddha. It is a mystery how the King Asoka came into possession of the relic and the alms-bowl used by the Buddha. Asoka already enshrined relics in the eighty four thousand monasteries he already built! The King Asoka filled the alms bowl with relics and then Sumana went to the city of gods and obtained the right Collarbone relic of the Buddha from Sakka, the king of gods. Sumana returned to Lanka, and handed the relic to Mahinda Thera. Then there were many miracles, marvellous happenings, and the relic was installed in the Thuparama.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 82 தொடரும் / Will follow

துளி/DROP: 1975 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 81

https://www.facebook.com/groups/978753388866632/posts/33143830141932206/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 82 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர் துறவியாக மாற முடிவு செய்தபோது, அனோமா நதிக்கரையில் வெட்டப்பட்ட புத்தரின் தலைமுடியைப் பயன்படுத்தி, தேவர்களின் மன்னரான சக்காவால், ஒரு வான தூபி 'Culamani-cetiya' கட்டப்பட்டது. இதை சூளாமணி கோபுரம் [அல்லது சூளாமணி சைத்தியம்] என்று தமிழில் கூறலாம்? மேலும் புத்தர் காலமான பிறகு, டோனா என்ற மனிதன், புத்தரின் வலது கழுத்து எலும்பை தனது தலைப்பாகையில் மறைக்க முயன்றார், ஆனால் சக்கா அதை அவரிடமிருந்து எடுத்து, சேதியத்தில் [வான் தூபியில்] அதையும் சேர்த்து வைத்தார் என்று கூறப்படுகிறது.

எனவே, இந்த வலது கழுத்து எலும்பு நினைவுச் சின்னத்தை, கடவுள் நகரத்தில் உள்ள இந்த வான் Culamani-cetiya த்திலிருந்து பெறப்பட்டது என்று [ஒரு கருத்துக்கு] கொள்ளலாம்.

In Dravidian and Indo-Aryan phonetics, we often see shifts where:

"ḷ" (ள) and "d" (ட) get interchanged over time.
Retroflex sounds like "ḷ" are replaced with dentals like "d" in Sanskritization (and vice versa).
Tamil and Pali usage often differ from Sanskrit, leading to variations in pronunciation and writing.

For example:

Chuda (சுட) vs. Cūḷā (சூளா) → Phonetic shift from "d" (ட) → "ḷ" (ள) is possible.
Mani (மணி) remains unchanged.

So, Chudamani (சுடாமணி) → Cūḷāmaṇī (சூளாமணி) is phonetically feasible, especially in Buddhist contexts.

ஆகவே மேலே கூறியதையும் மற்றும் ஓலைச் சுவடிகள் 100 - 150 ஆண்டுகளுக்கிடையில் திருப்பி எழுதி புதிப்பிப்பதையும் கருத்தில் கொண்டால், மிக இலகுவாக ஒரு சாத்தியத்தை கூறலாம் என்று எண்ணுகிறேன்.

ஒலிப்பு ரீதியாக, l (எல்) மற்றும் 'd' ஆகியவை காலப்போக்கில் அல்லது மொழிகளுக்கு இடையேயான படியெடுத்தலின் போது ஒன்றுக் கொன்று மாற்றப்படுகின்றன. எனவே இந்த Chulamani Chedi, a celestial stupa, தமிழில் 'சூடாமணி' ஆக இருக்கலாம்?

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை ஒன்று இருந்தது. இது 1006 CE இல் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் புகழ் பெற்ற மன்னனின் மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான். இது ஜேசுட் பாதிரியாரால் [Jesuits priest] 1867 க்கு பிறகு இடிக்கப்பட்டது என்பது வரலாறு.

மீண்டும் 17 ஆம் அத்தியாயத்திற்கு வரும்போது, அசோகன் இறந்தவுடன், உடனேயே சுமனன் அங்கே சென்று விட்டான் என்று கூறுகிறது. இது தெய்வீக சக்தியைக் குறிக்கிறது, அது வரலாறு அல்ல, இறையியல் ஆகும்.

மேலும், இதில் இருந்து நாம் அறிவது அல்லது ஊகிப்பது, மகிந்த, சுமனா, சங்கமித்தா ஆகியோர் உண்மையான நபர்கள் அல்ல. கடவுளின் நகரத்திற்குச் செல்லும் உடனடிப் பயணங்களும் உண்மையான நிகழ்வுகள் அல்ல. மேலும், புத்த நாடுகளில் புத்தரின் அனைத்து தாதுக்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது புத்தர் உயிருடன் இருந்தபோது இருந்ததை விட கட்டாயம் அதிகமாக இருக்கலாம், அதுவும் எரிந்து காற்றுடன் கலந்ததையும் விட. [If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive.]

அத்தியாயம் 18 [மகாபோதி விருட்சத்தை பெறுதல்]: இது போதி மரத்தின் கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வது பற்றியது. இராணி அனுலா மற்றும் அவரது ஐநூறு பெண்களுக்கும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] செய்ய சங்கமித்தாவை அழைக்க முன்னர் முடிவு செய்யப்பட்டது. 15- 19 இல் இருந்து 22 வரை பார்க்கவும்.

‘அரசே! நாங்கள் தீட்சை பெற விரும்புகிறுேம் என்று ராணி அனுலா தன்னுடன் வந்த ஐநூறு பெண்களுடன் அரசனிடம் கூறினாள். உடனே,
‘இவர்களுக்குத் தீட்சை செய்து வையுங்கள்" என்று அரசன் தேரரைக் கேட்டுக் கொண்டான். 'மாமன்ன! பெண்களுக்கத் தீட்சை செய்து வைக்க எங்களுக்க அனுமதி கிடையாது' என்று தேரர் பதிலளித்தார். பாடலிபுத்ரத்தில் [Pataliputta] என்னுடைய தங்கை சங்கமித்தா என்ற பெயருடைய தேரி இருக்கிறாள். அனுபவத்தில் முதிர்ந்தவள் அவள். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் [ஏன் தென்பகுதி கிளை?] அவள் இங்கே வருவாள் என்று இந்த பந்தி கூறுகிறது.

மன்னன் தேவநம்பிய தீசன் தனது மருமகனும், அவரது அமைச்சருமான அரிதனிடம் [Arittha] போதி மரத்தின் கிளையை கொண்டு வருவதுடன், தேரி சங்கமித்தாவையும் கூட்டிக் கொண்டு வர, அசோகரிடம் செல்ல முடியுமா என்று விசாரித்தார்! அவன் ஒப்புக்கொண்டான். மேலும் அவன், தனது மனத்திண்மையால் [by his will power] அவன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தார் [18 - 8: ஐம்பு கோளத்தில் கப்பல் ஏறி, மகாசமுத்திரத்தைக் கடந்து, தேரருடைய சக்தியால் புறப்பட்ட அன்றே அழகிய புஷ்பபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.]; மற்றொரு மாபெரும் பொய். அவன் அசோகருக்கும் சங்கமித்தைக்கும் அந்த செய்தியைச் சொன்னார். சங்கமித்தை கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தயக்கம் காட்டிய, தந்தை அசோகனை ஒருவாறு சமாதானப்படுத்தினாள். மொகாலிபுத்தவும் [Moggaliputta] அதை ஆதரித்தார்.

Part: 82 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Sumana went to the King Asoka the very moment he departed. All the miraculous and magical events happened are not historical events. Which is the city of gods? How did Sumana meet Sakka, the king of gods? Tamils have no issue with these as religious edifications, but will never accept as historical events. Apparently, the right collarbone relic was obtained from the Culamani-cetiya. Phonetically, l (Ell) and ‘d’ get interchanged in the course of time or during transcription between languages. It could be ‘Cudamani’ in Tamil. There was a Vihara called Cudamani Vihara in Nagapattinam in Tamil Nadu also with the name Rajarajapperumpalli, which was standing in dilapidated state until 1867, for about 800 to 900 years after its construction. It was pulled down by Jesuits priests.

The above sketches are two views of Cudamani Vihara, which was prepared in 1846. The king Rajaraja endowed the revenues from the Anaimankalam village for the upkeep of this Vihara. This Vihara is also known as Rajendracholapperumpalli, Silendracutamani Vihara etc. The king Silendra of the present day Indonesia or Malaysia built this Vihara with the blessings of the Chola kings who also generously granted revenues from villages for its upkeep.

The author has no intention to hurt the feelings of the Buddhists, but their blind belief in the Mahavamsa resulted in the death of about of 150,000 Tamils in very gruesome manners, and in the displacement of half a million Tamils, and the pious Buddhists without any compunction or remorse branded them as economic refugees. In this process, Tamils got their parliamentary representations drastically reduced with boisterous behaviour of the Sinhala members in the Parliament shouting down the reduced Tamil members with the tacit approval of the speaker of the House. It is then necessary to analyse the genuineness of the document on which the Sinhala Buddhists base their claim.

Coming back to the chapter 17 again, Sumana went to Asoka on the very moment he departed, implying divine power, and it is not history, but theology. Sumana went to the city of gods. Tamils do not believe this nonsense. If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive. We would, again, like to stress that Mahinda, Sumana, Samghamitta are not real personalities, and the instant travels, even to the city of gods, are not real events.

Chapter 18: This is about the obtaining the branch of the Bodhi tree to be taken to Lanka. It was decided earlier to invite Samghamitta to perform pabbajji ordination on Queen Anula and her five hundred women, 15-21. The King Devanampiya Tissa inquired his nephew, also his minister; Arittha whether he could go to Asoka to bring the branch of the Bo tree and Theri Samghamitta! He agreed and by his will power reached Pupphapura (Pataliputta) on the same day he departed; another lie. He passed the message to Asoka as well as to Samghamitta. Samghamitta acceded to the request and convinced the reluctant Asoka that she should go. Moggaliputta was also in favour of it.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 83 தொடரும் / Will follow

துளி/DROP: 1977 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82]

https://www.facebook.com/groups/978753388866632/posts/33164353323213221/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 83

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 83 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

அசோகர் போதிமரத்தில் வரைந்த கோட்டின் வழியாக போதி மரக் கிளை மரத்திலிருந்து தானாகப் பிரிந்து, தனக்காக உருவாக்கப்பட்ட பாத்திரத்தை அடைந்தது. எதிர்பார்த்தபடி, அந்த நேரத்தில், அதை வரவேற்பதாக, ஒரு பூகம்பம் ஏற்பட்டது. போதி கிளை தானாகப் பிரிவது, வான இசை [celestial music] மற்றும் அரிதன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தது ஆகியவை நம்பமுடியாத நிகழ்வுகள். இந்த அத்தியாயம் ஒட்டுமொத்தமாக நம்பமுடியாதது ஆகும்.

அத்தியாயம் 19 [போதி விருட்சம் வருகை]: இது தேரி சங்கமித்தா மற்றும் அவள் போதிக் கிளையை கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வருவது பற்றியது. அவள் பதினொரு பிக்குனிகளுடனும் போதிக் மரக் கிளையுடனும் ஒரு கப்பலில் வந்தாள். அப்பொழுது நாகர்கள் போதிக் கிளையை எடுக்க முயன்றனர், சங்கமித்தா ஒரு கிறிப்பன் அல்லது கிரிஃபின் (griffin, சமஸ்கிருதத்தில் கருடன்) வடிவத்தை எடுத்து அவர்களின் முயற்சியை முறியடித்தாள். சங்கமித்தா அசோகருக்குப் பிறந்தால், அவள் எப்படி ஒரு கிரிஃபின் வடிவத்தை எடுக்க முடியும்? மேலும் பயந்துபோன நாகர்கள் அவளிடம் சமாதானம் கேட்டு, ஜம்புகோலம் [Jambukola, Jambukolapattinam or Dambakola Patuna, Tamil: ஜம்புகோலப்பட்டினம், is an ancient port to the north of Jaffna, in the Northern Province of Sri Lanka.] வரை கப்பலை அழைத்துச் சென்றனர். பல அதிசய நிகழ்வுகள் அப்பொழுது நடந்தன. இறுதியாக போதிக் மரக் கிளையுடன் சென்ற கப்பல் அது புறப்பட்ட அதே நாளில் அதன் திட்டமிட்ட இடத்தை அடைந்தது. போதிக் கிளையின் வருகையைக் குறிக்கும் வகையில் வழக்கம் போல் ஒரு பூகம்பம் ஏற்பட்டது.

ஒரே நாளில் வருகையும், பூகம்பமும் வழக்கமான இந்த புத்த மத நூல்களில் காணப்படும் கதை வர்ணனைகளாகும். கஜரகாமத்தில் [கதிர்காமம் / Kajaragama / Katragama] லிருந்து பிரபுக்களும் வருகையைக் கொண்டாட வந்தனர். எனவே, போதி மரம் மற்றும் புத்த மதம் வருவதற்கு முன்பே முருக (கதிர்காமம்) வழிபாடு அங்கு இருந்தது தெளிவாகிறது. பிராமணர்களும் அங்கு இருந்தனர். பிராமணர்கள் பௌத்தர்கள் அல்ல. சங்கமித்தா ஒரு மனிதரான அசோகரின் மகள் என்று நாம் கருதினால், இந்த அத்தியாயம் ஒரு மதக் கற்பனையே தவிர வரலாற்றுப் பதிவு அல்ல. முருக வழிபாட்டின் தொன்மை மற்றும் பண்டைய இலங்கையில் பிராமணர்களின் இருப்பு ஆகியவை மறைமுகமாக இங்கு உறுதிப்படுத்தப்படுகின்றன.

கதிர்காமம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக முருக வழிபாட்டின் புனித மையமாக இருந்து வருகிறது, இது தமிழ் இந்து மரபுகள், உள்ளூர் வேடர் நம்பிக்கைகள் மற்றும் பிற்கால பௌத்த நடைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பல மதங்களைக் கொண்ட தளமாக அதன் முக்கியத்துவம், இலங்கையின் ஆன்மீக நிலப்பரப்பில் அதை தனித்துவமாக்குகிறது.

இலங்கை பௌத்த மரபுகளின்படி, கிமு 2 ஆம் நூற்றாண்டில் மன்னன் எல்லாளன் உடனான தனது புகழ்பெற்ற போருக்கு முன்பு, மன்னன் துட்டகாமினி, கதிர்காம தெய்வத்தை (முருகன் / ஸ்கந்தன்) பிரார்த்தனை செய்து ஆசிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த பாரம்பரியம் பௌத்த வரலாறுகள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. அவை துட்டகாமினி ஒரு பக்தியுள்ள பௌத்தராகவும், அவருக்கு வெற்றியைத் தரக்கூடிய உள்ளூர் தெய்வங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் விவரிக்கின்றன. அதுமட்டும் அல்ல, துட்டகாமினியின் காலத்திற்கு முன்பே, கிமு 2 ஆம் நூற்றாண்டு முன்பே, கதிர்காம கோயில், தெய்வீக உதவியை நாடும் போர்வீரர்கள் மற்றும் மன்னர்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்தது என்றும் நம்பப்படுகிறது.

அத்தியாயம் 20 [தேரருடைய நிர்வாணம்]: இது அசோகர், தேவநம்பிய தீசன், மகிந்த தேரர் மற்றும் தேரி சங்கமித்தா ஆகியோரின் மரணங்களைப் பற்றியது. தேவநம்பிய தீசன் பல மதக் கட்டிடங்களைக் கட்டினார், மேலும் நாற்பது ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது தம்பி உத்தியன் (uttiya) ஆட்சி செய்தார். உத்தியாவின் எட்டாம் ஆண்டில் மகிந்த தேரர் இறந்தார். மகிந்த தேரரின் இறுதிச் சடங்கு மற்றும் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டது பற்றி மிக நீண்ட விளக்கம் உள்ளது. தேரி சங்கமித்தாவும் அடுத்த ஆண்டு இறந்தார். இந்த அத்தியாயத்தில் தேரர்கள் மற்றும் தேரிகளின் பல மரணங்கள் சொல்லப்பட்டு உள்ளன. பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு மன்னர் உத்தியனும் இறந்தான்.

அத்தியாயம் 21 [ஐந்து அரசர்கள்]: இது மகாசிவன், சூரதிஸ்ஸன் [சூரதிச்சன்], சேனன், குத்திகன் மற்றும் அசேலா [அசேலன்] ஆகிய [Mahasiva, Suratissa, Sena, Guttaka and Asela] ஐந்து மன்னர்களின் ஆட்சியைப் பற்றியது. மகாசிவன், சுரதிஸ்ஸன் மற்றும் அசேலா ஆகியோர் தேவநம்பிய தீசனின் இளைய சகோதரர்கள். மகாசிவனும் சுரதிஸ்ஸனும் தலா பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மகாசிவன் மற்றும் சுரதிஸ்ஸனின் பிறகு, இரண்டு தமிழ் மன்னர்களான சேனன் மற்றும் குத்திகன் (தீபவம்சத்தில் Gutta / குட்டன்) இருபத்தி இரண்டு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தனர். தீபவம்சமும் மகாவம்சமும் இந்த இருவரையும் தமிழர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன, ஆனால் இந்த இரண்டு தமிழர்களும் குதிரைகளை கையாளும் ஒரு சரக்குக் கப்பலின் மகன்கள் என்று மகாவம்ச ஆசிரியர் கூறுகிறார். ஒரு குதிரை வியாபாரி ஒரு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய முடிந்தது என்று நம்புவது அபத்தமானது? அப்படி என்றால், அது ஒரு அரசாங்கம் அல்ல, ஆனால் ஒரு சிறிய [குழு ஒன்றின் அரசாக இருக்கவேண்டும்] குலத் தலைவரின் ஆட்சியாக இருக்க வேண்டும்; அதாவது மிகவும் உள்ளூர் விவகாரம் இது. இங்கே, தீபவம்சம், 18-47: சூரதீசனை வென்ற பிறகு, இரண்டு தமிழ் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா பன்னிரண்டு (இருபத்தி இரண்டு?) ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர் என்று கூறுகிறது. எனவே அவர்கள் உள்ளூர் தமிழர்களாக இருக்கலாம்? மகாவம்ச ஆசிரியர் அப்போது இருந்த தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்பினார், மேலும் அவர்கள் வெளிநாட்டினர் என்பதைக் குறிக்க குதிரை வியாபாரியைக் கண்டுபிடித்தார் என்று கருதலாம். தமிழர்கள் குதிரை வியாபாரிகளாக இருந்திருக்க முடியாது; அந்தக் காலத்தில் அரேபியர்கள் மட்டுமே குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் மூத்தசிவனின் ஒன்பதாவது மகனான அசேலன், சேனனையும் மற்றும் குத்திகனையும் வீழ்த்தி பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் எல்லாளன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தீபவம்சம் எல்லாளனை ஒரு தமிழர் என்று கூறவில்லை, மேலும் சோழ நாட்டைச் சேர்ந்தவன் என்றும் கூறவில்லை. அவர் நண்பனுக்கும் எதிரிக்கும் நீதியுடன் ஆட்சி செய்தார். அவரது புண்ணிய செயல்கள் இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. அவர் வேறுபட்ட நம்பிக்கை [இந்து / சைவ] கொண்டவர் என்பதால் மகாவம்ச ஆசிரியர் அவர் மீது குற்றம் காண்கிறார். "பௌத்த மதத்திற்கு மாறான" இவ்வகையான செயல்களால், புத்தரின் ஆத்மா, நினைவுச் சின்னங்களில் மிகவும் கலக்கமடைந்து திகிலடைந்து வெறுப்பில் நெளிந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்!

Part: 83 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Bo tree branch detached from the tree along the line drawn by Asoka, and reached vessels made for it on its own. There was an earthquake at this time, as expected. Self detaching of Bo branch, celestial music and the arrival at Pupphapura on the same day of departure by Arittha are unbelievable events. This chapter is, on the whole, untrustworthy for historical purpose.


Chapter 19: This is about Theri Samghamitta and her bringing the Bodhi branch to Lanka by ship. She came with eleven Bhikkhunis along with the Bo tree branch in a ship. Nagas tried to take the Bo branch, and Samghamitta took the form of a griffin (garuda in Sanskrit) and thwarted their attempt. If Samghamitta is born to Asoka, how could she take the form of a griffin? Terrified Nagas then begged peace with her, and escorted the ship until Jambukola. There were many miraculous happenings and finally the ship with Bo tree branch reached to its intended place on the same day it departed. There was an earthquake, as usual, to mark the arrival of the Bo branch. Arrival on the same day and earthquake are usual religious embellishments. Nobles from Kajaragama (Katragama) too came to celebrate the arrival. Muruga (Katragama) worship was there before the arrival of Bo tree and the Buddhism. Brahmins were also there. Brahmins were not Buddhists. If we have to assume Samghamitta is the daughter of Asoka who is a human, then this chapter is a religious fantasy and not a historical record. The antiquity of Muruga worship and the presence of Brahmins in the ancient Lanka are also indirectly confirmed.

Chapter 20: This about the deaths of Asoka, Devanampiya Tissa, Mahinda Thera and Theri Samghamitta. There seems to be some errors in the length of Asoka’s reign. Bo tree was planted in the Mahamegavanarama garden on the eighteenth year of the reign (18 years). Asoka’s first queen died twelve years after this (18+12). He raised Tissarakkha to the rank queen after four years (18+12+4). She caused the Bo tree to die three years thereafter (18+12+4+3). Asoka died fourth year after this (18+12+4+3+4=41). The Mahavamsa, 20-6, says the total is thirty seven years. There may be some confusion in the wording or it is from the time of assuming the power; four years before the consecration.

It seems that the Mahnama wanted to stress that Bo tree by Asoka died, but that by Devanampiya Tissa survived. Devanampiya Tissa constructed many religious buildings, and died after the forty years of rule. After his death his younger brother, Uttiya, ruled. Mahinda Thera died on the eighth year of Uttiya, and Mahinda Thera was sixty years of age. There seems to be some confusion on the age of Mahinda Thera when he died. Mahinda Thera came to Ceylon when he was thirty two years of age (32). Devanampiya Tissa ruled for forty years (32+40). Then he died on the eighth year of Uttiya’s rule (32+40+8=80). Mahinda Thera should be eighty years of age when he died, but the Mahavamsa, 20-32, says he was sixty years of age when he died, 20 - 32. Wilhelm Geiger says there was some play of words, but let it be as it is. There is quite a long description of the funeral of Mahinda and the installation of the relic. Theri Samghamitta also died next year, and though the Mahavamsa, 20-49, says she died at fifty nine years of age, but she must have died at the age of seventy nine. The same confusion or play of words here too. The Mahavamsa is full of happy coincidences, and one is here too. Gautama Buddha died at eighty years of age, and the Mahinda Thera too died at the same age of eighty years, another invented coincidence. There were many deaths of Theras and Theris in this chapter. The King Uttiya also died after reigning for ten years. This chapter is kind of a chapter of deaths. This chapter is also full of invented details and coincidences.

Chapter 21: This is about the rule by five kings: Mahasiva, Suratissa, Sena, Guttaka and Asela. Mahasiva, Suratisa and Sena are younger brothers of Devanampiyatissa. Mahasiva and Suratissa ruled for ten years each. After the rules of Mahasiva and Suratissa two Damila kings, Sena and Guttaka (Gutta in the Dipavamsa) justly ruled twenty-two years. Both, the Dipavamsa and the Mahavamsa identify these two as Damilas, but Mahavamsa author invented that these two Damilas are sons of a freighter who deals with horses. It is ridiculous to believe that a horse dealer was able to dethrone a government. That means it was not a government, but a head of a small clan; a very local affair. (The Dipavamsa, 18-47, says they are Damila Princes). They could be local Tamils. The Mahavamsa author wanted to erase the then existing Tamil identity, and invented the horse dealer to indicate they were foreigners. Tamilians could not have been horse dealers; only Arabs dealt in horse-trading in those days.

Then Asela, the ninth son of Mutasiva, overpowered Sena and Guttaka, and ruled for ten years. Then Elara ruled for forty-four years. Dipavamsa does not say he was a Tamil, and does not say he was from Cola country. He ruled with justice to friend and foe. His meritorious deeds are described in this chapter. The Mahavamsa author finds fault with him because he was of different faith. Buddha’s relics must be writhing in disgust in their reliquaries on this un-Buddhist logic.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 84 தொடரும் / Will follow

துளி/DROP: 1979 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 83

https://www.facebook.com/groups/978753388866632/posts/33186888984292988/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 84 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

மூத்தசிவனின் தந்தை பண்டுகாபயா பதினாறு முதல் இருபது வயதுக்குள் தனது மனைவி சுவண்ணபாலியைச் சந்தித்தார் என்றும் அவருக்கு முப்பது வயதில் மகன் மூத்தசிவன் பிறந்திருந்தார் என்றும் வைத்தால், மூத்தசிவன் தனது எழுபத்தேழு வயதில் அரியணை ஏறியிருப்பார். பின்னர் அவர் நூற்று முப்பத்தேழு வயது வரை, [அறுபது ஆண்டுகள்] ஆட்சி செய்திருக்க வேண்டும். மூத்தசிவனுக்கு பத்து மகன்கள் இருந்தனர், அசேலன் ஒன்பதாவது மகன்.

மூத்தசிவனுக்கு ஐம்பது வயதாக இருந்தபோது அசேல பிறந்திருந்தால், அசேல நூற்று எண்பத்தொன்பது வயது வரை, 137-50 + 40 + 10 + 10 + 10 + 22 + 10 = 189 வரை வாழ்ந்திருப்பார். இந்த விபரங்கள் விரிவாக முழுமையாக முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றும் பல நம்பமுடியாத நிகழ்வுகளாலும் விஜயன் முதல் அசேல வரையிலான மன்னர்கள் நிச்சயமாக உண்மையான மன்னர்கள் அல்ல என்பது மிகவும் தெளிவாகிறது. மேலும் அவர்களின் பல ஆட்சிகள் நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆட்சிகளைக் கொண்டவை. விஜயனின் வருகையை புத்தரின் மரணத்துடன் ஒத்திசைக்க வரலாற்றாசிரியர்கள் ஆர்வமாக இருந்ததால், அந்த நடவடிக்கையின் காரணமாக, இது ஏற்பட்டிருக்க வேண்டும்? அதேவேளை புத்தரின் மரணத்தையும், அதாவது மரண திகதியையும் தவறாகப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். இவை எல்லாம் முழுவிபரமாக, விரிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, இலங்கை நாளாகமங்களின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் இறந்தார். அதேவேளை, இந்திய மரபுகளின்படி, அசோகரின் முடிசூட்டுக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தரின் மரணம் நடந்திருக்க வேண்டும். இந்த நிகழ்வு இந்தியாவில் நடந்தது, மேலும் இந்திய தரவுகளை விட இலங்கை நாளேடுகளை நம்பகமானதாகக் கருதுவதற்கு எந்த சரியான காரணமும் இல்லை.

இந்த அத்தியாயத்தின் சுமார் அறுபது சதவீதம், மன்னன் எல்லாளனின் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது 21 - 13 முதல் 34 வரை பார்க்கவும். எங்கள் கீழ்நிலைப் பள்ளிகளில் இதே போன்ற நிகழ்வுகளைப் பற்றி நாங்கள் படித்துள்ளோம். மன்னனுடைய மகன் கவனக் குறைவாக ஒரு கன்றின் கழுத்தில் தேரை ஓட்டியதும், தாய்ப் பசு, அதன் காரணமாக, நீதி கேட்டு, கயிற்றை இழுத்தது மணி அடித்தது என்றும், இதனால், மன்னன் தன் சொந்த மகன் மீதே தேர் சக்கரத்தை செலுத்தி தண்டனை வழங்கினான் என்று நாங்கள் எங்கள் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்புகளில் படித்தோம். இருப்பினும் இங்கு மன்னன் எல்லாளன் அல்ல. அது மனுநீதி கண்ட சோழன் [Manuneethy Kannda Cholan]. அது போல, எல்லாளனின் கதையில் வரும் நெல்லை உலர்த்தும் ஒரு வயதான பெண்மணியின் கதையையும் இதே மன்னரின் கதையில் காண்கிறோம். மேலும், எல்லாளன் கதையில் வரும், பாம்பு மற்றும் இளம் பறவைக்கு ஒத்த ஒரு சம்பவம், வேறு வழியில் மற்றொரு மன்னன் சிபி சக்கரவர்த்தி [King Shibi] கதையில் காண்கிறோம். இதுவும் நாங்கள் அதே வகுப்புகளில் படித்தோம். தமிழ் நாட்டு நாளாகமம்களுக்கும் மற்றும் இலங்கை நாளாகமம்களுக்கும் இடையில் பல பொதுவான இழைகள் [நிகழ்வுகள்] பின்னிப் பிணைவதைக் இங்கு காண்கிறோம்.

சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவகற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன், அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்ற பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவன் படுக்கும் [சயன] அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம்.

அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் திஸ்ஸா வாவிக்குச் [Tissa-tank] சென்று கொண்டிருந்தான. அப்போது தாய்ப் பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச் சக்கரத்தை ஏற்றி, அறியாமல் அதனைக் கொன்று விட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான். பனைமரத்தில் அமர்ந்திருந்த பறவைக் குஞ்சு ஒன்றைப் பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. தாய்ப் பறவை ஓடி வந்து மணியை அடித்தது. அரசன் அந்தப் பாம்பைத் தன் முன்பு கொண்டு வரச்செய்தான். அதன் வயிற்றைக் கீறிக் குஞ்சை வெளியே எடுத்த பின்பு, அதை மரத் தின் மீது தொங்கவிட்டான்.

ஒரு கிழவி வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்தாள். பருவமில்லாத காலத்தில் வானம் மழையைப் பெய்து அரிசியை நனைத்து விட்டது.
அவள் அரிசியை எடுத்துக் கொண்டு போய் மணியை அடித்தாள். பருவமில்லாத காலத்தில் மழை பெய்ததை அறிந்த மன்னன் கிழவியை அனுப்பிவிட்டான். "அரசன் நீதியுடன் நடந்தால் உரிய பருவத்தில் தானே மழைபெய்ய வேண்டும்?' என்று எண்ணியவனாக, இதுபற்றி முடிவு செய்வதற்கு உண்ணுவிரதத்தை மேற்கொண்டான். அரசனுடைய விரதத்தினால் வெப்பம் தாங்காத அவனுடைய குலதெய்வம் இதுபற்றி நான்கு பெருந் தேவர்களிடம் தெரிவித்தது. * நான்கு பெரும் திசைகளை காக்கும் இவர்களை லோகபாலர்கள் என்பர். பிரம்ம லோகத்தில் இந்திரனுக்கு அருகில் எப்போதும் இருப்பவர்கள். தத்த ரதா, விருல்ஹகா, விபோக்கூடிா, வேஸ்வணு என்பது இவர்கள் பெயர். முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் ஆட்சி செலுத்துபவர்கள்.அவர்கள் எல்லோருமாக சக்கனிடம் சென்றார்கள். சக்கன் [Sakka] பஜ்ஜூனனை [pajjunna, A devarāja, the god of rain] அழைத்து இனி உரிய காலத்தில் மட்டுமே மழை பெய்ய வேண்டுமெனக் கட்டளை இட்டான். அரசனுடைய குலதெய்வம் இதுபற்றி அவனிடம் தெரிவித்தது. அப்போது முதல் அவன் ஆட்சிக் காலம் முழுவதும் பகலில் மழை பெய்வது இல்லை. இரவில் மட்டுமே வாரம் ஒரு முறை வானம் மழை பெய்யும்.

இவ்வாறு நடுநிலையாக நீதியாக ஆட்சி செய்த எல்லாளனுக்கு களங்கம் ஏற்படுத்துவது போல, இருபத்தி மூன்றாவது அத்தியாயம் [படைவீரர்கள் திரட்டல்] என்ற பகுதியில் வசனம் 8 இல் இருந்து 10 வரை அமைந்துள்ளது?



........ அதிலிருந்து அவனை 'நந்தி மித்ரன்' [Nandhimitta] என்று அழைக்கலாயினர். பத்து யானைகளுடைய பலம் அவனுக்கு இருந்தது. அவன் வளர்ந்து பெரியவனுனதும் நகரத்துக்குச் சென்று மாமனிடம் பணியாற்றினான். தமிழர்கள் அப்போது தூபிகளையும் இதர புனித சின்னங்களையும் நாசப்படுத்தி வந்தனர். இந்தப் பலசாலி எதிரிகளைக் காலைப் பிடித்துக் கிழித்து எறிவது வழக்கம். அவன் எறிந்த சவங்களைத் தேவர்கள் மறைந்து போகும்படி செய்து வந்தனர் என்று இந்த பந்தி கூறுகிறது.

இங்கே எல்லாளனின் ஆட்சிக் காலத்தில் தூபிகள் மற்றும் பிற புனித நினைவுச்சின்னங்கள் தமிழர்களால் சேதப்படுத்தப்பட்டன என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுவது முரண்பாடாக உள்ளது. தாய் பசு எப்படி வலியை அனுபவித்ததோ, அவ்வாறே தானும் அனுபவிக்க வேண்டும் என்று, தனது சொந்த தேரின் சக்கரத்தின் கீழ் தனது சொந்த மகனைக் கொன்ற ஒரு நீதியுள்ள மன்னன் இவன்! அது மட்டும் அல்ல, மன்னன் எல்லாளன், ஒரு முறை தற்செயலாக ஒரு தூபியை சேதப்படுத்தி விட்டான். இந்த தவறுக்காக அவன் உடனே இறக்க விரும்பினான். அத்தகைய மன்னன், தமிழனோ அல்லது தமிழனாக இல்லாவிட்டாலும், தனது குடிமக்கள் புனித நினைவுச் சின்னங்களை இழிவுபடுத்த அனுமதிப்பானா? கொஞ்சம் சிந்தியுங்கள்? இவை பிற்காலத்தில் துறவிகள் நகலெடுப்பதன் மூலம் செருகப்பட்ட செருகல்களாக இருக்க வேண்டும். [These must be later insertions by copying monks.] துறவிகள் ஒவ்வொரு நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலை கையெழுத்துப் பிரதிகளை நகலெடுப்பார்கள். பல துறவிகள் நகலெடுக்க தனித்தனியான அத்தியாயங்கள் [discreet chapters] ஒதுக்கப்படுகின்றன. அந்தவேளையில், யாராவது ஒரு துறவி தனது நேர்மையற்ற செயலால் புத்த மதத்திற்கு பெரும் சேவை செய்வதாக நினைத்து இந்த முரண்பாடான கதையை புத்திசாலித்தனமாக செருகியிருக்கலாம்? இதேபோன்ற செயல்கள் பல அல்லது சில துறவிகளால் நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டும்.

இன்னும் ஒன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாளாகமம்கள் ஒன்றின் பின் ஒன்றாக எழுதும் பொழுது, அவ்வற்றின் போக்கு, எந்த திசையில் போகிறது என்பதை இலகுவாக, முக்கிய மூன்று நாளாகமம்களை அலசுவது மூலம் அறிந்து கொள்ளலாம்.

தீபவம்சம் தமிழர்களுக்கும் எதிரான எந்த பெரும் கருத்துக்களையும் கொண்டு இருக்கவில்லை. அதன் நோக்கம் புத்தமதத்துக்கு பெருமை சேர்ப்பது மட்டுமே. ஆனால் இரண்டாவதாக எழுதப்பட்ட மகாவம்சம், புத்த மதத்துக்கு பெருமை சேர்க்கிறோம் என்று தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசத்தையும் புகுத்தி இருப்பதை வெளிப்படையாக காண்கிறோம். அது மேலும் ராஜவலியாவில் அதிகரித்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அது மேலும் மேலும் இன்றைய வடக்கு கிழக்கு அல்லது தமிழ் மக்களின் நிலவரத்தில் எப்படி பாதிக்கிறது என்பதை எவரும் உணரலாம்! சொல்லித் தெரிய வேண்டியது இல்லை!

Part: 84 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

Asela is the ninth son of Mutasiva as per the Mahavamsa, 21 - 12. The Dipavamsa, however, indicates Asela as the eighth son of Mutasiva, 11 – 7 and 17 – 76 of the Dipavamsa. The Dipavamsa gives the order of Mutasiva’s sons twice in it. Mutasiva’s father, Pandukhabhaya met his consort Suvannapalli when he was between sixteen and twenty years of age. If he had his son, Mutasiva, when he was at about thirty years of age, then Mutasiva would have ascended the throne at the age of seventy-seven years. Then he must have ruledun til the age of One hundred and thirty seven. Mutasiva had ten sons, and Asela is the ninth son. If Asela were born when Mutasiva was fifty years of age, then Asela would have lived to the ripe age of one hundred and eighty nine, 137-50+40+10+10+10+22+10=189. It is very clear that the kings from Vijaya to Asela are definitely not real kings, and many of their reigns are with unreliably long reigns. This could be because that the chroniclers were anxious to synchronize the arrival of Vijay with the death of the Buddha and got the Buddha’s death wrong. The death of Buddha must have happened about one hundred years before the consecration of Asoka, as given in the Indian tradition, than two hundred and eighteen years as given the Lanka chronicles. The event took place in India and there is no valid reason to consider the Lanka chronicles as trustworthy in preference to the Indian data.

About sixty percentage of this chapter speaks of the merits of king Elara, 21 – 13 to 34. We have studied about similar events in our lower schools. The incident of Elara’s son inadvertently running over the neck of a calf and the mother cow pulling the justice rope of Elara seeking justice, and the Elara’s act of running his chariot wheel over his own son is what we studied in our fifth or sixth grades. However, the king was Manuneethy Kannda Cholan, not Elara. An old woman drying her rice also attributed to this king. An incident similar to snake and the young bird is attributed to another king Ciby Chakaravatty. This also we studied in the same grades. There are many common strands running between Tamil Nadu and the Lanka chronicles, and it would be summarised elsewhere, even if the events were to be repeated for cohesive presentation.

It is ironic that accusations are made in, 23 – 9, that thupas and other sacred memorials are damaged by Damilas during the time of Elara’s rule. Would a just king who killed his own only son under the wheel of his own chariot to suffer the same pain as the mother cow allow this? King Elara once inadvertently damaged a thupa, and wanted to die for this mistake. Would such a king allow his subjects, whether Damila or not, to desecrate sacred memorials? These must be later insertions by copying monks. Monks used to copy Ola manuscripts every one hundred to one hundred and fifty years. Many monks are assigned discreet chapters to copy. One such monk must have discreetly inserted this contradictory tale, thinking he was doing great service to the Buddhism by his dishonest act. Similar acts must have been in the process by many monks every one hundred to one hundred and fifty years.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 85 தொடரும் / Will follow

துளி/DROP: 1981 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 84

https://www.facebook.com/groups/978753388866632/posts/33193965833585303/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.