Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாட்டில் படகு கொள்வனவு முயற்சியில் ஈடுபட்ட மூன்று தமிழர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 09-12-2007 23:14 மணி தமிழீழம் [மகான்]

தமிழ்நாட்டில் படகு கொள்வனவு முயற்சியில் ஈடுபட்ட மூன்று தமிழர்கள் கைது

தமிழ்நாடு மயிலிட்டிபட்டினத்தில் வைத்து ஈழத் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் இரகசிய புலனாய்வுப் பிரிவான கியூ பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஈழத்தமிழரான ஜெயக்குமார் அல்லது கெளரிசங்கர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் படகுகள் கொள்வனவில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இருவர் ஈழத்தமிழர்கள் எனவும் மற்றவர் சென்னையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடம் 4 இலட்சம் ரூபாக்கள் வைத்திருந்தாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளுக்கு படகுகள் வாங்க வந்த விடுதலைப் புலிகள் 2 பேர் சென்னையில் கைது

சென்னை :இலங்கைக்கு இயந்திர படகுகள் கடத்த முயன்ற விடுதலைப்புலிகள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிய சென்னை பிரமுகரும் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இயக்கங்களை ஷகியூ' பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து பொருட்கள் வாங்கி வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு உதவும் இந்த செயலில் ஈடுபட்ட ஜேம்ஸ், ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இவர்களுக்கு உதவி புரிந்த சூளைமேட்டைச் சேர்ந்த ரவிகுமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஷகியூ' பிரிவு போலீசாரிடம் ஜேம்ஸ் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு: இலங்கையில் வியாபாரியாக இருந்த நான் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தேன். அவர்கள் இயக்கத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன். சென்னைக்கு அக்டோபர் மாதம் வந்த நான், புலிகளுக்கு வேண்டிய பொருட்களை பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் பீடி பண்டல்களுடன் சேர்த்து இலங்கைக்கு அனுப்பினேன்.இலங்கையில் புலிகள் கடல் பகுதியில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயர் அலி என்பவன் மூலம், நான் அனுப்பிய பொருட்கள் புலிகள் இயக்கத்திற்கு சென்றடைந்துள்ளது. இவனது கூட்டாளி தான் ராமேஸ்வரத்தில் உள்ள புஷ்ப தன்ராஜ்.இலங்கை யாழ்ப்பாணம் வெல் வட்டித்துறையை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற கவுரிசங்கர்(34). கடல் புலிகள் இயக்கத்தில் 95ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பணியாற்றியவர். கடல் புலிகள் தலைவர் சூசை என்பவரது உத்தரவின் பேரில் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தஞ்சாவூர் சென்று தங்கினார்.லண்டனில் உள்ள விடுதலைப்புலி கருப்பையா என்ற கடால்பி என்பவர், தஞ்சாவூரில் உள்ள ஜெயக்குமாருக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை அனுப்பினார். அப்பணத்தில் புதிய படகு ஒன்றை விலைக்கு வாங்கினார் ஜெயக்குமார். புதிய படகை அபிராமபட்டினம் வரை ஓட்டிச் சென்றதால் படகில் தண்ணீர் புகுந்தது.படகை விற்றவரிடம் சென்ற ஜெயக்குமார், கூடுதலாக பணம் கொடுத்து படகை பழுது பார்த்து தருமாறு கூறினார்.

படகை பழுது பார்ப்பதற்கு ஆறு மாதம் தாமதம் ஆகியுள்ளது. தயாரான தஞ்சாவூர் அருகேயுள்ள மல்லிப்பட்டினத்தில் ஜேம்ஸ் நிறுத்தி வைத்துள் ளார். அந்த படகை என்னிடம் ஒப்படைக்கும் படி புலிகள் தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளது.இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. ராணுவத்தினரின் ராக்கெட் தாக்குதலில் புலிகளின் கடல் பிரிவு பலத்த சேதமடைந்துள்ளது. தாக்குதலினால் பல படகுகள் கடலில் மூழ்கி விட்டன. அதனால், புலிகள் கடல் பிரிவை பலப்படுத்த புதிய படகுகளை வாங்கி வருகின்றனர். இலங்கை ராணுவத்தினருக்கு தெரியாமல் கடலில் ஊடுருவி செல்ல, கடலில் நின்றவாறு நீந்திச் செல்ல பிளாஸ்டிக் கால் துடுப்புகளை புலிகள் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு வாக்குமூலத்தில் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

கியூ பிரிவு சுறுசுறுப்பு: கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார் தலைமையில், புலிகளுக்கு இரும்பு உருளைகள்(பால்ரஸ்), அலுமினியப் பொருட்கள் கடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று கைதானவர்களுடன் சேர்த்து84 பேர் இந்தாண்டில் கைது செய்யப் பட்டனர். இதில் 36 பேர் தேசிய பாதுகாப்பு(என்.எஸ்.ஏ) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ.10 லட்சம் பறிமுதல் :தமிழக உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., சேகர் உத்தரவின் பேரில் கியூ பிரிவு எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் கலியன் தலைமையிலான போலீசார் மல்லிப்பட்டினத்திற்கு சென்றனர். படகை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ. நான்கு லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.புலிகளுக்கு உதவிய சென்னையைச் சேர்ந்த ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நேற்று மாலை ஆலந்துார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒன்பது லட்சத்து 48 ஆயிரத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.புலிகளுக்கு உதவிய வழக்கில் தப்பியோடிய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த புஷ்ப தன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புலிகள் கைதானது எப்படி: முழு விவரம் ::கடற்புலிகளுக்காக படகுகள் வாங்கி சென்னையில் முகாமிட்டிருந்த விடுதலைப்புலிகள் இருவர், சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசாரிடம் எப்படி சிக்கினார்கள் என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் என்ற ராஜா(46). இவரது மகன் ஷபியூஸ்லெஸ்' என்ற பெயரில் இலங்கையில் கடை ஒன்றை நடத்தி வந்தார். மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு வேண்டிய உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார். அத்துடன், ஏழு படகுகளை வைத்து கடலில் மீன் பிடித்து, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து ஏற்றுமதி செய்து வந்தார்.இவரது படகில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள், புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்து வந்தனர். ஜேம்சிற்கு சொந்தமான படகுகளை சிறை பிடித்த கடற்புலிகள், அதிலிருந்த டீசலை திருடி வந்தனர். இப்பிரச்னையை கடல் புலிகள் தலைவர் தம்பி அண்ணா என்பவரின் கவனத்திற்கு ஜேம்ஸ் கொண்டு சென்றார். இதில் ஜேம்சிற்கும், கடல் புலி தலைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.ஜேம்ஸ் அவரது ஒரிஜினல் பாஸ் போர்ட்டில் அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றார். இதை பயன்படுத்திக் கொள்ள கடல் புலிகள் திட்டம் தீட்டினர். அதன்படி, அக்.10ல் ஜேம்ஸ் சென்னை வந்தார். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் ரவிக்குமார்(45). இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருக்கும், புலிகள் கடல் பிரிவு தலைவர் தம்பி அண்ணாவுக்கும் முன்னரே தொடர்பு இருந்தது.சென்னை வந்த ஜேம்சிற்கு, ரவிக்குமார் என்பவர் அரும்பாக்கத்தில் வாடகை வீடு பிடித்து தங்க வைத்தார்.

இலங்கையில் உள்ள புலிகளின் கடல் பிரிவு தலைவர் தம்பி அண்ணா, சென்னையில் இருந்த ஜேம்சிடம், ஷபடகின் பின்புறம் கட்டப்பட்டுள்ள கயிற்றை பிடித்துக் கொண்டு தண்ணீரில் வழுக்கிச் செல்லும் பிளாஸ்டிக் கால் பட்டைகள் வாங்க வேண்டும். அதி வேகமாக தண்ணீரில் நின்ற நிலையில் வழுக்கிச் செல்லும் போது முகத்தில் தண்ணீர் பட்டால், அதனை சமாளிக்க கண்ணாடியுடன் கூடிய தலைக் கவசம் வாங்க வேண்டும். பத்திற்கும் மேற்பட்ட கால் பட்டை மற்றும் தலைக் கவசத்தை சென்னையில் வாங்குங்கள்' என உத்தரவிட்டார்.சென்னையில் நீச்சல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்ற ஜேம்ஸ், புலிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். ஷநீங்கள் கூறிய பொருட்களையெல்லாம் வாங்கி விட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்' என புலிகளின் கடல் பிரிவு தலைவரை தொடர்பு கொண்டு கேட்டார் ஜேம்ஸ்.ஷநீங்கள் வாங்கிய பொருட்களுடன் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்படுங்கள். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்குங்கள். உங்களை விடுதலைப்புலி ஒருவர் வந்து சந்தித்து பேசுவார்' என தம்பி அண்ணா கூறினார். சென்னையில் இருந்து ஜேம்ஸ் மதுரை சென்றார். மருத்துவமனையில் தங்கியிருந்த அவரை விடுதலைப்புலி ஒருவர் சந்தித்தார். அவர், ஹவாலா மூலம் மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட லட்கணக்கான ரூபாய் பணத்தை ஜேம்சிடம் கொடுத்தார். பெயர் தெரியாத அந்த விடுதலைப்புலி பின்னர் தலைமறைவானார்.மருத்துவமனையில

சென்னை விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் கைது

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 9, 2007

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் 2 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் விடுதலைப் புலிள் ஊடுறுவியிருப்பதாகவும், படகுகள் வாங்க அவர்கள் வந்துள்ளதாகவும், விமான நிலையத்தில் வைத்து அவர்கள் சந்திக்கவுள்ளதாகவும் கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் விடுதலைப்புலிகள் என்று தெரியவந்தது.

அவர்களில் ஒருவரான ஜேம்ஸ் என்கிற ராஜா (46) மன்னார் டவுன் பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவரான கவுரிசங்கர் என்கிற ஜெயக்குமார் (34) என்பதும் தெரிய வந்தது.

கவுரிசங்கர் கடல்புலி பிரிவை சேர்ந்தவராம். இவர் விடுதலைப் புலிகளுக்கு தேவையான அதி நவீன படகுகளை வாங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கள்ளப் படகு மூலம் வந்துள்ளார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த விடுதலைப்புலி கருப்பையா என்பவர் படகு வாங்குவதற்காக

ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார்.

திருச்சியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து படகு வாங்குவதற்கான் அனைத்து வேலைகளையும் செய்து வந்துளார் கவரிசங்கர். இவருக்கு உதவுவதற்காக ஜேம்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.

மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில் அடிக்கடி விடுதலைப்புலிகளுக்கு தேவையான பொருட்களை கள்ளத் தோணி மூலம் கடத்துவதை ஜேம்ஸ் வழக்கமாக வைத்துள்ளார்.

கருப்பையா கொடுத்த பணத்தை வைத்து சென்னை, சூளைமேட்டை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவரின் உதவியுடன் படகை வாங்கியுள்ளார். இதை இலங்கைக்கு கடத்துவதற்காக தான் ஜேம்ஸ் இந்தியா வந்துள்ளார்.

இவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ரவிக்குமார் செய்து கொடுத்துள்ளார். இதன் பேரில் கியூ பிரிவு போலீசார் ரவிக்குமாரையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் மற்றும் கவுரிசங்கரிடமிருந்து 4 செல்போன்கள், ரொக்க பணம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் இலங்கை பணம் ரூ.4,140 ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த படகை தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் மறைத்து வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இவர்கள் திருச்சியில் எங்கு தங்கியிருந்தார்கள், திருச்சி நகருக்குள் வேறு விடுதலைப்புலிகள் எவரும் ஊடுருவியுள்ளனரா என்றும், மலேசியாவிலிருந்து பணம் அனுப்பிய விடுதலைப்புலி கருப்பையா பற்றியும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைநகரிலேயே 2 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

--thatstamil.com-

சென்னை (ஏஜென்சி)இ திங்கள்கிழமைஇ 10 டிசம்பர் 2007 ( 12:17)

சென்னை விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் இரண்டு பேர் பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மதுரை மற்றும் தஞ்சை பகுதிகளில் புலிகளுக்கு உதவிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் விடுதலைப்புலிகள் சிலர் ஊடுருவியிருப்பதாகவும்,சென்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.