Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 02:33 PM

image

(அட்டன் கிளை)

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து  முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை  (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர்  பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். 

645946434_2096706621175947_6036840745959

அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை ஊரிஜிதமாகியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது. மேலும் குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றுள்ளனர்.  இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 

அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது   இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், ‘ எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தனர். 

644689789_2096706824509260_2380969185059

பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?;

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழர்களாக தெரிகின்றார்கள்.

ஆக.... இறந்த தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது.

இந்த அசிங்கமான, அருவருப்பான செயலை செய்தவர்கள்...

சிங்கத்தை புணர்ந்து... பிறந்த இனமாக, இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

2009இல் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்களே

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, தமிழ் சிறி said:

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தமிழர்களாக தெரிகின்றார்கள்.

ஆக.... இறந்த தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி நடந்துள்ளது.

இந்த அசிங்கமான, அருவருப்பான செயலை செய்தவர்கள்...

சிங்கத்தை புணர்ந்து... பிறந்த இனமாக, இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது.

2 hours ago, Kavi arunasalam said:

2009இல் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தார்களே

களமுனையில் நேரடி மோதலில் வீரச்சாவடைந்த அடுத்த சில நொடிகளிலேயே மகளிர் போராளிகளின் ஆடைகளைக் களைந்து அவ்விடத்திலேயே புணர்ந்த நிகழ்வுகளும் உண்டு. லெப். கேணல் தாட்சாயினியின் வித்துடலிற்கு களமுனையில் இவ்வாறு நடந்ததை ஏனையை மகளிர் போராளிகள் கண்ணுற்று செய்த சிங்களப் படைவீரனை சுட்டுக் கொன்றனர், அவ்விடத்தில்.

இது தொடர்பில் பின்னாளில் வெளிவந்த ஒரு விடுதலைப் பாடலில் ஒருவரியை புலிகள் சேர்த்திருந்தனர்:

"பிறந்த குழந்தை பிறந்த நொடியில்

இறக்கும் நிலமை இன்னும் இருக்கு!

மரணம் மீதில்... வீழ்ந்த பின்னர்...

புணரும் பகைவர் கொடுமை நடக்கு!"

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்


சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து!

கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தன்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பின் மிகவும் அருவருக்கதக்க விடயமாகும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வைத்தியசாலை நிர்வாகம் சுயாதீனமான, நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

கிளங்கன் வைத்தியசாலை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான ஆதார வைத்தியசாலையாகும்.

இவ்வைத்தியசாலையினை நம்பியே மலையக பெருந்தோட்ட மக்கள் உள்ளனர்.

இந்த சம்பவம் வைத்தியசாலையினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவதோடு நம்பகத்தன்மையினையும் இல்லாமல் செய்கின்ற விடயமாகும். இதுத்தொடர்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் பேசி உரிய நடவடிக்கைகளை பக்கசார்பின்றி முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய அனுதாபத்தினையும், கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1467178

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை” 

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் March 4, 2026

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறி டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹட்டன் ஏபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சடலத்தை கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் மூன்று சிற்றூழியர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

12.jpeg?w=673

மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் செய்வது மனநல மருத்துவத்தில் “நெக்ரோபிலியா” (Necrophilia) என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான மற்றும் கடுமையான பாராபிலிக் குறைபாடாக கருதப்படுகிறது. காரணம், மரணமடைந்த நபர் ஒப்புதல் (consent) வழங்க முடியாது என்பதே ஆகும். மனநல மருத்துவ வரையறைகளின்படி, ஒப்புதல் அளிக்க முடியாத நபரை மையமாகக் கொண்ட பாலியல் ஈர்ப்பு ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்படுகிறது.

அடிப்படை உளவியல் காரணிகள்

நெக்ரோபிலியாவிற்கு ஒரே காரணம் இல்லை. பல உளவியல் காரணிகள் இணைந்து செயல்படலாம்.

(A) முழுமையான கட்டுப்பாட்டு உந்துதல்

சிலருக்கு உறவு சார்ந்த அச்சங்கள் அதிகமாக இருக்கலாம் உதாரணமாக நிராகரிப்பு பயம், நெருக்க உறவு உருவாக்க இயலாமை, பாலியல் செயல்திறன் குறித்த பதட்டம் போன்றவை. ஆனால் மரணமடைந்த உடல் எதிர்ப்பு காட்டாது, தீர்ப்பளிக்காது, மறுக்காது. இதனால் “முழு கட்டுப்பாடு” என்ற உணர்வு உருவாகலாம். இது உறவு சார்ந்த உளவியல் குறைபாடுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

(B) இணைப்பு (Attachment) கோளாறு

சிறுவயதில் பாசக்குறைவு, பாதுகாப்பற்ற இணைப்பு, உணர்ச்சி புறக்கணிப்பு இவற்றால், நபர் உண்மையான மனித உறவுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான (ஆனால் அசாதாரணமான) கற்பனை உலகில் ஈடுபடலாம்.

(C) Conditioning (பழக்கமாதல்)

பாலியல் தூண்டுதல் சில சமயங்களில் குறிப்பிட்ட சூழல்களுடன் இணைக்கப்பட்டு பழக்கமாக மாறலாம். உதாரணமாக மரணம் தொடர்பான அனுபவங்கள், மோர்ச்சரி வேலை சூழல் போன்றவை.

(D) ஆளுமைக் கோளாறுகள்

சில சந்தர்ப்பங்களில் சமூக விரோத ஆளுமைக் கோளாறு, சாடிசம் (Sadism), மனச்சாட்சி குறைவு போன்ற ஆளுமைக்குறைபாடுகள் இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடுபவர்களிடத்தில் காணப்படலாம் . இருப்பினும், எல்லா நெக்ரோபிலிக் நடத்தைகளும் ஆளுமைக் கோளாறுடன் தொடர்புடையவை அல்ல.

(E) மனவெறுக்கோளாறு (Psychosis)

மிக அரிதாக கடுமையான மனவெறுக்கோளாறு, மாயநம்பிக்கைகள் போன்ற நோய் நிலைமைகளினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம்

நரம்பியல் (Neurobiological) காரணிகள்

நரம்பியல் பார்வையில், பாலியல் உந்துதல் மூளையின் சில முக்கிய பகுதிகளுடன் தொடர்புடையது:

  • Hypothalamus – பாலியல் உந்துதல் கட்டுப்பாடு

  • Limbic system – உணர்ச்சி செயலாக்கம்

  • Prefrontal cortex – தீர்மானம் மற்றும் சமூக கட்டுப்பாடு

சில ஆய்வுகள், தன்னாட்சி கட்டுப்பாட்டின் குறைவு (impulse control deficit) மற்றும் உணர்ச்சி செயலாக்க கோளாறுகள் அசாதாரண பாலியல் நடத்தைக்கு காரணமாக இருக்கலாம் என முன்வைக்கின்றன.

whatsapp-image-2026-03-04-at-10.59.44-1.

வகைப்பாடு

சில உளவியல் ஆராய்ச்சியாளர்கள் நெக்ரோபிலியாவை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்

  1. முதன்மை நெக்ரோபிலியா – பிரதான பாலியல் விருப்பம்

  2. வாய்ப்புச் சூழ்நிலை – கொலைக்குப் பிறகு

  3. திடீர் உந்துதல்

  4. கற்பனை மட்டுமே

சட்டப் பார்வை

மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் (post-mortem sexual act) என்பது சட்டரீதியாக மிகவும் கடுமையான விஷயம். இலங்கையில் இது குறித்து தனித்துப் “necrophilia” என்ற பெயரில் பிரிவு இல்லாவிட்டாலும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் தண்டனை சட்டத்தின் பிரகாரம்

(a) Section 365 – “Unnatural offences”

பழமையான பிரிவாக இருந்தாலும், மனித உடலுடன் இயற்கைக்கு மாறான பாலியல் செயல் மேற்கொண்டால் குற்றமாகப் பார்க்கப்படும். மரணமடைந்த நபருடன் நடந்த பாலியல் செயலும் இப்பிரிவின் பரப்பளவுக்குள் வரலாம்.

(b) Section 292 – Trespassing on burial places

கல்லறை அல்லது அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அவமதிக்கும், கல்லறையை சேதப்படுத்தும் அல்லது சடலத்தை அசட்டையாக கையாளும் செயல்கள் குற்றமாகும்.

(c) Section 346 – Causing disappearance of evidence

மரணத்திற்குப் பிந்தைய பாலியல் செயல், முன் நடந்த குற்றத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்டதாக இருந்தால், ஆதாரங்களை மறைத்தல்/மாற்றுதல் குற்றமும் சேர்க்கப்படும்.

சட்டரீதியான நிலைப்பாடு

  • மரணமடைந்த நபர் ஒப்புதல் வழங்க முடியாததால், இது “ஒப்புதல் இல்லாத செயல்” என கருதப்படும்.

  • மனித மரியாதை (human dignity) மரணத்திற்குப் பின்பும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது

நெக்ரோபிலியா என்பது மிகவும் அரிதான, கடுமையான மற்றும் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய பாராபிலிக் குறைபாடாகும். இது இயல்பான மனித பாலியல் நடத்தை அல்ல. இதன் பின்னணி உளவியல், நரம்பியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான ஒருங்கிணைப்பாகும். இந்நிலையைப் புரிந்து கொள்ளும் போது மருத்துவ அறிவு, நீதிமுறை உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை ஒன்றிணைந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine)

“மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.