Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`புலிகளுடன் பேசுவதற்கு அரசு தயார் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டோம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`புலிகளுடன் பேசுவதற்கு அரசு தயார் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டோம்'

[31 - October - 2007]

* சர்வதேச சமூகத்தின் ஆதரவு முக்கியமானதல்ல பசில் ராஜபக்ஷ தினக்குரலுக்கு விசேட செவ்வி

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு தயாரெனவும் ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டாதெனவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை `தினக்குரல்'க்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு;

ஜனாதிபதி தேர்தலின்போது புலிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறுவது பொய். நான் ஒருபோதுமே கிளிநொச்சிக்கு சென்றதில்லை. ஆனால், நான் விரைவில் கிளிநொச்சி செல்லவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

நான் கிளிநொச்சி வந்து புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்களுடன் பேச்சு நடத்தியதாக புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் கூறியிருப்பாரென நான் ஒருபோதுமே நம்பவில்லை. ஆனால், நான் சிறு வயதில் யாழ்.குடாநாட்டிற்கு சென்ற அனுபவமுண்டு.

அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதலை நாம் எதிர்பார்த்திருந்தோம். பயங்கரவாத அமைப்பு இவ்வாறானதொரு தாக்குதலை அதிரடியாக மேற்கொள்ளும். ஆனால், அவர்களினால் இறுதி யுத்தத்தில் வெற்றிபெறமுடியாது.

இதற்கு நான் ஹிட்லரை உதாரணமாக குறிப்பிடுகிறேன். அவருக்கேற்பட்ட நிலையே பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஏற்படும்.

அநுராதபுர தாக்குதல் எமக்கு பொருளாதார ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மையே. எனினும் இந்தத் தாக்குதல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தவில்லை. எமது அரசாங்கம் மீதும் முப்படையினர் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

சவாலை சந்திக்க தயாரித்லை

இதன்போது புலிகளின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள அரசு தயாராவென கேட்டபோது,

புலிகளின் சவாலை ஏற்க அரசாங்கம் தயாரில்லை. அவர்கள் சமாதான முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தால் அதனை ஏற்கத் தயாராகவுள்ளோம். ஆனால், புலிகளின் எத்தகைய சவால்களுக்கும் அரசாங்கம் பயந்து விடவுமில்லை.

புலிகளை தோற்கடிப்போமென அரசு ஒருபோதும் கூறவில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமென்றே அரசாங்கம் மீண்டும் மீண்டும் அழுத்தமாக கூறுகின்றது.

சமாதானம் நீண்ட தூரத்திலில்லை. அது மிகவும் கிட்டிய தூரத்திலேயே உள்ளது.விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் நிபந்தனையற்ற பேச்சில் ஈடுபட தயாராகவுள்ளது. நாங்கள் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால், புலிகளின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிந்துவிட மாட்டோம். இதுவே எமது நிலைப்பாடு.

இந்திய அரசு எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை

இதேநேரம், இந்தியாவின் தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவான அரசியல் சக்திகளின் செயற்பாடு குறித்து நான் எத்தகைய கருத்துகளையும் கூற விரும்பவில்லை. எமக்கு இந்திய மத்தியரசு எத்தகைய அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து இந்தியா அவதானம் செலுத்தி வருகிறது. அதனை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இந்தியா எத்தகைய உதவிகளையும் வழங்கவேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்தியா எமக்கு தற்போது சகல உதவிகளையும் வழங்கி வருகிறது. எமக்கு அதுபோதும் என்றார்.

ஜனாதிபதியை சர்வதேசம் புறக்கணிக்கவில்லை

இதேவேளை, இலங்கையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சர்வதேச சமூகம் புறக்கணிக்கிறதா? இதுவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷைக்கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சந்திக்க முடியவில்லையே. ஆனால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது பல தடவை சர்வதேசத் தலைவர்களை அவர் சந்தித்துள்ளாரே எனக் கேட்ட போது;

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எனது சகோதரருக்கும் நிறைய வேறுபாடுண்டு. நாட்டு மக்களினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணிக்கப்படவில்லை. சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைப்பதை அரசாங்கம் முக்கியமானதாகக் கருதவில்லை.

எமது தேவைகளைப் பொறுத்தே சர்வதேச சமூகத்தின் ஆதரவு குறித்து தீர்மானிப்போம். எமக்கு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியமாயிருந்தது. எனவே, அவர்களுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். தற்போதும் சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம்.

சர்வதேச சமூகத்தின் முன்மொழிவுகளுக்கு ஏற்ப செயற்பட நாம் தயாரில்லை. லூயிஸ் ஆர்பர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஆகியோர் இலங்கையில் மனித உரிமைகள் அலுவலகம் அமைக்கப்படவேண்டுமெனக் கூறலாம். ஆனால், அதனை நாங்களே தீர்மானிப்போம்.

எத்தகைய தீர்மானங்களையும் எவரும் எம் மீது திணிக்கமுடியாது. நாம் இறைமையுள்ள சுயாதீன நாடு. லூயிஸ் ஆர்பர் பிறக்கு முன்னே நாம் மனித உரிமைகளை பின்பற்றி வருகிறோம்.

பிரதமராக மாட்டேன்

பிரதமராகும் எத்தகைய நோக்கமும் என்னிடமில்லை. சுதந்திரக் கட்சியில் பல மூத்த தலைவர்கள் உள்ளனர். தலைவர்களுக்கு இங்கு பற்றாக்குறை இல்லை என்றார்.

சரி. ஜனாதிபதி உங்களுக்கு பிரதமர் பதவியை வழங்கினால் என்ன செய்வீர்கள் எனக்கேட்டபோது,

நிச்சயமாக பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன். ஜனாதிபதி எனக்கு பிரதமர் பதவியை தரவும் மாட்டார். நான் அப்பதவியை எடுக்கவும் மாட்டேன் என்றார்.

மேலும் தனக்கு இ.தொ.கா.வுடன் எத்தகைய முரண்பாடுகளும் இல்லையென குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ முத்துசிவலிங்கம் இ.தொ.கா. தலைவராக பதவியேற்ற பின்னர் தானே அவருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததாகவும் ஆறுமுகன் தொண்டமானின் தந்தையார் இந்தியாவில் மரணமானபோது தானே அங்குசென்று அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தான் வெளிப்படையாகவே கருத்து தெரிவிப்பவன் என்றும் இ.தொ.கா.வும் அவ்வாறே செயற்பட வேண்டுமென விரும்புவதாகவும் முத்து சிவலிங்கம் மூத்த அரசியல்வாதி தொழிற்சங்க தலைவரென்ற வகையில் அவரை தான் பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வதற்கு பின்னணி காரணமேதாவது உண்டாவென அவரிடம் கேட்டபோது,

ஜனாதிபதி உத்தரவிடுகின்றமையாலே நான் அங்கு செல்கிறேன் மக்களுடன் தொடர்பு கொள்கிறேன். கிழக்கு மக்களுடன் எனக்கு உறவு ஏற்பட்டுள்ளது. நான் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு இறுதியாக சென்ற தினம் ஞாபகமில்லை. ஆனால், கிழக்கு மாகாணத்திற்கு சென்று சேவை புரிந்த தினங்களை அப்படியே ஞாபகம் வைத்துள்ளேன்.

தமிழ்க் கூட்டமைப்பு கிழக்கே ஏன் செல்வதில்லை?

கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் செல்ல பாதுகாப்பை கோருகின்றனர். ஏன் பாதுகாப்பு வழங்க மறுக்கிறீர்கள் எனக் கேட்டபோது,

கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு யாரும் சென்றுவர முடியும். நானே செல்கிறேன் என்றால் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களினால் அங்கு செல்ல முடியாதென பதில் கேள்வி எழுப்பிய அவர் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுக்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை என்றார்.

காணாமல் போதல், படுகொலைகள் ஊடகச் சுதந்திரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் குறைந்துள்ளன. படுகொலைகளையும் கட்டுப்படுத்தியுள்ளோம். இந்தியாவில் சில ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஊடகச் சுதந்திரம் குறித்தும் உங்களுக்கு தெரியும்.முன்னர் ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டதால் ஒருவர் மரணமடைந்தாரென செய்தி வெளியிட்டமைக்காக ஒரு பத்திரிகைக்கே சீல் வைத்தார்கள். ஆனால், தற்போது பெரும்பாலான அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் அரசுக்கு எதிராகவே செயற்படுகின்றன. ஆனால், நாம் எவற்றுக்கும் சீல் வைக்கவில்லை என்றார்.

தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி

செவ்வியின் இறுதியில் வட மாகாண தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியை கூற விரும்புவதாகத் தெரிவித்த அவர்;

வட பகுதி தமிழ் மக்கள் குறித்து ஜனாதிபதி மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மனிதாபிமான தேவைகள் பற்றியும் ஆர்வம் செலுத்தி வருகின்றோம். எமது ஜனாதிபதி மீதும் அரசாங்கம் மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு நாம் வடக்கு மக்களை கோருகிறோம். தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் சுதந்திர உரிமையை அவர்களுக்கு விரைவில் பெற்றுக்கொடுப்போம்.

எமது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஒத்துழைக்குமாறும் அவர்களை கோருகிறோம். சமாதானத்தை அடையும் காலம் வெகு தூரத்தில் இல்லையெனவும் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/10/31...s_page39318.htm

பேசிப் பேசியெ இப்படிப் பேசியே.... தமிழ் இனத்தைக் கருவொடு அழிக்க மறுபடியும் ஆயத்தமா? அல்லது பிடரியில் வாங்கிய அடியில் நிலைகுலைந்ததை சமாளிக்க இந்த பேச்சுவார்த்தை நாடகமா? உங்கள் அனைவரிடமும் பேசியது போதும், பட்டதும் போதும் இனி புலிகள் அவர்களின் வார்த்தையால் பேசுவார்கள.; அதன் பின் பார்க்கலாம் யாருடன் எப்படி, எங்கிருந்து பேசவேண்டும் என்று.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.