Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அடுப்பில் கரி அறவே படியாது': சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அடுப்பில் கரி அறவே படியாது': இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு

புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,என்சிஎல் விஞ்ஞானிகளால் 'டைமெத்தில் ஈதர்' எனப்படும் செயற்கை எரிபொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • பிராச்சி பாட்டீல்

  • பிபிசி மராத்திக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் போரின் தாக்கம் காரணமாக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இந்தியாவையும் பாதித்துள்ளது.

பல இடங்களில் உணவுக்கூடங்கள் மூடப்பட்டன, உணவகங்களின் மெனுக்கள் மாறின. டீ, காபி கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம் நாம் எல்பிஜி எரிவாயுவைச் சார்ந்து இருப்பது தான்.

புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளனர். என்சிஎல் விஞ்ஞானிகளால் 'டைமெத்தில் ஈதர்' எனப்படும் செயற்கை எரிபொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்த எரிபொருளைக் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் என்சிஎல் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

'டைமெத்தில் ஈதர்' என்றால் என்ன?

டைமெத்தில் ஈதர் அல்லது டிஎம்இ என்பது ஒரு செயற்கை எரிபொருளாகும். இந்த எரிபொருள் ஒரு வேதியியல் செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக, என்சிஎல்லின் அறிவியல் இயக்குநர்களான முனைவர் ஆஷிஷ் லெலே மற்றும் முனைவர் திருமலைசாமி ராஜா ஆகியோர் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய முனைவர் திருமலைசாமி ராஜா, "நாங்கள் நேரடி டிஎம்இ மற்றும் மறைமுக டிஎம்இ ஆகிய இரண்டையும் உருவாக்க முயன்றோம். இதற்கு வினையூக்கி (கேட்டலிஸ்ட்) மிக முக்கியமானதாக இருந்தது" என்றும், "இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே இந்த வினையூக்கி உருவாக்கப்பட்டது. நான்கு வெவ்வேறு வகையான வினையூக்கிகள் உருவாக்கப்பட்டன, இறுதியில் இந்த வினையூக்கி உருவாக்கப்பட்டது" என்றும் கூறினார்.

ஆஷிஷ் லெலே கூறுகையில், "100 சதவிகித டைமெத்தில் ஈதர் உற்பத்தியில் உதவும் ஒரு ஊக்கியை உருவாக்குவதே எங்கள் முயற்சியாக இருந்தது. இதற்குத் தேவையான அனைத்து கூறுகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. எதையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." என்றார்.

செயல்முறை என்ன?

இந்த வேதியியல் செயல்முறையைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது என்று முனைவர் லெலே கூறுகிறார்.

இந்தச் செயல்முறையில் இரண்டு மெத்தனால் மூலக்கூறுகளை ஒன்றிணைத்து, அதிலிருந்து நீர் மூலக்கூறை அகற்றினால், எஞ்சியிருப்பது டைமெத்தில் ஈதர் அல்லது டிஎம்இ ஆகும்.

ஆனால் இந்தச் செயல்முறை மிகவும் சிக்கலானது.

முனைவர் லெலே கூறுகையில், "இதற்காக, முதலில் மெத்தனால் சேர்க்கப்பட்டு ஒரு வினையூக்கி சேர்க்கப்பட்டது, பின்னர் டிஎம்இ உற்பத்தி செய்யப்படும் ஒரு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் சிறிய அளவில் செய்யப்பட்ட இந்த செயல்முறை பெரிய அளவில் செய்யும்போது பலன் தருமா என்பது தான் கேள்வியாக இருந்தது.

இதற்காக, வெவ்வேறு அளவுகளில் டிஎம்இ தயாரிக்கப்பட்டது. இது வெற்றி பெற்ற பிறகு, இதனை இன்னும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழத் தொடங்கியது," என்றார்.

இந்த வேதியியல் செயல்முறையைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது என்று முனைவர் லெலே கூறுகிறார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆனால் இந்தச் செயல்முறை மிகவும் சிக்கலானது.

சுத்தமான எரிபொருள்

தற்போதுள்ள நிலையில் டிஎம்இ மிகவும் தூய்மையானது. இதனை பயன்படுத்தும்போது உங்களால் சுடரைக் கூட பார்க்க முடியாது. இது புகை, நைட்ரஜன் ஆக்சைடு, கந்தக ஆக்சைடு மற்றும் நுண்துகள்களின் வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்கிறது.

இதன் வெப்பத் திறன் வழக்கமான எரிபொருட்களுக்கு இணையானது என்பதால், இது ஒரு சிறந்த மாற்றாகவும் அமைகிறது. இந்த எரிபொருளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதும் முக்கியமான விஷயம்.

முனைவர் லெலே கூறுகையில், "பொதுவாக நாம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பின் பர்னர்களில் கார்பன் படியும். அந்த கார்பனைச் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், டைமெத்தில் ஈதரில் இதுபோன்ற எதுவும் நடக்காது. இது மிகவும் தூய்மையாக எரியும். எந்த அளவுக்கு என்றால், இதன் சுடர் கூட கண்ணுக்குத் தெரியாது," என்றார்.

என்சிஎல் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதற்கான வினையூக்கியும் (கேட்டலிஸ்ட்) விலை மலிவானது தான்.

இதற்காகப் பயன்படுத்தப்படும் வினைஊக்கியும் (கேட்டலிஸ்ட்) செலவு குறைந்ததாகும்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,என்சிஎல் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

முனைவர் திருமலைசாமி ராஜா இந்த வினையூக்கிக்கான சோதனைகளை நடத்தியது மட்டுமல்லாமல், இதற்கான ரியாக்டரையும் (உலை) உருவாக்கியுள்ளார். இந்தத் தொழில்நுட்பம் தனித்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

தற்போதைய ஆலை 12 முதல் 13 கிலோ டிஎம்இ-யை உற்பத்தி செய்கிறது. தற்போது, ஒரு நாளைக்கு 250 கிலோ எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.

எல்பிஜி சிலிண்டர் பயன்பாடு

தற்போது டிஎம்இ குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், எல்பிஜி மீதான சார்பைக் குறைப்பதில் இது ஒரு பெரிய அளவில் பங்களிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தற்போது என்சிஎல்லில் உருவாக்கப்பட்டு வரும் முன்மாதிரி (ப்ரோடோடைப்), 100 சதவிகிதம் எல்பிஜி அல்லது டிஎம்இ ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியது.

இது பெங்களூருவில் உள்ள எல்பிஜி உபகரண ஆராய்ச்சி மையத்தில் (எல்ஈஆர்சி) சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தால் வெறும் 10 பார் (10 bar) அழுத்தத்தில் டிஎம்இ-யை உற்பத்தி செய்ய முடியும் மற்றும் இதனை நேரடியாக எல்பிஜி சிலிண்டர்களில் நிரப்ப முடியும்.

முனைவர் லெலே கூறுகையில், "எல்பிஜி திரவமாவது போலவே, டிஎம்இ-யும் திரவமாகிறது. 7 பார் அழுத்தத்தில் டிஎம்இ திரவமாகிறது. இதனை எல்பிஜியுடன் முழுமையாகக் கலக்க முடியும்" என்றார்.

"தற்போது எல்பிஜியுடன் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலந்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்பிஜியுடன் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலந்தால், அதனை அடுப்புகள் மற்றும் சிலிண்டர்களில் பயன்படுத்த முடியும்."

"மொத்த எல்பிஜி நுகர்வில் 8 சதவிகிதம் என்று நாம் சொன்னால், அது இறக்குமதி அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் 8 சதவிகிதத்தில் தொடங்கி பின்னர் அதனை 20 சதவிகிதமாக அதிகரிக்கலாம்."

மேலும், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவீத டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா 2024-ஆம் ஆண்டில் 21 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்தது. இதில் வெறும் 8 சதவிகித டிஎம்இ-யைக் கலப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 9500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 10.5 கோடி எரிவாயு இணைப்புகளுக்கு 8 சதவிகித டிஎம்இ பயன்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 1300 டன் டிஎம்இ உற்பத்தி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இது எல்பிஜியுடன் கலக்கப்படுவதால், இதற்கெனத் தனியாக அடுப்பு அல்லது சிலிண்டரைத் தயார் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இத்தகைய டிஎம்இ பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

தற்போது, இந்தியாவிலேயே வினையூக்கி மற்றும் டிஎம்இ உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்கான திட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

என்சிஎல் நிறுவனம், தற்போது ஒரு பொறியியல் கூட்டாளருடன் இணைந்து 6-9 மாதங்களுக்குள் நாளொன்றுக்கு 2.5 டன் திறன் கொண்ட ஒரு தொழில் செயல்முறை ஆலையை அமைக்கத் தயாராகி வருகிறது.

இந்தத் திட்டம் நாளொன்றுக்கு 500-1000 டன் திறன் கொண்ட ஒரு வணிக ரீதியான திட்டத்தை அமைப்பதற்கு வழிவகுக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yw35kw1l3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.