Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் போராத்தில் குதிப்பர் - யாழ் மாணவர் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 06-12-2007 05:55 மணி தமிழீழம் [சிறீதரன்]

மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் போராத்தில் குதிப்பர் - யாழ் மாணவர் ஒன்றியம்

அரசு தனது செயற்பாடுகளை தொடர்ந்த தீவிரத்தினைப் பின்பற்றுவார்களானால் ஒட்டு மொத்த மக்களும் உயிரை துச்சமென மதித்து அரசுக்கும் அதன் இயந்திரத்திற்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்வதற்கான காலம் தொலைவில் இருக்கப் போவதில்லை என யாழ் மாவட்ட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று புதன்கிழை விடுத்துள்ள அறிக்கை வருமாறு....

05-12-2007

யாழ் மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் உயிரை வெறுத்து போராத்தைக் குதிக்கும் சூழல் மிக விரைவில் உருவாகும்

கட்டுப்பாடின்றிய, எல்லைதாண்டிய அரச பயங்கரவாத வன்முறை உலகின் காதுகளுக்கு எட்டாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கும் யாழ் குடாநாட்டில் வாழும் ஆறு இலட்சம் மக்களின் நாளாந்த வாழ்வின் மீது நர்த்தனம் புரியவிட்டிருக்கின்றது. எந்தவித தவிர்ப்புகளும் தடைகளும் இன்றிய நிலையில் கொலைகளும், கடத்தல்களும், கப்பம் பெறுதல், கொள்ளையடித்தல் போன்றனவும் மேலோங்கிச் செல்லுகின்றது.

உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தஞ்சமடைகின்ற பொதுமக்கள் அச்சமும் பீதியும் நிலவும் பிரதேசமாக, தம் பிள்ளைகளின் அகாலச்சாவினைக் கூறி அழுது கொண்டிருக்கும் அன்னையர்களினது பசிக் கொடுமையில் வீரிடும் குழந்தைகளினதும் அவலக்குரல்கள் ஒலிக்கின்ற பிராந்தியமாக தொடர்ந்து குடாநாடு சோகங்களுடன் தென்படுகின்றன.

இராப்பொழுது ஊரடங்கால் ஊமையாகின்றன. இடைக்கிடை கிராமங்கள் முழுநாளும் ஊரடங்கால் முடக்கப்படும். மக்கள் நடமாடும் பகல் பொழுதில் பிரதான பாதைகள் படையினரின் வாகனங்கள் செல்லப்போவதாகக் கூறி அரைவாசிப் பொழுது மறிக்கப்படும். கடற்றொழிலாளர்கள் படையினரின் கூப்பிடு தூரத்தில் பகலில் ஒரு சில மணித்தியாலங்களும் குறிப்பிட்ட சில வழிமுறைகள் ஊடாகவே மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்களும் வர்த்தகர்களிடம் கப்பம் கோருகின்றனர். கொடுக்க மறுப்பவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

குடாநாட்டில் மூன்று பத்திரிகைகள் இயங்கியும் மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களின் ஒரு வீதத்தினைக் கூட வெளிக்கொண்டுவரக்கூட முடியாதவாறு இராணுவ இயந்திரம் அச்சுறுத்தி வெற்றி கண்டுள்ளது.

பொருட்களின் விலையுயர்வும், தட்டுப்பாடும் நீடிக்கின்றது. மாணவர்கள் மீதும் ஏனைய கல்விச் சமூகத்தின் மீதும் வன்முறைகளும் நெருக்கடிகளும் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.

மிதமிஞ்சிய கொடூரங்களைப் புரிந்துகொண்டு, அவை உலகின் முற்றத்திற்கு சிறிதளவேனும செல்லாமல் தடுத்து வருகின்றது இராணுவம். எப்போதாவது ஒரு முறை குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகளுக்கு உண்மை நிலை தெரிவதனை கட்டுப்படுத்தும் இராணுவம் தெரிந்த உண்மைகளைக் கொண்டு கண்ணீர் மல்கிச் செல்லும் சர்வதேச சமூகத்தினர் மலிந்து கிடக்கும் எம் மக்களின் அவலங்களை முடித்து வைக்க எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்கவில்லை.

அரச அதிகாரிகளும், மக்கள் குழுக்களும், மனிதாபிமானம் அற்றும் பேசுபவர்களும், பக்குவமாய் கூட்டங்கள் பலபோட்டு பத்திரிகையில் அடிக்கடி அறிவிப்புகள் விடுப்பர். ஆனால் கண்ணீரில் முக்கிளிக்கும் மக்களின் துயரம் முனைப்புப் பெற்றுச் சென்றதையே காண முடிகின்றது. தத்தமது உயிர்களையும், தம் நிலைகளையும் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொண்டு எவரும் கதைப்பபதற்கு அஞ்சுகின்றனர்.

ஒட்டுமொத்த குடாநாட்டு மக்களும் விரக்தியின் உச்சத்தில் அரச பயங்கரவாத்தினால் நொந்து வாழ்கின்றனர். அரசு தனது செயற்பாடுகளை தொடர்ந்த தீவிரத்தினைப் பின்பற்றுவார்களானால் ஒட்டு மொத்த மக்களும் உயிரை துச்சமென மதித்து அரசுக்கும் அதன் இயந்திரத்திற்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்வதற்கான காலம் தொலைவில் இருக்கப் போவதில்லை என்ற யாதார்த்த நிலையும் அதுவே!

நன்றி

இவ்வண்ணம்,

ச.கேசவன்

தமிழ்மாணவர் ஒன்றியம்

யாழ் மாவட்டம்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.