Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பயங்கரவாத ஒழிப்பும் அரசின் தீர்வுத்திட்டமும்" -தவச்செல்வன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பயங்கரவாத ஒழிப்பும் அரசின் தீர்வுத்திட்டமும்" -தவச்செல்வன்-

தீர்வுத்திட்டம் ஒன்றை அரசு முன்வைக்கப் போவதாக கூறப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. பதட்டமடையத் தொடங்கியுள்ளது. மறு புறத்தில் டக்ளஸ் தேவானந்தா ஏமாற்றப்பட்டு விடுவோமோ என ஆதங்கப்படத் தொடங்கியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணசபைத் திட்டத்தை அரசு முன் வைக்கும் எனவும், இதன்போது மாகாண முதல் அமைச்சராக டக்ளசே இருப்பார் எனவும் மகிந்தர் ஏற்கவே டக்ளசிடம் ஒரு விருந்துபசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை பூரணமாக நம்பிய டக்ளஸ் தேவானந்தா தானே வடக்கு, கிழக்கின் முதலமைச்சர் என கற்பனை பண்ணியதும் அல்லாமல், அதை வெளிப்படையாகவும் ஊடகங்களிற்கு கூறமுற்பட்டார்.

வடக்கு கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படாமல் தானே முதல்வராக இருப்பேன் எனவும், அதற்குரிய தகுதி தற்போது தனக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.

இதனை அடுத்து அனைத்துக்கட்சிக் குழுவின் தலைவர் திஸ்ஸவிதாரண வெளியிட்ட அறிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். தீர்வுத்திட்டம் வெளியாகிய பின்னரே தேர்தல் நடத்தப்படும் எனவும், இதில் இடைக்கால ஏற்பாடுகளிற்கு வாய்ப்பு குறைவு எனவும் கூறி இருந்தார். இவரின் கருத்தை அடுத்து தான் ஏமாற்றப்பட்டு விட்டதான ஆதங்கத்தில் டக்ளஸ், தீர்வுத்திட்டம் தொடர்பாக தற்போதைக்கு மௌனமாக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் தீர்வுத்திட்டம் வெளியிடப்படும் என அனைத்துக்கட்சிகள் குழுவின் தலைவர் திஸ்ஸவிதாரண கூறியுள்ளளார்.

அத்துடன் வட அயர்லாந்து, ஸ்பெயின் நிர்வாக முறைகளை அறிந்து கொள்ள இந்த அனைத்துக் கட்சிக்குழு அந்த நாடுகளிற்கு பயணங்களை மேற்கொள்ள உள்ளது. மேற்கொள்ளப்படும் பயணங்கள் விரைவாக முடிக்கப்பட்டு தீர்வுத்திட்டமும் விரைவாக வைக்கப்படும் என அனைத்துக்கட்சிக் குழு அறிவித்துள்ளதை அடுத்து ஜே.வி.பி. இணக்கமடையத் தொடங்கி உள்ளதுடன், இனவாதக் கருத்துக்களையும் வெளியிடத் தொடங்கி உள்ளது. அத்துடன் அரசை மிரட்டவும் முற்படுகிறது.

ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ச வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவை மகிழ்விப்பதற்காகவே அதிகார பரவலாக்கல் யோசனையினை அரசாங்கம் முன்வைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இந்தியத் தலைவர்களின் யோசனைகளுக்கு அரசு பணியத் தேவை இல்லை எனவும், அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை அரசு முன்வைத்தால் தாம் கடும் நிலைப்பாட்

டினை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் முதலில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் பின்னர் வடக்கு, கிழக்கில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் யோசனைகளை கேட்டறிந்து அதற்கேற்றவாறு தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

அதுவரை காலமும் அரசியல் அமைப்பில் உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலே போதுமானது, அதில் குறைபாடுகள் இருந்தபோதும், மொழி அமுலாக்கல் போன்ற சில பயன்மிக்க சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே இந்தியா, சர்வதேசம் கருத்துரைக்கும் அதிகாரப் பரவலாக்கல் என்ற நாட்டைப் பிரிக்கும் சதித்திட்டத்தில் அரசாங்கம் வீழ்ந்து விடக்கூடாது. ஒற்றையாட்சியின் கீழ் நிர்வாகத்தை பரவலாக்கும் திட்டத்தை பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இதற்கே 2005ல் மக்கள் ஆணை வழங்கி

னார்கள் எனவே அரசாங்கம் சிந்தித்து செயற்படுவது அவசியம் என விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஒற்றை ஆட்சி மரணித்து விட்டதாகக் கூறியள்ளது. கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்கவின் கருத்துப்படி இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.

இந்தியா உதவ முன்வந்துள்ள இந்த தருணத்தை பயன்படுத்தி அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தினை முன்வைக்க வேண்டும் எனவும், 13வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்குப் பின்னர் ஒற்றையாட்சி மரணித்து விட்டதாகவும் தற்போது இதன் சடலத்தை தூக்கிக் கொண்டு ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் அரசியல் நடத்துகின்றன எனவும் ஜே.வி.பி.யையும் ஹெல உறுமயவையும் கிண்டலடித்துள்ளதுடன், நிதித்துறை, பொலிஸ்துறை மற்றும் கல்வி அனைத்து அதிகாரங்களும் மாகாணமட்டத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், அது இன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இனியும் ஒற்றையாட்சியை தூக்கிப்பிடிக்க முடியாது. அதி உச்சக்கட்ட அதிகாரப் பரவலாக்கலையே இனி மேற்கொள்ள வேண்டும் தெற்காசியாவின் பலம் மிக்க நாடாடான இந்தியாவை தள்ளிவிட்டு எந்தத் தீர்வையும் காணமுடியாது மாகாண மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கலோடு மத்திய அரசாங்கத்திலும் சில அதிகாரங்களை சிறுபான்மையினரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் அதாவது அமைச்சரவையில் ஐந்து தமிழர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இவர்களில் இருவர் முஸ்லிம்களாகவும் ஒருவர் மலைநாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இது அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் கூறி உள்ளார். ஒட்டு மொத்தத்தில் அரசின் தீர்வுத்திட்டம் பற்றி தெற்கு அரசியல் வாதிகள் குழம்பத் தொடங்கி விட்டார்கள் என்றே கொள்ள வேண்டும்.

இவர்களின் குழப்பத்திற்கு திஸ்ஸவிதாரணவும் தெளிவை ஏற்படுத்தவில்லை. தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் இவர்களின் தீர்வுத்திட்டம் பற்றி அவர்கள் கணக்கில் எடுக்கவேயில்லை. ஏனெனில் மகிந்த அரசு முன்வைக்கப் போவது அரைகுறைத் தீர்வுத்திட்டம் என்பதை தமிழர் தரப்பு ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது.

அரசின் ஏமாற்று அரசியலில் காலத்தை நகர்த்த விடுதலைப் புலிகள் விரும்பமாட்டார்கள். இந்த நிலையில் விடுதலைப் புலிகளை ஓகஸ்ட் மாதத்திற்கள் முற்றாக அழித்து விடப்போவதாக சரத் பொன்சேகாசபதம் எடுத்துள்ளார். தமது தாக்குதல்கள் மூலம் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுவிடும் எனவும் கூறி உள்ளார்.

இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடும் குருடனைப் போல், இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தேடி மகிந்த அரசு மேற்கொள்ளும் காய் நகர்த்தல்கள் உள்ளன. தமிழரின் உரிமைக்கான விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்திரிக்கும் மகிந்த அரசு, தாம் கூறும் பயங்கரவாதத்தை அடக்கிக் கொண்டு இனப்பிரச்சி

னைக்கு தீர்வும் காணப் போவதாக கூறிவருகிறது.

உண்மையில் மகிந்த அரசு தமிழர்களின் நீதி நியாயமான அபிலாசைகளை தீர்க்க மறுக்கிறது. இது தென்னிலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாத திமிர்த்தனத்தையே காட்டி நிற்கிறது. இன்றைய சிக்கல்களிற்கு மூலகாரணமான இத்தகைய போக்கில் இருந்து வெளிப்பட்டு தமிழருக்கு நீதி வழங்க சிங்களம் எப்போதும் முன்வரப்போவதில்லை என்பதுதான் உண்மை.

நன்றி - "ஈழமுரசு"

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.