Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திஸ்ஸமஹரகமவில் மேலதிகமாக ஒன்பது சோதனை நிலையங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 08-11-2007 19:42 மணி தமிழீழம் [தாயகன்]

திஸ்ஸமஹரகமவில் மேலதிகமாக ஒன்பது சோதனை நிலையங்கள்

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் பொதுமக்கள் காணாமல்ப் போதலும், பின்னர் உடலமாக மீட்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதால், அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக திஸ்ஸமஹரகம, ரன்மினித்தேனவில் மேலதிகமாக ஒன்பது சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் கடமையாற்றுவதற்கென 350 மேலதிக காவல்துறையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்பிரதே? காவல்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக அங்கு அனுப்பி வைக்கப்பட்ட மேலும் இருநூறு வரையிலான படையினரும், ஊர்காவல் படையினரும் தேடுதல் நடத்தி வருவதுடன், தமது தேடுதல் முடிவடையும்வரை பொதுமக்களை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.அம்பாறைக்கு நகர்த்தப்பட்ட மூவாயிரம் படையினரில் ஆயிரம் படையினர் ஏற்கனவே ஹம்பாந்தோட்டை எங்கும் தேடுதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி திஸ்ஸமஹரகம் காவல்துறை அலுவலகதத்திற்கு முன்பாக அந்தப் பிரதேச பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

pathivu.com

ரன்மினித்தென்ன பிரதேசத்தில் பாதுகாப்பு தீவிரம் 550 பொலிஸாரும் சிவில் படையினரும் கடமையில் பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

வீரகேசரி நாளேடு

ரன்மினித்தென்ன பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 9 பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 550 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களில் தலா 100 சிவில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ரண்மினித்தென்ன பிரதேசத்தை அண்மித்த காட்டுப் பகுதிகளில் ஐவர் வெடிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை கவனத்திற்கொண்டே இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.ஒசுவின்ன கிராமத்தை அண்டிய காட்டுப் பகுதியிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்கள் இருவரின் சடலங்கள் நேற்றுக்காலை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கேட்டபோதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:திஸ்ஸமஹாராம பிராந்தியத்திலுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் நேற்றுக்காலை நடத்தப்பட்டது. இதன்போது, குறிப்பிட்ட நாட்களுக்கு பொதுமக்கள் காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கு தேடுதல் நடத்தப்பட்டு,பொதுமக்கள் தொழில் செய்ய முடியுமான நிலைவரத்தை ஏற்படுத்தும்வரை பொறுமை காக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.பிரதேசங்?ளின் பாதுகாப்புக்காக 350 பொலிஸாரும் 200 சிவில் பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிமலவ, பேபுவ, உத்தகந்தர, கொரகஹஉல்பத்த, ருவன்வௌ, ரன்மனித்தென்ன, பலட்டுபான உள்ளிட்ட 9 கிராமங்களில் நேற்றுமுதல் விசேட பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பிரதேசங்களின் விபரங்களை திரட்டுவதற்காக விசேட பிரிவின் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரன்மினித்தென்ன பிரதேசத்தை அண்மித்த தமிழ் கிராமங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் பல்வேறு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Edited by கறுப்பி

கிழக்கில கொலைகாரர் சுதந்திரமாக நடமாடுகிறார்களே யார் செய்தாலும் போரின் வலி சிங்களவன் உணரவேண்டும் அதுவும் தெற்கு சிங்களவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.