Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெபனானில் பாலங்களை குறிவைத்து தகர்த்து வரும் இஸ்ரேல்! - என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெபனானில் பாலங்களை குறிவைத்து தகர்த்து வரும் இஸ்ரேல்! - என்ன காரணம்? 

Published By: Nanthini

23 Mar, 2026 | 02:59 PM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

லெபனானில் உள்ள குறிப்பிட்ட சில பாலங்களை இஸ்ரேல் இலக்குவைத்து அழித்து வருவதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

தெற்கு லெபனானை மத்திய லெபனானுடன் இணைக்கும் டைர் கடற்கரை நகரத்துக்கு அருகில் உள்ள காஸ்மியே பாலம் Qasmiyeh bridge ஞாயிற்றுக்கிழமை (22) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.

அதைத் தொடர்ந்து, லிட்டானி ஆற்றின் (Litani river) குறுக்கே உள்ள பாலங்களையும் அழித்து தகர்க்குமாறு இஸ்ரேல் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைக்கு எதிராக தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்த இஸ்ரேல் இராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது.

லெபனான் மீது ஒரு பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இனி வரும் காலங்களில் பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனானில் முக்கிய பாலங்களை இஸ்ரேல் இராணுவம் இலக்குவைக்க என்ன காரணம்?

லெபனானில் உள்ள பாலங்களை, குறிப்பாக தெற்கில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களை இஸ்ரேல் குறிவைத்து தகர்ப்பதற்கான பின்னணிக் காரணம் குறித்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில், லெபனானில் உள்ள இந்தப் பாலங்கள் பொது மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லெபனானின் தெற்குப் பகுதியானது ஷியா சமூகத்தினர் மற்றும் ஹிஸ்புல்லா படையினரின் கோட்டையாக கருதப்படுகிறது. அப்பகுதியை அந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரித்து, தனிமைப்படுத்தி, அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி, தெற்கை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இஸ்ரேல் செயற்பட்டு வருவதாக லெபனான் அஞ்சுகிறது.

இது தொடர்பாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் கூறுகையில், “பாலங்கள் மீதான இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் தரைவழி ஊடுருவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது. இது பொதுமக்கள் மீதான கூட்டுத் தண்டனை மற்றும் லெபனானில் உள்ள பிரதேசங்களில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்” என்கிறார்.

லெபனானில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் அங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தெற்கு லெபனானில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அப்பகுதிக்கு திரும்பாத வகையில், மக்கள் பயன்படுத்தும் பாலங்களை தகர்த்து அழித்து, அவர்களது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் தெரிவிக்கையில், இஸ்ரேல் எல்லைக் கிராமங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்க, அங்கிருக்கும் வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன் அவர், காசா போரில் ஹமாஸுக்கு எதிராக கையாண்ட முறையையே, அதாவது கட்டடங்களை இடித்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு வலயங்களை உருவாக்கிக்கொள்ளும் முறையையே இம்முறை பின்பற்றப்போவதாகவும் கூறினார்.

லெபனான் சுகாதார அமைச்சின் தகவலின்படி, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குறைந்தது 118 குழந்தைகள், 40 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியான சூழல் குறித்த பகுதிகளில் உருவாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/241728

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.