Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச்செல்வனின் படுகொலையும் தமிழகத்தின் உணர்வலையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வனின் படுகொலையும் தமிழகத்தின் உணர்வலையும்

[11 - November - 2007]

-தாயகன்-

விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகள் ஈழத்தமிழர் ஆதரவின் கனப்பரிமாணத்தையும் அவர்கள் விடுதலை பெறவேண்டியதன் அவசியத்தையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திற்கு மிக அருகாக இலங்கை விமானப்படை குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் இலங்கை அரசுடனான சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான தமிழ்ச்செல்வனும் அவருடனிருந்த 5 பேராளிகளும் உயிரிழந்தனர்.

இச் சம்பவம் இலங்கை இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் தமிழர் வாழும் மூலை முடுக்கெல்லாம் பெரும் அதிர்வலைகளையும் துயரங்களையும் ஏற்படுத்தின. ஆனாலும் தமிழ்ச்செல்வன் படுகொலையால் இம்முறை தமிழகத்தில் ஏற்பட்ட உணர்வலைகள் மிகவும் வேறுபட்டதா விருந்ததுடன் அது தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், அஞ்சலி நிகழ்வுகள், எதிர்ப்புப் பேரணிகள் இன்றும் கூட தமிழகத்தில் நடந்து வருகின்றன.

தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்திகேட்டு தமிழகத்திலிருந்து இலங்கையரசுக்கெதிரான கண்டனக் குரல்கள் சீறத்தொடங்கின, அஞ்சலி நிகழ்வுகள் அரங்கேறின. எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன . இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிர்வாணக் கொடும்பாவிகள் எரியூட்டப்பட்டன. எங்கும் சோகம், எல்லோரிடமும் வேதனை, இலங்கையரசுமீது கடும் சினம் கொண்ட தமிழக மக்கள் ஆத்திரத்தில் குமுறினர்.

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் தமிழ்ச்செல்வனின் உருவப்படங்களை வைத்து அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. வீதிகள் தோறும், மதில்கள் தோறும் அஞ்சலி செலுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பதாதைகள் தொங்க விடப்பட்டன, ஒவ்வொரு வீடுகளிலும் தம்பிள்ளையை, தமது அண்ணனை, தம்பியை இழந்த சோகம். ஒவ்வொருவரின் உதடுகளிலும் தமிழ்ச்செல்வன் என்ற உச்சரிப்புகளென தமிழகமே சோகமயமானது.

ஆனால், தனது பரம எதிரியான பாகிஸ்தானில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து சோகத்தை வெளியிட்ட இந்திய மத்திய அரசு, விடுதலைக்காக போராடி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து இனவெறி அரசினால் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் இனத்தின் அரசியல் தலைவர், சமாதானப் பேச்சாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மௌனம் சாதித்ததன் மூலம் ஈழத்தமிழர் தொடர்பான தனது சுயநல நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியது.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பாக தமிழக அரசுசார்பில் வெளியிட்ட `செல்வா... நீ எங்கு சென்றாய்..' என்ற இரங்கல் கவிதை ஈழத்தமிழர்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களையே உசுப்பி விட்டது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கருவறுக்கக் காத்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஜெயலலிதாவின் நிம்மதியையும் குலைத்துவிட்டது.

தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் (காங்கிரஸ், பா.ஜ.க.தவிர) அரசியல் தலைவர்களும் அஞ்சலிகளை தெரிவித்த போதும் கண்டனங்களை வெளியிட்ட போதும் பெட்டிப்பாம்பாகக் கிடந்த ஜெயலலிதா தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் கவிதைவெளியிட்ட போது மட்டும் சீறியெழுந்து விஷத்தைக் கக்கி தனது நடிப்பாற்றலையும் சுயநலத்தனமான நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தினார்.

ஜெயலலிதாவின் `போலி' நாட்டுப் பற்றும் `மயக்கும்' நடிப்பாற்றலும் பழிவாங்கும் உணர்வும் பதவி வெறியும், தோழியுடனான தீராக்காதலும் ஈழத்தமிழர் மீதான குரோத உணர்வும் தமிழக மக்களுக்கோ ஈழத்தமிழர்களுக்கோ புரியாத, தெரியாத விடயமல்ல. ஆனால், விடுதலைக்காக உயிர்களைத்தியாகம் செய்யும் ஒரு இனத்தின் அரசியல் பிரிவுத்தலைவரின் மரணத்தில் அரசியல் நடத்தும் ஜெயலலிதாவின் அசிங்கத் தனத்தை அவரின் கட்சியினரே விரும்பவில்லை.

வழக்கம்போலவே கருணாநிதி எதைச் செய்யதாலும் அதனை எதிர்க்க வேண்டுமென்னும் மன (வியாதி) நிலையிலிருந்த ஜெயலலிதா தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்ததை அரசியலாக்க முற்பட்டு இன்று அவரே அரை நிர்வாணமாகியுள்ளார்.

தமிழ்ச்செல்வனை வம்புக்கிழுத்தவர் இன்று தான் தமிழ்ச்செல்வி என்பதை நிரூபிப்பதற்கு படாதபாடுபடுகிறார். தனது பழைய கதைகளை நினைவூட்டுகிறார்.

தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த கருணாநிதியின் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற வெறியில் ்தமிழ்ச்செல்வன்ீ என்ற ஆயுதத்தை கையிலெடுத்த ஜெயலலிதா இன்று தான் இன்னும் பலவீனமாகியுள்ளதுடன் கருணாநிதி தமிழின பற்றுமிக்கவரென்ற கருத்தை இன்னும் ஒரு படிமேலே உயர்த்தி விட்டுள்ளார். அத்துடன் தான் ஒரு கன்னடத்தி என்ற உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கருணாநிதி தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்ததால் அவருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

தமிழ்ச்செல்வனின் படுகொலையும் தமிழகத்தின் உணர்வலையும்

[11 - November - 2007]

-தாயகன்-

இச் சம்பவம் இலங்கை இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் தமிழர் வாழும் மூலை முடுக்கெல்லாம் பெரும் அதிர்வலைகளையும் துயரங்களையும் ஏற்படுத்தின. ஆனாலும் தமிழ்ச்செல்வன் படுகொலையால் இம்முறை தமிழகத்தில் ஏற்பட்ட உணர்வலைகள் மிகவும் வேறுபட்டதா விருந்ததுடன் அது தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், அஞ்சலி நிகழ்வுகள், எதிர்ப்புப் பேரணிகள் இன்றும் கூட தமிழகத்தில் நடந்து வருகின்றன

http://www.thinakkural.com/news/2007/11/11...s_page40080.htm

இந்தவிடயம் தமிழர்களைமட்டுமல்ல, எல்லா நாட்டினரையும் அதிர்வலைக்குள்ளாக்கியுள்ளத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.