Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பு தேடி மேல் மாகாணத்துக்கு வரும் நிலை ஏற்படும் ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பு தேடி மேல் மாகாணத்துக்கு வரும் நிலை ஏற்படும் ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க

வீரகேசரி நாளேடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பூர்வீக பூமிக்கு அருகில் யால வனத்துக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதலை நடத்துகின்றனர். எதிர்காலத்தில் தென் பகுதியிலுள்ள சிங்களவர்கள் பாதுகாப்புக்காக மேல் மாகாணத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இலங்கை நிவாரண நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் யுனிசெப் நிறுவனம் புலிகளுக்கு உதவி வழங்கியமையானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் யுனிசெப் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது: பெருமளவிலான நிவாரண உதவிகளை யுனிசெப் வழங்கி வருகிறது. எனவே ஜே.வி.பி. அந்நிறுவனம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மைத் தன்மை உறுதிப்பட வேண்டும். அதே நேரம் யுனிசெப் நிறுவனம் புலிகளுக்கு உதவினால் அதனை அங்கிகரிக்க முடியாது. ஜனாதிபதியின் ஜன்ம பூமிக்கருகில் யால வனாந்தரத்தில் புலிகள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துகின்றனர். எதிர்காலத்தில் தென் பகுதியிலுள்ள சிங்களவர்கள் பாதுகாப்பிற்காக மேல் மாகாணத்திற்கு வர வேண்டிய நிலை உருவாகும்.

சோதனைச் சாவடிகள் பாதுகாப்பு கெடு பிடிகள் இருந்த போதும் குண்டுகள் வெடிக்கின்றன. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான செயல்களின் பின்னணியில் படையிலிருந்து தப்பிச் சென்றோரின் பங்களிப்பும் உள்ளது. பொலிஸாருக்கு குற்றச் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. அதற்கு காரணம் சோதனைச் சாவடிகளில் பாதைகளில் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு பாதுகாப்பென பல கடமைகளை செய்ய வேண்டியுள்ளது. அரசியல் வாதிகளின் கட்டளைக்கு கீழ் பணியாத இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

எனவே அரசாங்கம் பொலிஸ் ஆணைக்குழு உட்பட ஏனைய சுயாதீன ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும். நாட்டில் மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள் கொள்ளை, கொலைகள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் இவ் வருட ஆகஸ்ட் முற்பகுதி வரை 47000 குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளன. டிசம்பரையும் சேர்த்துக் கொண்டால் அது 60 ஆயிரத்தையும் தாண்டும்.

இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் பல நூறு படையினரின் பாதுகாப்பையும் மீறி குண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. ஏதாவது அரசியல் கட்சியொன்றின் நிகழ்ச்சி நடத்தப்படவிருந்தால் குண்டுகள் கண்டுபிடிக்கின்றன. எனவே இவற்றின் பின்னணியில் அரசும் இணைந்து செயற்படுவதாக சந்தேகம் எழுகிறது.

சோதனைச் சாவடிகளில் பொலிஸாருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் அதே வேளை மக்களை வரிசையாக நிற்க வைத்து சோதனை செய்வது விசாரிப்பது தவறென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் சர்வதேச ரீதியில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.