Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும் விளையாட்டின் மூலம் தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்ள முடிந்துள்ளது - பிரதமர் ஹரிணி

Published By: DIGITAL DESK 2

23 JUN, 2025 | 11:46 AM

image

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சுகததாச விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற பாடசாலை நீச்சல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 50வது பாடசாலை வருடாந்திர  நீச்சல் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பிரதமர் பல்வேறு பிரிவுகளின் நீச்சல் மற்றும் நீர் மூழ்கும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதனுடன், ஒட்டுமொத்த ஆண்கள் நீச்சல் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து 20 வருடங்களாக மருதானை புனித ஜோசப் கல்லூரியும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு மகளிர் கல்லூரியும், ஒட்டுமொத்த கலப்பு பாடசாலைச் சாம்பியன்ஷிப்பை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் வென்றன.

அதேபோல் நீர் மூழ்கும் பிரிவில் ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு பேராயர் கல்லூரி அணியும், ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கொழும்பு றோயல் கல்லூரியும் வென்றன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"நாம் விளையாட்டில் வெற்றியோடு தோல்வியையும் சமமாக அனுபவித்து தாங்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் முதலில் நமது பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

கல்வி ஒரு இம்சையாக மாறிவிட்ட காலத்திலும், விளையாட்டின் மூலம் தலைமைத்துவம், அணி உணர்வு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மிகவும் முக்கியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

இன்றைய இந்த திறமைகள் என்னை வியக்கவைத்தன. உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது நாட்டின் குழந்தைகளின் திறமைகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறன.

வரலாற்றில் எப்போதும் இலங்கையின் நாமத்தை சர்வதேச அளவில் ஓங்கச் செய்ய நமது விளையாட்டு வீரர்களால் முடிந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நான் அதனையும் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.

இன்று என் முன்னால் இருக்கும் உங்களுக்கும் அவ்வாறு நமது நாட்டின் பெயரை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை நீர் விளையாட்டுச் சங்க உறுப்பினர்கள், அதிபர்கள் மற்றும் நெஸ்லே லங்கா தனியார் நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-23_at_09.39.37__2WhatsApp_Image_2025-06-23_at_09.39.33__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.33.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.34__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.36__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.36.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.35__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.35.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.37.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.37__1WhatsApp_Image_2025-06-23_at_09.39.38.jpWhatsApp_Image_2025-06-23_at_09.39.34.jp

https://www.virakesari.lk/article/218186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகள் நீச்சல் போட்டியில் முடிசூடா மன்னன் புனித சூசையப்பர் கல்லூரி; 20ஆவது தடவையாக சம்பியனானது

23 JUN, 2025 | 03:05 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்று வந்த 50ஆவது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வயதுநிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி 20ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சூடி நீச்சலில் முடிசூடா மன்னன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கான கனிஷ்ட பிரிவிலும் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவிலும் புனித சூசையப்பர் கல்லூரி சம்பியன் ஆனது.

கனிஷ்ட பிரிவில் 272 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி சிரேஷ்ட பிரிவில் 290 புள்ளிகளைப் பெற்றது.

இதற்கு அமைய மொத்தமாக 562 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி 294 புள்ளிகள் வித்தியாசத்தில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஒட்டுமொத்த நிலையில் ஆனந்த கல்லூரி 268 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 238.50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

IMG_1268__2_.jpg

அகில இலங்கை பாடசாலைகள் நீர்நிலை விளையாட்டுத்துறை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 50ஆவது வருடாந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வயது நிலை நீர்நிலை விளையாட்டு சம்பியன்ஷிப்புக்கு நெஸ்லே மைலோ பூரண அனுசரணை வழங்கியது.

பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதம அதிதியாகவும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பேர்னி ஸ்டெஃபான்  சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு பிரதான பரிசுகளை வழங்கினர்.

வயதுநிலை சம்பியன் பாடசலைகள்

10 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்)

12 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (76 புள்ளிகள்)

14 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (120 புள்ளிகள்)

16 வயதின் கீழ்: புனித சூசையப்பர் (95 புள்ளிகள்)

18 வயதின் கீழ்: புனித பேதுருவானவர் (87 புள்ளிகள்)

20 வயதின் கீழ்: ஆனந்த (143 புள்ளிகள்)

தனிநபர் சம்பியன்கள்

14 வயதின் கீழ்: ஹஷேல் செனரத் (கொழும்பு கெட்வே) 30 புள்ளிகள்

16 வயதின் கீழ்: ஜேடன் டி சில்வா (ஸ்டஃபர்ட் இன்டர்நெஷனல்) 2 புதிய சாதனைகளுடன் 40 புள்ளிகள்

18 வயதின் கீழ்: எம்.எவ். முஹம்மத் (ஸாஹிரா) 3 புதிய சாதனைகளுடன் 45 புள்ளிகள்

20 வயதின் கீழ்: நிக் டி சில்வா (வத்தளை லைசியம்) 2 புதிய சாதனைகளுடன் 40 புள்ளிகள்

Overall_Boys_Team_Champions_Swimming_St.

https://www.virakesari.lk/article/218220

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.