Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள்தான்: காங்கிரசாருக்கு கி.வீரமணி விளக்கம்

Featured Replies

சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள்- ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள்- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் தான்

[17 - November - 2007]

* காங்கிரஸ் கட்சியினருக்கு விளக்கி திராவிடர் கழக தலைவர் வீரமணி விடுத்துள்ள அறிக்கை

இலங்கை அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள் - ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள் - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை.

அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள தமிழக முதல்வர், முன்னாள் பிரதமரை படுகொலை செய்த, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா எங்களின் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.

தங்களுடைய தலைவர் ராஜீவ் காந்தி இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக அவர்கள் மறக்கவொண்ணாத் துன்பம், துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இத்தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் மனித நேயமும் தமிழ் இன உணர்வும் கொண்ட கோடானு கோடி தமிழர்கள் உண்மையாகவே இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த மரியாதையுடன் காங்கிரஸ் நண்பர்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை மனித இதயம் படைத்த எவராலும் ஏற்கவே முடியாது. அப்படி ஒரு கோரமான, சோகமான சம்பவம் அதுவும் தமிழ் மண்ணில் நிகழ்ந்திருக்கவே கூடாது. அது கண்டனத்திற்குரியது. இதை நாம் இப்போது சொல்லவில்லை. இந்தச் சம்பவம் நடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம்.

அந்நிகழ்வின் விளைவுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லாத ஓர் இயக்கமாக இருப்பினும் கூட -தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் - ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சொந்த நாட்டிலேயே அந்நாட்டு முப்படையினரால் -ஈவு இரக்கமின்றி காக்கை, குருவிகளைப்போல் கொல்லப்பட்டும் வாழ்வுரிமையை இழந்தும் பட்டினியாலும் நோயாலும் அழிக்கப்படும் நிலை நிலவுகிறதே! இலங்கை அரசு தமிழர்கள் மீது மூர்க்கத்தனமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் திட்டமிட்டு போர் நடத்துகிறதே! இலங்கை அரசின் இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள், அவர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

ஈழத் தமிழர்களை அழித்து வரும் ராஜபக்ஷ அரசு ராஜீவ் காந்தி - ஜெயவர்தன ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில குறைந்தபட்ச சலுகைகளைக் கூட காலில் போட்டு மிதித்து விட்டது என்பதும் உலகம் அறிந்த உண்மையல்லவா!

அந்த மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற பற்பல வெளிநாடுகள் - நோர்வே,ஜப்பான், தாய்லாந்து போன்ற நாட்டவர்கள் எல்லாம் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தங்களது மனித நேயத்தைக் காட்டிவரும் வேளையில், சிவிலியன் மக்கள் மீதும் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் மீதும் கூட குண்டுமாரி பொழிந்தவர்களைத் தடுத்ததோடு சமாதானப் புறாவாகப் பறந்து இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காணமுயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு அதுவும் நாட்டால் வேறுபட்டாலும் தமிழ்மான உணர்வில் ஒன்றுபட்ட ஒருவருக்காகக் கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசியக் குற்றமாகும் என்பதை நிதானித்து நமது காங்கிரஸ் சகோதரர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

கலைஞர் ஆண்டபோது இப்படி ஒரு படுகொலை நிகழவில்லை. மாறாக மத்தியில் உள்ள ஆட்சி - காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த ஓர் ஆட்சி - குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோதுதான் நிகழ்ந்தது என்றாலும் செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல எத்தனையோ சொல்லொணாக் கொடுமைகளை தி.மு.க.வும் அதன் தோழமையினரும் அன்று அனுபவித்தனர்.

அவைகளையெல்லாம் தாண்டி சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிகழ்வுகளின் போது, இப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக முதல்வர் கலைஞர் விளக்கி, நடந்த சம்பவங்களைக் கண்டித்துவிட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அலட்சியப்படுத்திவிடக்கூடாத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.