Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதம் களைத்தெறியப்பட்ட வேண்டும் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் களைத்தெறியப்பட்ட வேண்டும் - ஜனாதிபதி

வீரகேசரி இணையம்

பயங்கரவாதம் உலகத்திலிருந்து களைத்தெறியப்பட வேண்டும்மென ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது ஆயுதங்களை ஏந்தி போராடும் குழுவினரா ஆயுதங்களை களைத்து அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு கோடுகின்றோன் அத்துடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தயராக உள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானின் அசாசி சிம்புனிற்கு தெரிவித்த்தாக ஏ,எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது

அசாகி சிம்புனி கடந்த 15ம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேர்காணல் கண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை டிசெம்பார் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஆயுதங்களை ஏந்தி போராடும் குழுவினரா ஆயுதங்களை களைத்து அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு கோடுகின்றோன்

அதான் ஏற்கனவே ரெண்டு மூன்று காவாலி குழுக்கள் உங்கட

நீரோட்டத்தில நீச்சலடிக்கினம் போதாதா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானிடமிருந்து இராணுவ உதவிகளைபெறுவது ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு எதிரானது அமெரிக்கா எச்சரிக்கை

வீரகேசரி நாளேடு

இலங்கை ஈரானிடமிருந்து இராணுவ தளபாடங்கள்இ ஆயுதங்களை வாங்கினால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஈரான் விஜயம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் ரெஜி வைற் ஈரான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மிகவும் வெளிப்படையானது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்கு திறந்து விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது.

அக்டோபர் மாத இறுதியில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் ஈரான் விஜயம் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் கருத்துக் கூற விரும்பவில்லை.

ஏனெனில் ஈரான் தொடர்பான எமது இலங்கைக்கு மிகவும் தெளிவாக தெரியும். எனினும் ஈரானிடமிருந்து இலங்கை ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யுமாயின் அது ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஈரானுக்கு எதிரான தீர்மானத்தின் 1747 ஆம் பிரிவை மீறுவதாக அமையும்.

http://www.virakesari.lk/html/head_view.asp?key=8064

அடுத்த வருடம் ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்

வீரகேசரி நாளேடு

ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாட் அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஈரானிய விஜயம் வெற்றி பெற்றுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவதுஇ

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் ஈரான் விஜயம் வெற்றி பெற்றுள்ளது. அபிவிருத்தி திட்டங்களுக்கு 1.5 பில்லியன் டொலர்களை எமக்கு ஈரான் வழங்கவுள்ளது. பத்து அபிவிருத்தி திட்டங்களிலும் கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்தோடு ஈரான் ஜனாதிபதி 2008 ஆம் ஆண்டு இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.தே. கட்சி தென் மாகாண சபையை அவ்வாறு கவிழ்ந்தால் தேர்தலை நடத்தவே ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

சண்டே லீடர் தாக்குதலில் அரசாங்கத்தின் மீது பழிபோட முயற்சித்தார்கள். ஆனால் இன்று விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அடுத்த வாரம் விபரங்களை வெளியிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்ல வைக்கிறதுக்குத்தானே மகிந்த போனவர். ஈரானுக்குப் போய் ஆயுதம் கேட்டா அமெரிக்காவுக்கு அது பிடிக்காது.. அமெரிக்காவே தானா தந்ததுதவ வேணும். ஆக அமெரிக்காவிடமிருந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ் இன்னும் இலவசமா ஆயுதங்கள் வந்து சேரும் இராணுவ உதவிகள் வந்து சேரும் இதைத்தானே மகிந்த எதிர்பார்த்திருப்பார். அது தானே நடக்கு. ஒரு சின்னப் பயணத்தால பலன்.. கோடி. சிங்களவன் பிழைக்கத் தெரிஞ்சவன் தான்..!

ஈரானையும் அணைச்ச மாதிரியாகுது. காசும் பெற்ற மாதிரியாகுது. அமெரிக்காவிடமிருந்து மேலும் ஓசில போர் செய்ய தளபாடங்களும் இதர உதவிகளும் கிடைச்சதாகுது. அப்படியே அமெரிக்காவை நெருங்கிறதாக் காட்ட இந்தியா விழுந்தடிச்சு ஓடி வந்து உதவி செய்யவும் போகுது. இப்படி இன்னோரென்ன தொடர்ச்சிகள் சிறீலங்காவுக்குச் சார்ப்பா இருக்குது உலகில..!

தமிழர்களுக்குத்தான் ஒரு ராஜதந்திரமும் இல்ல..! :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அரச பயங்கரவாதம் களைந்தெறியப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.