Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் ; இவர்களாவது நீதியை பெற்றுதருவார்கள் என நம்புகின்றேன் - லலித்தின் தந்தை

Published By: RAJEEBAN

29 JUL, 2025 | 03:55 PM

image

லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள  லலித்தின்  தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித் குகனிற்கும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன, முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம்.

இதிலாவது நல்லது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாளைமறுதினம் வழக்கு உள்ளது வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

லலித் குகன் மாத்திரமல்ல பதினைந்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தவர்கள் பரிதவிக்கின்றனர்.

அவங்களிற்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டும், எங்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும்.

லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும், இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்கவேண்டும். எனது பிள்ளைக்கும் ஏனையவர்களிற்கும் நீதி கிடைக்குமாக இருந்தால் நான் இந்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பேன்.

https://www.virakesari.lk/article/221282

  • கருத்துக்கள உறவுகள்

லலித் குகன் என்பவர்கள் யார்? இருவரா ஒருவரா? ஒரு இழவும் எனக்கு புரியவில்லை!!!

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

லலித் குகன் என்பவர்கள் யார்? இருவரா ஒருவரா? ஒரு இழவும் எனக்கு புரியவில்லை!!!

இருவர், 2009 இன் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

லலித் குகன் என்பவர்கள் யார்? இருவரா ஒருவரா? ஒரு இழவும் எனக்கு புரியவில்லை!!!

லலித் மற்றும் குகன் : காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர்

2011 டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியங்களை வழங்குவதற்காக, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றமும் அவ்வாறான அறிவிப்பினை விடுத்திருந்தது. ஆனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இதன் விளைவாக, அவர் ஜனாதிபதி என்ற தகுதியில் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை.

இப்போது அவர் ஜனாதிபதியாக இல்லை என்று, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அவருக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல்களை பரிசீலித்ததோடு, 2024 டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரசியல் செயற்பாட்டாளர்கள். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து, பின்னர் முன்னணி சோசலிச கட்சி என்று அறியப்பட்ட ஒரு பிரிவுடன் அவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு இளைஞர்களும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இறுதியாக காணப்பட்டனர். போரினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். காணாமல் போனோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக லலித் நீண்டகாலமாக பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார்.

டிசம்பர் 9ஆம் திகதி மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து இருவரும் கடைசியாக வெளியேறியதாக ஊடகவியலாளர் ஷாலிகா விமலசேன குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. குகனின் மனைவி டிசம்பர் 14 அன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தனது கணவரின் மோட்டார் சைக்கிள் காணப்பட்டதை கண்டுள்ளார். எனினும், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து பொலிஸாரும் கிராம மக்களும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். டிசம்பர் 13ஆம் திகதி கோப்பாய் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குகனின் மனைவிக்கு பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 9ஆம் திகதி அதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தரிடம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலிக்கு  அருகில் வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த குழுவொன்று லலித் மற்றும் குகன் ஆகியோரை தடுத்து நிறுத்தியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேலதிக விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஒருவேளை குற்றவாளிகளை அறிந்திருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் அவர்களை குறிப்பிடுவதற்கு பயந்து முன்வராமல் இருந்திருக்கலாம்.

அவிசாவளையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த லலித், நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியில் முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். அவருடன் காணாமல் போன குகன் முருகானந்தனும் அரசியல் செயற்பாட்டாளரும் ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். குகன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார். ஆனால் 1999 ஆம் ஆண்டில் அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹாவில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாக உள்ள வருண தீப்தி ராஜபக்ஷ, டிசம்பர் 9, 2021 அன்று பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டபோது இந்த காணாமல் போன விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார் –

லலித் காணாமல் போன சில நாட்களுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை குறித்து நான் பாரிய நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன். அது என் மனதை கனக்கச் செய்தது. அந்த நேரத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர் நண்பர்கள், தலைமறைவாக இருந்து, உதுல் பிரேமரத்னவுக்கும் (வழக்கறிஞரும் ஆர்வலருமான) எனக்கும், லலித் மற்றும் குகன்  எங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவ்வப்போது தகவல் அளித்தனர். அந்தத் தகவல் வருத்தமளிப்பதாக இருந்தாலும், லலித் மற்றும் குகன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உதுலையும் என்னையும் எங்களுக்குத் தெரிந்த பல்வேறு அமைப்புகளையும் தனிநபர்களையும் தொடர்பு கொள்ளத் தூண்டியது. ஆளுநராகவும், பின்னர் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்த ராஜித் கீர்த்தி தென்னகோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.”

2009 டிசம்பர் 15 அன்று, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு இவ்வாறு கூறினார்: “லலித்குமாரும் குகன் முருகானந்தனும் காணாமல் போகவில்லை; அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. அவர்கள் விரைவில் பொலிஸ் அல்லது இராணுவத்தால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். எனினும் உறுதியளித்தபடி மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சோதனை நடத்தியது. ஆனால், அவர்களை அங்கு காணவில்லை.

லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், 15 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என பல செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். லலித் குமார் வீரராஜ், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.Lalith Kumar WeerarajLalith-Kumara-Weeraraju-2.jpg?resize=720Lalith Kumar Weeraraj

https://puja.lk/ta/story/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.