Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கு மக்களுக்கு தமது அடிப்படை மனித உரிமை கிடைக்காதன் காரணமாகவே, அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்

Featured Replies

sarathnsilva.jpg

[11-12-2007 3.00pm]

வடக்கு கிழக்கு மக்களுக்கு தமது அடிப்படை மனித உரிமை கிடைக்காதன் காரணமாக, அதனைப் பெற்றுக்கொள்ளவே அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்ததாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (டிச.10) அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார்.

''வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தமக்குள்ள அடிப்படை மனித உரிமை அற்றுபோனதை அடுத்தே அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள். யுத்தம் குறையும் அளவிற்கு சமாதானம் அதிகரிக்கும். அடிப்படை மனித உரிமைகள் காக்கப்பட்டாலே அபிவிருத்திகள் நடைபெறும்'' என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்

பிரதம நீதியரசர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு யுகத்திலாவது அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது அடிப்படை மனித உரிமைகள் பேணப்பட்ட யுகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான ஆர்வம் அதிகரித்தமை தொடர்பான வரலாற்றில் உதாரணங்களை எடுத்து விரிவாக பிரதம நீதியரசர் விளக்கமளித்தார்.

மேலும், 1942ம் ஆண்டு யுத்தம் முடிவடையும் சந்தர்ப்பத்தில், மனித உரிமைகள் என்ற தொனிப் பாரியளவில் பேசப்பட்டதாகவும், மனித உரிமைகள், மனித சுதந்திரன காப்பது போன்ற கருத்துக்களும் இதன்போது பெரிதாக பேசப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமையவே 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அமைப்பு பிரகடன படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''உலகமயமாக்கலுக்கு மத்தியில் வாழும் எங்களின் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும். எவ்வாறு இல்லையெனில், பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அடிப்படை மனித உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தகுதிகள் தேவையில்லை. அடிப்படை மனித உரிமைகளுக்கு தடைகள் இல்லை. நாம் அனைவரும் மனிதர்கள் என்பதால், எங்களது பாதுகாப்பும் எமது அனைவருக்கும் உரித்தானதாகும். இன, மத, ஜாதி பேதமின்றி அடிப்படை மனித உரிமை காக்கப்படவேண்டும்'' என பிரதம நீதியரசர் மேலும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் என்பது அனைவரும் சமநிலை அளிக்கப்படும் இடம் எனவும், அடிப்படை மனித உரிமையை அடிப்படையாகக் கொண்டே அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படுவதாகவும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோத கைதுகள், சூழல் மாசுபடுத்தல், மணல் - களிமண் அகல்வு, ஒலிபெருக்கிகளினால் செய்யப்படும் ஒலியை மாசடைய செய்தல் உள்ளிட்ட அநேகமான பிரிவுகளின் கீழ், அவற்றை நியாயமாக நடைமுறைப்படுத்துவதும் இந்த அடிப்படை மனித உரிமைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உரையின் இறுதியில் கருத்து தெரிவித்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இந்த நாட்டின் அனைவருக்கும், ஒரே சமநிலையில், ஒரே அந்தஸ்துடன், அனைத்துத் துறைகளும் இயங்கும் யுகம் மலரவேண்டும் என தாம் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

http://lankadissent.com/index.php?option=c...40&Itemid=1

என்னே அதிசயம், சரத் என் சில்வா BUDDHIST தொலைக்காட்சியில் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து ஞானம் பெற்றுவிட்டாரா?

தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் பயங்கரவாதத்தை ஆதரித்தும் கருத்து வெளிட்டதற்காக பாக்கிஸ்தானில் நடந்தது போல இவரும் விரைவில் வீட்டுக்காவலில் வைக்கப்படுவாரா?

Edited by சாணக்கியன்

சரத் என் சில்வாவில் கை வைக்க வெளிக்கிட்டே ரணிலிடம் இருந்து 3 அமைச்சுகளை புடுங்கினார் சந்திரிக்கா என கேள்விப்பட்டேன் அல்லது அதனை காரணமாக்கி இருக்கலாம்

ச்

போர் மூலம் அமைதியை உருவாக்க முடியாது என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.