Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 127 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து [சுழன்று] தன் முலையை வட்டித்து எறிந்தாள் [வட்டித்துவிட்டா ளெறிந்தாள்: இதன் பொருள் "பிரதிக்கினை பண்ணி எறிந்தாள்" என்பதாகும். அதாவது, அவள் ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்றும் விதமாக ஏதாவது ஒன்றை எறிந்தாள் என்று அர்த்தம்.].

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது.

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், அவள் பத்தினி தெய்வமாக மாறினாள், மேலும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவளை நம்பினர்.

கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன் - செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன். ஒருமுறை, துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது" என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான். பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள்.

எனவே, உடனே சேரர் பெருமான் பத்தினிக்குரிய கல்லைப் இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், வட இந்திய மன்னர்களுக்கு எதிராகப் படையெடுத்து வடக்கு நோக்கிச் சென்று, இமயமலையிலிருந்து கற்களை தோற்கடிக்கப்பட்ட மன்னர்களின் தலையில் சுமப்பித்துக் கொண்டு வந்தான். அந்தக் கற்களைக் கொண்டு கண்ணகிக்கு ஒரு பத்தினி கோயில் கட்டினான். இலங்கை மன்னன் கஜபாகுவும் இந்த விழாவில் கலந்து கொண்டான். சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாளில் தான் நடத்தவிருந்த விழாவிற்கு பத்தினி தேவி வர வேண்டும் என்று அவன் வரம் கேட்டான். உடனே அதற்க்கு செவிசாய்த்து ஒரு குரல் கேட்டது. அந்த பாடல் அல்லது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்"

‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, கண்ணகியின் சக்தியை, அவள் பெருமையை நினைவுகூர்ந்து, அவளை கௌரவப் படுத்த தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து தானும் அங்கே விழா நடத்தினான் என்பது வரலாறு ஆகும். இதனால் அவனது இராச்சியம் ஒருபோதும் தவறாத மழையும், வளமான பயிர்களுமாக காணப்பட்டது. இந்த பத்தினி வழிபாட்டுப் பண்டிகை 1775ஆம் ஆண்டு வரை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதும் ஆகும். இந்த விழா தான் பின்னாளில் 'பெரகரா' ['Perahera'] விழாவாக மாறியது எனலாம்.

Part: 127 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Kannaki wrenched her left breast, came right round the city three times, and threw it to burn the City of Madurai. She, in due course, became the Goddess Pattini, and believed to have control over disease and could cause prosperity to the country.

The king Kajavahu of Lanka heard of her power, and performed festival on her honour, and his kingdom became blest with never failing rain and abundant crops. This festival became the ‘Perahera’ festival.

The Chera king, Seng Kudduvan, went north on expedition against the north Indian kings, and brought stones from the mount Himalaya on the heads of the defeated kings. He made a temple for Kannaki, Pattini temple, with those stones. The king of Lanka, Kajavahu, too attended this festival. He requested a boon from the Goddess Pattini that she should come to the festival he intended to have on the day of the birthday of Cheran Seng Kudduvan. A voice ‘granted’ was heard. The verses related to this are given below.

"கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்"

The monarch of the world circumambulated the shrine thrice
and stood proffering his respects.
In front of him the Arya kings'’ released from prison,
kings removed from the central jail, the Kongu ruler of the Kudagxi,
the king of Malva and ’Kayavagu (Gajabhau), the king of sea girt Ceylon,
prayed reverentially to the deity thus:
Please grace our countries by your presence
just as have done this auspicious day,
a fete day of Imayavaramban’s sacrifice.
’ Then a voice from the welkin issued forth:
‘I have granted the boon.’

The Perahera festival is the continuation of this worship of the Goddess Pattini till about 1775 A. D.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 128 தொடரும் / Will follow

துளி/DROP: 2082 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127

https://www.facebook.com/groups/978753388866632/posts/34206389789009564/?

  • Replies 153
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 128 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

கண்ணகி (இலங்கையில் பத்தினி தேவி என அழைக்கப்படுகிறார்) நீதித்துறையின் ஒரு முக்கிய பாகமாகவும் அன்று இலங்கையில் விளங்கினார். ஒரு பழி சுமத்தப்பட்ட நபர் (defendant) நீதிமன்றத்தில் ‘ஹல்லம்பா’ [Hallamba] எனப்படும் ஒரு விசேடமான சத்தியப் பொருள் மீது சத்தியம் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. அங்கே அந்த சத்தியத்தில், அவர்கள் உண்மை மட்டுமே பேசுவதாக தெரிவிக்க வேண்டும். இந்த ஹல்லம்பா மீது சத்தியம் செய்யும் பழக்கம் சிங்கள கிராமப்புற மக்களால் மிகவும் பயமுறுத்தும் ஒரு சத்தியமாகக் கருதப்பட்டது. தவறாக சத்தியம் செய்தால் தெய்வீக தண்டனை ஏற்படும் என அவர்கள் நம்பினர். இங்கே ஹல்லம்பா [Hallamba] என்பது பத்தினித் தேவியின் (கண்ணகி) புனிதமாகக் கருதப்படும் ஒரு பொருள் அல்லது அவள் அணிந்திருந்த, உடல் அணிகலன்களில் ஒன்றான அவளின் காற்சலங்கை [anklet] ஆகும். இது வழிபாடுகளிலும், சத்தியச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதன்மீது தவறாக சத்தியம் செய்வது பத்தினி தேவியின் கோபத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் நம்பினார்கள்.

மேலதிக விவரங்களுக்கு 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' என்ற நூலின், பக்கம் 21 முதல் 22 பார்க்கவும். மேலும் 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004 ' இன் பக்கம் 22 இலிருந்து ஒரு சிறிய மேற்கோள் கிழே தரப்பட்டுள்ளது:

"கஜபாகு இந்தியாவிலிருந்து பத்தினி தேவியின் பொற்சிலம்பு கொண்டு வந்தார். அதன் நகல்களே இப்போது பத்தினி வழிபாட்டின் பிரதான சின்னங்களாக பயன்படுகின்றன. நீதிமன்றங்களில் சத்தியம் செய்யும்போது இந்த ஹல்லம்பா அல்லது காற்சலங்கை மீது சத்தியம் செய்யப்படுவது அவ்வப்போது காணப்படுகிறது. இந்த சத்தியத்தை விட சிங்கள கிராமவாசிகள் அதிகமாக பயப்படுவது வேறு ஒன்றும் இல்லை." என்கிறது.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது இலங்கை மன்னன் கஜபாகுவும் அங்கிருந்ததாக சிலப்பதிகாரம் பாடுகிறது. மணிமேகலை காவியமும் அதை உறுதி செய்கிறது. ஆனால் செங்குட்டுவனின் காலகட்டத்தை மதிப்பிட உதவிய இலங்கையின் தீபவம்சம் (கிபி 4ம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கிபி 5ம் நூற்றாண்டு) இரண்டிலும் கஜபாகு மன்னன் தென்னிந்தியா போனது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ஏன்? அது தான் எனக்குப் புரியவில்லை?

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான்.

இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பினான். மேலும் இலங்கையில் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் கூட எங்கும் தகுதியான துறவிகள் இல்லாததால், புதிய துறவிகளை உத்தியோகமாக அமர்த்தி சமயப்பணியில் ஈடுபடவைக்க, அவர்களுக்கு புத்த குரு பதவியளிப்பு செய்ய, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்து வர டச்சுக்காரர்களுடன் ஏற்பாடு செய்தார். எனவே இதற்காக, பல முறை, தூதர் குழுக்கள் அனுப்பப்பட்டது, அதில் கடைசியாக 1745-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது ஆகும்.

இந்த தூதர் குழு சியாமில் இருக்கும்போது, ஸ்ரீ விஜய ராஜசிங்கம் இறந்துவிட்டார். அவரது இடத்தில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கம் என்ற மன்னர் வந்தார். இதனால், சியாம் மன்னன், புதிய மன்னரிடமிருந்து உறுதிப்படுத்தல் வேண்டுமென்று கேட்டார். இதனால் சில தாமதம் ஏற்பட்டது. சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர்.

மேலும் இவர்கள் சியாமிலிருந்து வந்ததால், இவை சியாம் நிக்காயங்கள் [Siam Nikayas] என அழைக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர்.


அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்புதான், பெரகரா விழாவில் பல் நினைவுச்சின்னம் முக்கியத்துவம் பெற்றது. கஜபாகுவின் காலத்திலோ அல்லது அவரது ஆட்சிக்குப் பிறகு சிறிது காலத்திலோ இலங்கையில், பத்தினி வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடைய, ஒரு கெலியா, தோடன் கெலியா, பொல் கெலியா மற்றும் மல் கெலியா [An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya] என, நான்கு மத விளையாட்டுகள் தோன்றின. இங்கு ஒரு-கெலியா என்பது "கொம்பு - இழுக்கும் விளையாட்டு; "தோடன் - கெலியா என்பது "தோடம்பழம் / ஆரஞ்சு. (அடிக்கும்) விளையாட்டு;" பொல் - கெலியா என்பது "தேங்காய் (உடைத்தல்) விளையாட்டு;" மற்றும் மல் - கெலியா என்பது "பூ விளையாட்டு ஆகும். இது விடயமாக, ''Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981", என்ற நூலின் 631 ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.

Part: 128 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

Goddess Pattini became a part of the judicial system in Lanka, defendants had to take oath on Hallamba to profess that they tell only the truth. No oath is more dreaded by the Sinhalese peasants than that on the Hallamba. The Sinhalese followed the tradition of the festival started by the king Kajavahu in honour of Pattini, Kannaki, until 1775 A. D. See the pages 21 to 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' for detail. A small quote from the page 22 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004' is: ‘Gaja Bahu brought from India the golden halamba or anklet of the goddess, copies of which are the symbols of her worship, and oaths are not infrequently taken on them in courts of justice. No oath is more dreaded by the Sinhalese peasant’.

The Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha, wanted to revive the almost extinct Buddhism in Lanka, and made arrangement with the Dutch to bring monks from Siam (Thailand) to perform the ordination on novice monks as there were no qualified monks to perform the ordination anywhere in Lanka. There were many missions sent Siam, and the last one was in the year 1745 A. D. While the mission was in Siam, the king Sri Vijaya Rajasimha died, and a new King Kirty Sri Rajasimha succeeded to the throne. The king of Siam required re-affirmation from the new king. There was delay, and the monks were sent from Siam in 1753. The monks came and established the Malwatta and Ascriya chapters in Kandy. These monks came from Siam, and that is why these two chapters are known as Siam Nikkayas. Till that time the prominent position was accorded to the Goddess Pattini in the Perahera procession. The intolerant monks who came from Siam objected to the king that the Dalada shall be in the forefront of the festival.

The tooth relic became prominent in the Perahera festival thereafter, only about two hundred and seventy years ago. There are four religious games, all intimately connected with the worship of Pattini, established in Lanka by the time of Gajabahu or shortly after his rule, called An Keliya, Dodan Keliya, Pol Keliya and Mal Keliya. See page 631 of Reference 'Ancient Ceylon by Henry Parker / This book had been first published in 1909 and was republished by the Asian Educational Service in 1981. Thereafter the AES had done 3 reprints, the last being 1999.'

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 129 தொடரும் / Will follow

துளி/DROP: 2084 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 128

https://www.facebook.com/groups/978753388866632/posts/34221694934145716/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 129

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 129 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

🪵 1. ஒரு கெலியா (கொம்பு விளையாட்டு)

இந்த விளையாட்டில், ஒரு உறுதியான கம்பம் (பெரும்பாலும் தென்னை மரத்தின் தண்டு) செங்குத்தாக அமைக்கப்படுகிறது. கொம்புகளைப் போன்ற ஒரு முள் குச்சியுடன் பொருத்தப்பட்ட இரண்டு அணிகள், கயிறுகளைப் பயன்படுத்தி தங்கள் குச்சிகளை கம்பத்தில் இணைக்கின்றன. பின்னர் அணிகள் ஒரு கயிறு இழுப்பதில் ஈடுபடுகின்றன, குச்சிகளில் ஒன்று உடையும் வரை இழுக்கின்றன. இந்த விளையாட்டு வலிமை மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது.

🥥 2. பொல் கெலியா (தேங்காய் விளையாட்டு)

பொல் கெலியாவில் இரண்டு அணிகள் பங்கேற்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேங்காய்களைக் கொண்டிருக்கும். வீரர்கள் தங்கள் தேங்காய்களை எதிரணி அணியினர் மீது வீசி, அவற்றை உடைக்கும் நோக்கில் விளையாடுகிறார்கள். எதிராளியின் அனைத்து தேங்காய்களையும் வெற்றிகரமாக உடைக்கும் அணி வெற்றி பெறுகிறது. இந்த விளையாட்டு துல்லியத்தையும் உத்தியையும் சோதிக்கிறது.

🍊 3. தோடன் கேலியா (தோடம்பழம் / ஆரஞ்சு விளையாட்டு)

பொல் கேலியாவைப் போலவே, தோடன் கேலியாவும் தேங்காய்களுக்குப் பதிலாக தோடம்பழங்களைப் பயன்படுத்துகிறது. விதிகள் மற்றும் நோக்கங்கள் அப்படியே இருக்கின்றன, எதிராளியின் பழங்களை உடைப்பதில் கவனம் செலுத்துகின்றன. தோடம்பழங்களின் மென்மையான தன்மை காரணமாக இந்த மாறுபாடு வேறுபட்ட அளவிலான சவாலைச் சேர்க்கிறது.

🌸 4. மல் கேலிய (மலர் விளையாட்டு)

மல் கேலியத்தைப் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் குறைவாக இருந்தாலும், இது பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு மலர் விளையாட்டு என்று அறியப்படுகிறது. இது அழகு மற்றும் பக்தியை வலியுறுத்தும் ஒரு சடங்கு அல்லது போட்டி சூழலில் பூக்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியிருக்கிறது.

அந்தக் கால சிங்களவர்கள் பத்தினி தெய்வமான நல்லொழுக்கமுள்ள கண்ணகிக்கு ஒருபோதும் முழுமையான திருமண வாழ்க்கை அல்லது அதைப் போன்ற வாழ்க்கை இல்லை என்று வருத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் அவளை பால குருன்னன்சே அல்லது பலங்காவுக்கு [Pala Gurunnanse or Palanga] திருமணம் செய்து, அவளை தங்களில் ஒருவள் ஆக்கினார்.

அதாவது, சிங்கள நாட்டுப்புறக் கதைகளில், பத்தினி தேவி (தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் தெய்வீக வடிவம்) மற்றும் அவரது கணவர் பலங்கா (பால குருன்னன்சே என்றும் அழைக்கப்படுகிறார்) ஆகியோரின் கதை உள்ளூர் கலாச்சார மற்றும் மத சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தழுவல் அவர்களின் உறவைக் குறிக்கும் பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.

கீழே காட்டப்பட்டுள்ள படம், இடது மார்பகம் இல்லாத பத்தினி தெய்வம், அவளுடைய இலங்கை கணவர் பலங்காவுடன் [Palanga]. இது பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த மரச் சிலை. இது நிகவேவாவில் உள்ள ஆரம்பகால மடாலயத்தின் குகைகளில் [caves at the early monastery at Nikawaeva] ஒன்றில் காணப்படுகிறது; ''Ancient Ceylon by Henry Parker ' என்ற நூலின் பக்கம் 631 ஐப் பார்க்கவும்.

ஹென்றி பார்க்கரின் பண்டைய இலங்கையில், "நிகாவேவா" ["Nikawaeva"] என்று குறிப்பிடப்படும் இடம் இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள நிகாவேவாவுடன் [Nikawewa] ஒத்திருக்கிறது. இந்தப் பகுதி மொரகொல்லாகம மற்றும் மடகல்ல [Moragollagama and Madagalla] நகரங்களுக்கு இடையில் நிகாவேவா மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால புத்த மடாலயமான ஸ்ரீ நாகலா ராஜமஹா விஹாரயாவின் தாயகமாகும். குறிப்பாக, இந்த மடத்தின் குகைகளுக்குள் இரண்டு பழங்கால மரச் சிலைகளை பார்க்கர் ஆவணப்படுத்தியுள்ளார். இந்த சிலைகளில் ஒன்று பத்தினி தேவியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அவரது இடது மார்பகம் இல்லாமல், பலங்காவுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில், கோவலனின் முன்னாள் காதலி அல்லது துணைவியான மாதவி ஒரு பெண்ணைப் பெற்றெடுத்தாள். மேலும் கடல் தெய்வமான மணிமேகலை பற்றிய பல குறிப்புகள் காவியங்களில் உள்ளன. மாதவி தனது மகளுக்கு கடல் தெய்வமான மணிமேகலை என்ற பெயரையே சூட்டினாள். இராசாவலியாவும் (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) கூட, அதே பெயரில் ஒரு கடல் தெய்வத்தை மணிமேகலை என்று குறிப்பிடுகிறது. இராசாவலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரளயத்தின் போது இந்த கடல் தெய்வம் விகாரதேவியைக் காப்பாற்றி, தனது வருங்கால கணவரான துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் தந்தையிடம் அழைத்துச் செல்கிறது. மாதவி தனது மகள் ஒரு துறவியாக இருப்பதை விரும்பவில்லை. தலையை மொட்டையடித்து அவளை ஒரு புத்த கன்னியாஸ்திரியாக்கினாள். மணிமேகலையின் உயிரியல் தாயான மாதவி, கோவலனின் துயரக் கொலைக்குப் பிறகு மணிமேகலையை கண்ணகியின் மகள் என்று குறிப்பிடுகிறாள்; தனது சொந்த மகள் என்று அல்ல. மாதவி, நடனத்துடனான தமது தொடர்பை அழிக்க விரும்பியிருக்கலாம், இதனால் தனது உயிரியல் மகளை கண்ணகியின் மகள் என்று அழைக்க விரும்பினாள் என்று நினைக்கிறன்.

"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்"

தமிழில் உள்ள மேற்கூறிய ஐந்து வரிகள், சிலப்பதிகாரத்தின் 15வது காண்டத்தின் 115 முதல் 119 வரையிலான வசனங்களாகும். அதாவது:

'அப்போது, நகர வாயில்களுக்கு வெளியே தர்மம் செய்து கொண்டிருந்த, அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய துறவிகளின் அறையில் வைக்கப்பட்டிருந்த, பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு வழக்கமாக, முறையான பாற்சோறு படைத்து காணிக்கை செலுத்திவிட்டு திரும்பி வந்த, இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியடிகளைக் கண்டு, அவருடைய அடிகளை வணங்கினார்’ என்கிறது.

மேற்கண்ட வசனங்களும் மொழிபெயர்ப்பும் தமிழ் காவியங்கள் மற்றும் இலங்கை நாளிதழ்களுக்கும் [நாளாகமம்களுக்கும்] இடையே இயங்கும் பொதுவான தொடர்புகளைக் காட்ட இங்கு நாம் தந்துள்ளோம். மொழிபெயர்ப்பில் உள்ள இயக்கினி அல்லது இயக்கி என்ற சொல் இலங்கை நாளிதழ்களில் யட்சப் பெண்ணைக் அல்லது இயக்கர் சமூக பெண்ணைக் [the female of the Yakkhas] குறிக்கிறது. இலங்கை நாளிதழ்களின்படி யக்காக்கள் அல்லது இயக்கர்கள் துணை மனிதர்கள். இருப்பினும், இது தமிழ் காவியத்தில் கடவுள்கள் மற்றும் தெய்வங்களை (யக்கினி / Yakkini) குறிக்கிறது. இலங்கை நாளிதழ்களின் துறவி ஆசிரியர்களின், மத சகிப்பின்மை [Religious intolerance], தமிழ் காவியத்தின் தெய்வீக பிம்பத்தை ஒரு துணை மனிதனாக கேவலப்படுத்துது அல்லது தரம் குறைக்குது. எச். பார்க்கர் தனது "பண்டைய இலங்கை" [H. Parker in his book, Ancient Ceylon] என்ற புத்தகத்தில், இந்தியாவில் உள்ள சைவ கோயில்களில் இயக்கர்களை காவல் தெய்வங்கள் என்று கூறுகிறார்கள் என பதிவிட்டு உள்ளார்.

Part: 129 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

The Sinhalese of that time must have felt sorry for the Pattini Goddess, virtuous Kannaki, that she never had a consummated married life or similar. Therefore, they had her married to Pala Gurunnanse or Palanga. The picture shown below is the Goddess Pattini without her left breast along with her Ceylonese husband Palanga. This is the wooden statue of eleventh century A. D., and found in one of the caves at the early monastery at Nikawaeva; see plate facing page 631 of Reference ''Ancient Ceylon by Henry Parker '.

In the mean time Madhavi, former consort of Kovalan, gave birth to a girl. There are many references to the sea goddess, Mannimeghalai, in the epics. Madhavi named her daughter with the name of the sea goddess Mannimeghalai. Rajavaliya also makes reference to a sea goddess by the same name, Mannimeghalai. This sea goddess saves the Viharadevi during the deluge referenced in the Rajavaliya, and takes her to her future husband, the father of Duttha Gemunu. Madhavi didn’t want her daughter to be a nautch, and shaved her head and made her a Buddhist nun. Madhavi, the biological mother of Mannimeghalai, refers Mannimeghalai as the daughter of Kannaki; not as her own daughter after the tragic murder of Kovalan. Madhavi, perhaps, wanted to erase her connection with dancing to call her biological daughter as the daughter of Kannaki.

"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
கவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்"

The above five lines in Tamil are the verses 115 to 119 of Canto 15 of the Epic Silappathikaram. The translation is : Quote ‘Just then, Matari, an old woman of the cowherd caste, who was returning after making the usual offering of milk to the flower eyed Yakkini, enshrined outside the city gates in the quarters of monks practising Dharma, saw and prostrated herself before the saint Kavundi’.

The above verses and the translation are given to show the common threads run among the Tamil epics and the Ceylon chronicles. The word Yakkini in the translation is the female of the Yakkhas in the Ceylon chronicles. Yakkhas are sub-humans as per the Ceylon chronicles. It represents, however, gods and goddesses (Yakkini) in the Tamil epic. The religious intolerance of the monkish authors of the Ceylonese chronicles distorted the godly image of the Tamil epic into a sub-human being. H. Parker in his book, Ancient Ceylon, says that Yakkhas are guardian deities in Saiva temples in India.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 130 தொடரும் / Will follow

துளி/DROP: 2086 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 129

https://www.facebook.com/groups/978753388866632/posts/34239285532386656/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 130 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை"

இலங்கை வரலாற்று நூல்கள் நாகர்களை மனித மற்றும் பாம்பு வடிவம் கலந்த உயிரினங்கள் என விவரிக்கின்றன. ஆனால், இது ஒரு புராண வர்ணனை அல்லது தவறான புரிதல் எனக் கருதுகிறேன். ஏனெனில் நாகர்கள் உண்மையில் காந்தாரதேசம் (Ghandhara / Northern Pakistan and Afghanistan) முதல் இலங்கை வரை பரந்த பரப்பில் வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட, நன்கு வளர்ந்த சமூகமாகம் ஆவார்கள். கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, நாகர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதற்கும், காலப்போக்கில், அவர்கள் ஆரம்பகால தமிழ் மக்களுடன் இணைந்திருக்கலாம் என்பதற்கும் கணிசமான சான்றுகள் உள்ளன. இது வரலாற்று, தொல்பொருள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப் படுகிறது அல்லது ஆதரிக்கப்படுகிறது.

பழமையான தமிழ் காவியம் சிலப்பதிகாரம் நூலில், புகார் (அல்லது காவேரிப்பட்டினம்), சோழ நாட்டின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. அது கடல் வெள்ளத்தால் (சுனாமி) சேதமடைவதற்கு முன்பு அல்லது அழிவதற்கு முன்பு, தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரமாக இது இருந்தது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் / 1. மங்கல வாழ்த்துப் பாடலில், புகார் நகரம் நாக நாட்டின் நீண்ட நாக நகரத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது நாகர்கள் உயர்ந்த நாகரிகத்தினை கொண்டவர்கள் அல்லது நன்கு வளர்ந்த மக்கள் என்ற புரிதலை வெளிப்படுத்துகிறது. இது இலங்கை வரலாற்று நூல்களில் காணப்படும் 'பாதி மனிதர் பாதி பாம்பு உருவம் கொண்ட மனிதர் அல்லாத உயிரினம்' என்ற கருத்தை முற்றிலும் புறக்கணிக்கிறது. இதை கட்டாயம் ஒரு வகையான பண்டைய கால இனவெறியின் வெளிப்பாடு என்று கூறலாம் என்று உணர்கிறேன்.

"ஆங்கு,
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங் குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்,
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார், உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.

அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்,"

[1. மங்கலவாழ்த்துப் பாடல்]

இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை என்கிறது.
அதாவது ‘நெடிய நாக நகரோடும் நாக நாட்டுடனும் வைத்து எண்ணத்தக்க நீண்ட போகமும் புகழும் பொருந்திய புகார் நகர்’ என்கிறது

கீழே உள்ள பாடல் வரிகள் சிலப்பதிகார காவியத்தில் இந்திர விகாரை என்ற பெயரில் புத்த விகாரையைப் பற்றி குறிப்பிடுகின்றன. சீன சமயப்பயணர்கள் [யாத்ரீகர்கள்] இதை பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். கோவலனின் பெற்றோர் தங்கள் செல்வம் மற்றும் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக அளித்து விட்டு இந்த விகாரையில் ஓய்வு பெற்றனர். தமிழர்கள் அந்த நேரத்தில் பல மதங்களைப் பின்பற்றி இருந்தனர். உதாரணமாக, சமணம், புத்தம், சைவம் மற்றும் பல. எனினும் கி.பி ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் சைவ மதம் எழுச்சி கொண்டது. எனவே பௌத்தர்கள் பெருமளவில் இலங்கையில் முகாமிட்டிருக்க வேண்டும். சமணம் கிட்டத்தட்ட அதன் அடித்தளத்தை இழந்துவிட்டது. சைவமும் வைணவமும் மீண்டும் காலூன்றின. ஆனால், இவை இரண்டும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால், இந்து மதத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டது அல்லது இணைக்கப்பட்டது, உண்மையில் அவர்களின் நிர்வாக, அரசியல் மற்றும் சமூக உத்திகளின் [administrative, political, and social strategies] காரணத்தால் ஆகும். இது துணைக் கண்டத்திற்குள்ளும் உலக அளவிலும் இந்திய மதங்கள் எவ்வாறு அன்று அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காட்டுகிறது. அதாவது, சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), சக்தி (தேவி வழிபாடு) மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மரபுகளை ஒரே இந்து சமயம் என்ற குடையின் கீழ் தொகுப்பதன் மூலம், அவர்கள் மக்கள்தொகையை சிறப்பாக வகைப்படுத்தலாம், வரி விதிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்பதால் இருக்கலாம்? சுருக்கமாக, இது அவர்களின் வசதிக்காகவோ அல்லது அவர்களின் அறியாமையினாலோ நடைபெற்றது என்று கருதலாம்.

"அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி"

[10. நாடுகாண் காதை]

பாம்பின்மீது பள்ளிகொண்டிருந்த மணிவண்ணன் கோயிலை வலப்புறமாகச் சுற்றி வந்தனர். ஐந்து முரசுகளுடன் பசுமையான இலைகளைக் கொண்ட அரச மரத்தடி நிழலில் இருந்து அறம் சொன்ன அறவோன் புத்தனின் மாணவர்கள் அறம் உரைக்கும் ஏழு இந்திர விகாரைகள் வழியாகச் சென்றனர் என்கிறது இந்த பாடல் வரிகள்.

Part: 130 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai"

The Ceylon chronicles depicts Nagas as kind of semi human semi snake variety. Nagas must be people living in the East or to the east of India, and a well developed community known from Ghandhara (Afghanistan) to Ceylon. Ceylon can also be considered east of Tamil Nadu. The ancient city of Puhar was very famous in the olden days and it was then the capital of Chola country. It must have been damaged during a deluge, perhaps due to Tsunami. It was the grandest city in the southern India before it was damaged by the deluge. In the verses given below, in the Epic Silappathikaram, the city of Puhar is compared with the lengthy Naga city of the Naga country. The few verses below are the comparison of the City of Puhar with the Naga city. These verses are in the Canto 1 of the Tamil Epic Silappathikaram. Nagas are well developed people as per this Tamil epic, but they are half snake and half human in the Ceylon chronicles, kind of ancient day racism.

அதனால்,
நாகநீள்நகரொடுநாகநாடு-அதனொடு
போகம், நீள்புகழ்மன்னும்புகார்-நகர்அது-தன்னில்

The above lines can be summarised as ‘The city of Puhar is comparable with the lengthy Naga city and the Naga country’.

The verses below mention about a Buddhist Vihara with the name Indra Vihara in the Epic Silappathikaram. Chinese pilgrims mention this as built by Mahendra, the younger brother of the Emperor Asoka. Parents of Kovalan donated all their wealth and belongings and retired to this Vihara. The Tamils were following many religions; Jainism, Buddhism, Saivism and many more. There was Saiva upheaval in the sixth and seventh centuries A. D. and the Buddhists must have decamped to Ceylon en-mass. Jainism almost lost its footing. Saivism and Vainavam took foothold, both of which were bracketed into Hinduism by the eighteenth century British Colonial officers for their convenience or because of their ignorance.

பணைஐந்துஓங்கியபாசிலைப்போதி
அணிதிகழ்நீழல்அறவோன்திருமொழி
அந்தர-சாரிகள்அறைந்தனர்சாற்றும்
இந்திர-விகாரம்ஏழ்உடன்போகி-

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி / Part: 131 தொடரும் / Will follow

துளி/DROP: 2088 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 130

https://www.facebook.com/groups/978753388866632/posts/34257765697205306/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.