Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீர்கொழும்பு மருத்துவரை அங்கொடைக்கு அனுப்ப உத்தரவு

Featured Replies

நீர்கொழும்பு வைத்தியசாலையில் யுவதி மரணம் மருத்துவரை அங்கொடைக்கு அனுப்ப உத்தரவு

[08 - December - 2007]

நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் யுவதி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து மரணமான சம்பவம் தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரான டாக்டரை அங்கொடை மனநோய் ஆஸ்பத்தியில் அனுமதித்து சிகிச்சையளிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபத் ரணசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது சந்தேக நபர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநோய்ப்பிரிவு டாக்டர் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து நீதிவான் அவரை மனநோய் சிகிச்சைக்கு உட்படுத்துமாறும் அத்துடன், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின்போது நீர்கொழும்பு ஆஸ்பத்திரி சத்திரசிகிச்சைக்கூட சுத்திகரிப்பு ஊழியரான திருமதி எல்.எம். பியதிஸ் (வயது 50) சாட்சியம் அளிக்கையில் கூறியதாவது;

சத்திரசிகிச்சைக் கூடம் 7 வது மாடியில் உள்ளது. சம்பவதினம் நான் எனது வேலையை முடித்து விட்டு கதிரையில் இருந்தேன். காலை 11 மணிக்கு 6 ஆவது மாடியில் காட்போட்டை இழுக்கும் சத்தம் கேட்டது.

எட்டிப்பார்த்தபோது சந்தேக நபரான டாக்டர் (எதிரிக்கூண்டில் நிற்பவர்) ஒரு பெண்ணை காட்போட்டில் வைத்து இழுத்துச் சென்றார். நான் என்ன நடந்தது என்று கேட்க ஒன்றுமில்லை என்று கூறினார்.

இதனை நான் தாதிமார்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் அதைப்பற்றி நமக்கு என்ன ஒருவரிடமும் ஒன்றும் இதைப்பற்றி சொல்லாதே என்றனர்.

கட்டானை ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியரான எம்.ஏ.தம்மிக (வயது 37) தனது சாட்சியத்தில் கூறியதாவது;

இறந்த சாமிலா திஸநாயக்கா எனது அறைக்கு அருகில் தங்கியுள்ளார். அவருக்கு அக்டோபர் 27 ஆம் திகதி மார்பகத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சத்திரசிகிச்சை நடைபெற்றது. சம்பவதினம் அவர் கிளினிக்குக்காக நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

காலை 5.30 மணிக்குப் போனவர் மாலை 7 மணிவரையும் திரும்பிவராததால் நான் ஆட்டோவில் அவரைத்தேடி நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்கே ஒரு பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்ததாகவும் அவரது உள்ளாடை இருக்கவில்லை எனவும் அறிந்தேன் என்றார்.

றாகம சட்டவைத்திய அதிகாரி டாக்டர் பிறியஞ் பெரேரா பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்து சாட்சியம் அளிக்கும் போது, இறந்த யுவதியின் முள்ளந்தண்டு, இடுப்பு எலும்பு, மண்டை ஓடு என்பன உடைந்ததால் ஏற்பட்ட உள் இரத்தப்பெருக்கே மரணத்துக்கு காரணம் என்றார். மேல் விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

--thinakkural.com-

Edited by Kuddi thampi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.