Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்

10 Jan, 2026 | 05:55 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்  சனிக்கிழமை (10) இடம்பெற்றது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில்  நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில்  தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://www.virakesari.lk/article/235700

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்  சனிக்கிழமை (10) இடம்பெற்றது.

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

நானும் இந்த மாநாட்டுக்கு போய் சைக்கிளையும் விட்டுட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து

வீட்டில் அடியும் வாங்கி அடுத்த நாள் போய் பத்திரமாக இருந்த சைக்கிளை எடுத்து வந்தேன்.

இது பெரியதொரு அனுபவமாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

நானும் இந்த மாநாட்டுக்கு போய் சைக்கிளையும் விட்டுட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து

வீட்டில் அடியும் வாங்கி அடுத்த நாள் போய் பத்திரமாக இருந்த சைக்கிளை எடுத்து வந்தேன்.

இது பெரியதொரு அனுபவமாக இருந்தது.

எனது அம்மப்பாவும் கூட்டத்திற்கு போய் மதிலேறிப் பாய்ந்து தப்பி வந்த கதைகள் அம்மாவும் அம்மப்பாவும் சிறுவயதில் கூறுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.