Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் திருநாள் 2008

Featured Replies

pongal.jpg

உந்தப் போஸ்ரரையும் தமிழர் போஸ்ராக போட முயற்சித்திருக்கலாம். பெரியவா எல்லாம் சம்பந்தப்படிருக்கிறேள். அடுத்த முறையாவது கவனத்தில எடுங்கோ.

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் திருநாள் 2008 பிரான்ஸ் நிகழ்வுகள்

கடந்த 20ஆம்திகதி ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டில் முதல் தடவையாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2007 நிகழ்வுகளைப் போலவே இந்த இரண்டாவது நிகழ்வும் வெற்றிகரமாக நடந்தேறியது முன்னைய ஆண்டைப்போலவே தமிழர் திருநாள் 2008ஆம் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தன. இவ்வாண்டு தமிழர் திருநாள் இருநாள் நிகழ்வுகளாக அமைந்திருந்தன. முதல்நாளான 19012008 சனிக் கிழமை ஆய்வரங்கும் மறுநாள் அரங்கநிகழ்வும் இடம் பெற்றன. இன்னிய அணியின் வரவேற்புடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தாயகத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தால் வடிவமைக் கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதான இன்னிய அணி முதல்தடவையாக தாயகத்திற்கு வெளியே இந்நிகழ்வில் அறிமுகமானது ஒரு வரலாற்று பதிவாகியது.

தாயகத்தில் இன்னிய அணியை வடிவமைத்தவர்களில் ஒருவரான கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் நெறிப்படுத்தலில், நடன ஆசிரியை அனுஷா மணிவண்ணனாலும், செல்வி வினோதா சந்திரகுமாராலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ்“சோலை மாணவிகள் இதனை நிகழ்த்திக் காட்டினர். சிறப்புவிருந்தினர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்த தொடக்க நிகழ்வாக இன்னிய அணியின் வரவேற்பு அமைந்தது அனைவரையும் உற்சாகம் கொள்ளச் செய்தது.

தமிழர் திருநாள் 2008இன் சிறப்பு அழைப்பாளர்களாக பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப் பினர் பிரான்சுவா பொப்புனி, மொறீசியசின் முன்னாள் கல்வி அமைச்சரும், தற்போது யுனஸ் கோவின் இயக்குநர்களில் ஒரு வாராக பணியாற்றும் ஆறுமுகம் பரசுராம், மொறீசியசின் துணை பிரதமமந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஷ்ணசாமி, புதுவை பல்கலைக் கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர் பன் னீர்ச்செல்வம், மலேசியாவில் தமி ழினச் செயற்பாட்டளரும், தமிழா சிரியருமான திருமாவளவன், கிழக்கு பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பாலசுகுமார், பாரிஸ் பல் கலைக்கழக தமிழ்த்துறையை சேர்ந்த அ.முருகையன், கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி.மரி வீரபத் திரன், எழுத்தாளர் பிரான்சிஸ் பொன்னமான் மற்றும் பாரிஸ் புறநகர்ப்பிரி மாநகரசபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

தமிழர் திருநாள் 2008 விழா மண்டபத்தை நாடா ளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்புனியும் பொங்கல் அரங்கை மொறீசியசின் முன்னாள் கல்வி அமைச்சரும், தற்போது யுனஸ்கோவின் இயக்குநர்களில் ஒருவராக பணியாற்றும் ஆறுமுகம் பரசுராம் கோலம் அரங்கை மொறிசியசின் துணை பிரதமமந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஷ்ணசாமியும் கண்காட்சி அரங்கை கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி.மரி வீரபத்திரனும் நாடா வெட்டி தொடக்கி வைத்தனர்.

குழந்தைகளுக்கு அகரம் எழுதுவிக்கும் சான்றோர்களாக புதுவைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர். பன்னீர்ச்செல்வமும் மலேசியாவில் தமிழினச் செயற் பாட்டளரும் தமிழாசிரியருமான திருமாவளவனும் செயற் பட்டனர். அகரம் எழுதிய 27 குழந்தைகளில் கரீபியன் தீவினைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அகரம் எழுதிய குழந்தைகள் பாரிஸ் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்து அ.முருகையன், மற்றும் கிழக்கு பல்கலைக் கழக கலைப்பீடாதிபதி பாலசுகுமார் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.

பொங்கல் பொங்கும் நிகழ்வரங்கை புதுச்சேரி வழிவந்த தமிழர்களின் சுயமரியாதை இயக்கத்தினர் முன்னெடுத் திருந்தனர். அவர்களே சிறுவர்களையும் இணைத்து திருக்குறள் அரங்கையும் சிறப்பித்தினர்.

கோலமிடல் அரங்கில் கடந்த ஆண்டு கோலமிட்ட திருமதி சாந் தாலுடன் இணைந்து திருமதி.ரவி ராஜேஸ்வரி, செல்வி சோபிதா வீரசிங் கம் ஆகியோர் கோலமிட்டனர். தொகு சொற்கோடியனாக.பாலசுகுமார் மாறி பார்வையாளர்களை ஈர்த்தார்.

கூத்து விபரண நிகழ்வை திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த. சாம்பிரதீபன் நிகழ்த்தி பார்வையாளரின் பாராட் டைப் பெற்றார். 'கரிபியன் தீவில் தமிழ்" என்னும் தலைப்பில் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த தமிழர்கள் மேடையில் பாடி னர். அவர்களது பாடலில் சில சொற் களே புரியக்கூடியதாக இருந்தது. இது எதிர்காலத்தில் எமது தலைமுறையினர் எப்படி இருப்பார்கள் என்பதன் அபாயத்தை எடுத் துரைப்பதாக அமைந்திருந்தது.

பாரதியாரின் வாழ்க நிரந்தரம் பாடலுக்கான நடனத்தை நடன ஆசிரியை தனுஷா மதியின் மாணவிகள் ஆடினர். ஜேர்மனியில் இருந்து வருகை தந்த பொய்க்கால் குதிரை ஆட்டக்குழுவில் இங்கு பிறந்து வளர்ந்த தலைமுறை யினரே இணைந்திருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத் தது. அவர்களது ஆட்டம் அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது.

இசையரங்கத்தை கடந்த ஆண்டைப்போலவே இவ் வாண்டும் திரு.உமாபதி குழுவினர் நடாத்தினர். இறுதி நிகழ்வாக ரவீந்திரன் குழுவினரின் களரி இடம் பெற் றது. எமது பாரம்பரிய கலை வடிவமான 'களரி" மேடையில் மிகச்சிறப்பாக மைந்திருந்தது. தமிழர் திரு நாள் 2008இன் சிறப்பு நிகழ்ச்சி களாக இன்னிய அணியையும், களரியையும் கொள்ளலாம். தமிழர் திருநாள் அரங்கத்துள் ஈழம், புதுவை, தமிழ்நாடு, மலேசியா, மொறீசியஸ், கரீ பியன் தீவுகள் என பல்தேசிய த்தமிழர்கள் குழுமியிருந்ததும் பங்கேற்றதும் உலகத் தமிழர் ஒன்றிணைவினை உணர்த்தி நின்றது. கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு தமிழர் திருநாள் பல அம்சங்களில் சிறப்புற்றிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

நன்றி: வீரகேசரி

http://www.virakesari.lk/VIRA/culturenew/c...s.asp?key_c=147

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த பிரான்ஸின் தமிழர் திருநாள் -2008

தமிழர் திருநாள் - 2008 பிரான்ஸ் நிகழ்வுகள் 20-01-2008 ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டில் முதல் தடவையாக நடைபெற்ற தமிழர் திருநாள் - 2007 நிகழ்வுகளைப் போலவே இவ்வாண்டும் தொடர்ந்த இந்த இரண்டாவது நிகழ்வும் வெற்றிகரமாக நடந்தேறியது. முன்னைய ஆண்டைப்போலவே தமிழர் நிருநாள் - 2008ம் பல சிறப்பம்சங்களை கொண்டிருந்தது. இவ்வாண்டு தமிழர் திருநாள் இருநாள் நிகழ்வுகளாக அமைந்திருந்தன. முதல்நாளான 19-01-2008 சனிக்கிழமை ஆய்வரங்கும் மறுநாள் அரங்கநிகழ்வும் இடம்பெற்றன.

தாயகத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதான இன்னிய அணி முதல்தடவையாக தாயகத்திற்கு வெளியே இந்நிகழ்வில் அறிமுகமானது ஒரு வரலாற்று பதிவாகியது. தாயகத்தில் இன்னிய அணியை வடிவமைத்தவர்களில் ஒருவரான பாலசுகுமாரனின் நெறிப்படுத்தலில், நடன ஆசிரியை அனுஷா மணிவண்ணனாலும் செல்வி. வினோதா சந்திரகுமாராலும் பயிற்றுவிக்கப்பட்டு தமிழ்ச்சோலை மாணவிகள் நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்து தொடக்க நிகழ்வாக இன்னிய அணியின் வரவேற்பு அமைந்தது அனைவரையும் உற்சாகம் கொள்ளச் செய்தது.

தமிழர் திருநாள் 2008ன் சிறப்பு அழைப்பாளர்களாக பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்புனி, மொறிசியஸின் முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போது யுனஸ்கோவின் இயக்குநர்களில் ஒருவராக பணியாற்றும் ஆறுமுகம் பரசுராம், மொறிசியஸின் துணைப் பிரதம மந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஸ்ணசாமி, புதுவை பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர் பன்னீர்ச்செல்வம், மலேசியாவில் தமிழ்ச் செயற்பாட்டாளராக உள்ள திருமாவளவன், கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பாலசுகுமார், பாரிஸ் பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த அ.முருகையன், கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி மரி வீரபத்திரன், எழுத்தாளர் பிரான்சிஸ் பொன்னமான் மற்றும் பல மாநகரசபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

விழா மண்டபத்தை பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்புனியும் பொங்கல் அரங்கை மொறிசியஸின் முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போது யுனஸ்கோவின் இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றும் ஆறுமுகம் பரசுராமும் கோலம் அரங்கை மொறிசியஸின் துணைப் பிரதம மந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஸ்ணசாமியும் கண்காட்சி அரங்கை கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி மரி வீரபத்திரனும் நாடாவை வெட்டி தொடக்கி வைத்தனர். குழந்தைகளுக்கு அகரம் எழுதுவிக்கும் சான்றோர்களாக புதுவை பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர் பன்னீர்ச்செல்வமும் மலேசியாவில் தமிழ்ச் செயற்பாட்டாளராக உள்ள திருமாவளவனும் செயற்பட்டனர். அகரம் எழுதிய 27 குழந்தைகளில் கரீபியன் தீவினைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அகரம் எழுதிய குழந்தைகள் பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அ.முருகையன், கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பீடாதிபதி பாலசுகுமார் ஆகியோரால் மதிப்பளிக்கப்பட்டனர்.

பொங்கல் பொங்கும் நிகழ்வினை புதுச்சேரி வழிவந்த தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர். அவர்களே சிறுவர்களையும் இணைத்து திருக்குறள் அரங்கை சிறப்பித்தனர். கோலமிடல் அரங்கினை கடந்த ஆண்டு கோலமிட்ட திருமதி சாந்தாலுடன் இணைந்து திருமதி ரவி ராஜேஸ்வரி, செல்வி சோபிதா வீரசிங்கம் ஆகியோர் கோலமிட்டனர். தொகுசொற்கோடியனாக பாலசுகுமார் மாறி பார்வையாளர்களை ஈர்த்தார். கூத்து விபரண நிகழ்வை திருமறைக்கலாமன்றத்தை சேர்ந்த சாம்பிரதீபன் நிகழ்த்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். கரீபியன் தீவில் தமிழ் என்னும் தலைப்பில் கரீபியனைச் சேர்ந்த தமிழர்கள் மேடையில் பாடினர். அவர்களது பாடலில் சில சொற்களே புரியக்கூடியதாக இருந்தது. இது எதிர்காலத்தில் எமது தலைமுறையினர் எப்படி இருப்பார்கள் என்பதன் அபாயத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.

பாரதியாரின் வாழ்க நிரந்தரம் பாடலுக்கான நடனத்தை நடன ஆசிரியை தனுஷா மதியின் மாணவிகள் ஆடினர். ஜேர்மனியில் இருந்து வருகை தந்த பொய்க்கால் குதிரை ஆட்டக்குழுவாக இங்கு பிறந்து வளர்ந்த தலைமுறையினரே விளங்கியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.அவர்களது ஆட்டம் அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது. இசையரங்கத்தை கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டும் உமாபதி குழுவினர் நடாத்தினர். இறுதி நிகழ்வாக ரவீந்திரன் குழுவினரின் களரி இடம்பெற்றது. எமது பாரம்பரிய கலைவடிவமான களரி மேடையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர் திருநாள் 2008ன் சிறப்பு நிகழ்ச்சிகளாக இன்னிய அணியையும் களரியையும் கொள்ளலாம்.

தமிழர் திருநாள் அரங்கினில் ஈழம், புதுவை, தமிழ்நாடு, மலேசியா, மொறீசியஸ், கரீபியன் தீவுகள் என பல்தேசிய தமிழர்கள் குழுமியிருந்ததும் பங்கேற்றதும் உலகத் தமிழர் ஒன்றிணைவினை உணர்த்தி நின்றது. கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு தமிழர் திருநாள் பல அம்சங்களில் சிறப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினக்குரல்

http://www.thinakkural.com/news%5C2008%5C1...unday/page9.htm

பிரான்சில் நடைபெற்ற தமிழர் திருநாள் - 2008

ஜனவரி 24,2008,09:38 IST

பாரிஸ்: பிரான்சில் தமிழர் திருநாள்- 2008 வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியாக 19.01.08 அன்று ஆய்வரங்கமும் மறுநாள் அரங்க நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்னி பங்கேற்றார். மேலும் பலர் தவைர்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இதில் கரீபியன் தமிழர்கள் தமிழ் எனும் தலைப்பில் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். இந்த தமிழர் திருநாள் அரங்கினில் ஈழம் , தமிழ்நாடு ,மலேசியா ,கரீபியன் தீவுகள் , என பல தேசிய தமிழர்கள் கலந்து கொண்டது உலகத் தமிழர்களின் ஒற்றுமையை உணர்த்தியது

நன்றி: தினமலர்

http://www.dinamalarbiz.com/nri/Country-de...ope&cat=new

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.