Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் திங்கட்கிழமை (11)  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் லசந்த அலகியவன்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இருதரப்பினரும் கலந்துரையாடிய பின்னர்,  நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 

21ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் கலந்துரையாடினோம். 

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த இடத்திற்கு வந்து, அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் கூட்டம் பற்றி நாங்கள் பேசினோம். 

கட்சியாக நமக்கென்ன கொள்கைகள் இருந்தாலும், இந்த முறை எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, அரசு மக்களை ஏமாற்றும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப் போகிறோம். 

எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் நாங்கள் பேசியுள்ளோம். இதில் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் பங்கேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 

21ஆம் திகதி என்ன நடக்கும் என்று பார்க்கலாம். ஜனாதிபதி நான்கரை மணிநேரம் பட்ஜெட் பற்றிப் பேசினார். அடுத்த வருடமும் அதே நான்கரை மணிநேரம் பேசத் தயாராக உள்ளார். ஆனால், அந்த நேரத்திலும் சொன்ன எதுவும் நிறைவேற்றப்பட்டிருக்காது. 

கெப் ரக வண்டிகள் வாங்குவதற்கு யார் கோரிக்கை விடுத்தார்கள்? எந்த அமைச்சகத்தில் இருந்து வாங்கப்படுகிறது? எங்கள் கட்சியின் மூன்று எம்.பி.க்களுக்கு இந்த கெப் ரக வண்டிகள் தேவையில்லை. 

அவற்றை நாங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்குவோம். ஆனால் அரசாங்க உறுப்பினர்கள்  கிராமத்திற்குச் சென்று சொல்ல வேண்டியது, எங்களுக்கு கெப் வண்டிகள்  கிடைத்தது என்று தான்.

மரக்கறி விவசாயிகள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அரிசி மாஃபியாக்களை நிறுத்த வந்த இவர்கள், இன்று அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

கொள்ளை நிலங்களைக் கையகப்படுத்தியவர்கள் எங்களுடன் இல்லை. கொள்கலன் கப்பல்களில் கொள்ளை சரக்கு கொண்டு வந்தவர்கள் எங்களுடன் இல்லை.

வெங்காயம் இறக்குமதி செய்தவர்கள் எங்களுடன் இல்லை. அரிசி இறக்குமதி செய்தவர்கள் எங்களுடன் இல்லை. 21ஆம் திகதி எங்களுடைய மேடையில் இதுபோன்ற  யாரும் இல்லை.

மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விவகாரத்தில் என் பெயரை எல்லா இடங்களிலும் இவர்கள் சம்பந்தப்படுத்தினார்கள். இறுதியில் அதுவும் பெலவத்தையிலேயே  முடிவுற்றது. 

பாதுகாப்பு செயலாளர் ஐந்து பேரை வெளிநாட்டில் இருந்து கைது செய்வதாகச் சொன்னார். இதைப் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டியதில்லை, இதனை நீதிமன்றில் சொல்லுங்கள் என்றார். 

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துமிந்த திஸாநாயக்க, 

முன்னாள் உறுப்பினர்கள் வந்தார்கள். 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் எங்கள் கூட்டம் பற்றிப் பேச வந்தார்கள். அரசு நாட்டு மக்களுக்கு பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த பொய்யை நாட்டு மக்களுக்கு நாங்கள் வெளிப்படுத்தப் போகிறோம்.

இந்த நேரத்தில் நாங்கள் தேர்தலைக் கோரவில்லை. கொள்கை ரீதியாக நாம் வேறுபட்டிருந்தாலும், இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இணைகிறோம், நாட்டு மக்களுக்காக, அரசின் அடக்குமுறை மற்றும் பொய்க்கு எதிராக.

அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இப்போது மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளன. அதனையும் பார்த்துக்கொள்வோம். அன்றைக்கும் அரசு மீண்டும் 3% ஆதரவுக்குத் தள்ளப்படுவார்கள்.

யாருமே தெருவுக்கு வராதீர்கள் என்று சொல்லும் இவர்கள்தான், அன்று இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைவரையும் தெருக்களில் இழுத்து வந்து, எல்லாவற்றையும் நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 

அரசு, 'எங்களை வீழ்த்த முடியாது, நாங்கள் வீழ மாட்டோம்' என்று கூறுகிறது. இப்போது யார் சொன்னார்கள், 'அவர்களை வீழ்த்துவோம்' என்று? நாங்கள் 'அவர்களை வீழ்த்துவோம்' என்று சொல்லவில்லை. அவர்கள் பயத்தில், 'எங்களை வீழ்த்த முடியாது' என்று கூறுகிறார்கள் என்றார்.

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.