Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும்

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகி யாழ் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்று யாழ். மாவட்டச் செயலக வாயிலை மூடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு முதல் நெடுந்தீவு வரையான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் அகிலனை நேரில் சந்தித்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

https://akkinikkunchu.com/?p=351890

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளியால் பாதிக்கபட்ட இலங்கைக்கு இந்தியா உதவியது தானே என்ற துணிவில் இந்திய மீனவர்கள் மீன் களவு எடுக்க வரக்கூடாது. ஏற்கெனவே நிறைய இலங்கை கடல் வளத்தை கொள்ளை அடித்துவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

12 Dec, 2025 | 03:53 PM

image

(எம்.நியூட்டன்)

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகள் வெள்ளிக்கிழமை (12) காலை  போராட்டத்தை முன்னேடுத்தனர். 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியும், இந்த அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக இந்த போராட்டம்  ஆரம்பமாகி பேரணியாக யாழ்  மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்  ஐனாதிபதிக்கான மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். 

போராட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கே வந்து மகஜரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து யாழ். இந்திய துணைத்துதுவரிடம் கையளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட  ஐந்துபேரை பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி சென்று கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20251212_103637.jpg

IMG_20251212_105101__1_.jpg

IMG_20251212_103513.jpg

https://www.virakesari.lk/article/233179

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.