Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாவின் மனைவி தமிழகத்திலாம் !

Featured Replies

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்கள் கடல் வழியாகத் தமிழகம் வந்தடைந்தார் எனப் பரபரப்புத் தகவல் கள் தமிழகத்தில் வெளியாகியிருக்கின்றன.

கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் இராமேஸ்வரத்தில் குறிப்பாக மண்டபம் அகதி முகாமில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தித் தகவலைப் பூதகரப்படுத்தினர், என தமிழக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

எனினும், திருமதி. மதிவதனியின் வருகை என்ற தகவல் வெறும் வதந்தி எனப் பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்கள், எனப் பிந்திக் கிடைத்த சென்னைத் தகவல்கள் தெரிவித்தன.

இது பற்றி தமிழக நாளேடுகளில் வெளியான செய்திகளின் விவரம் வருமாறு :-

அமுலில் இருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள வன்னியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

இலங்கை இராணுவம் மற்றும் புலிகளுக்கு இடையில் கடும் சண்டை நடந்து வருகின்றது. புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களை இலங்கை இராணுவம் குறிவைத்து அழித்து வருகிறது. புலிகளும் இறுதிக்கட்டச் சமருக்குத் தயாராகிவிட்டனர் எனக் கூறப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொடரும் போர் காரணமாக, போராளிகள் யாரும் தமிழகக் கடற்பகுதியில் ஊடுருவி விடாமல் இருக்க பாதுகாப்புப் பலப்படுத்தபட்டுள்ளது. அதே நேரத்தில் இலங்கையிலிருந்து தமிழர்கள் படகு மூலம் அகதிகளாக வந்தவண்ணமுள்ளனர். இராமேஸ்வரம் வரும் அகதிகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அகதிகள் முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட பிறகும், புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கபட்படுகின்றனர்.

இந்நிலைலயில், நேற்று முன்தினம் இரவு புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, படகு மூலம் இராமேஸ்வரம் வந்துள்ளார் என்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களைத் தொடர்ந்து தனுஷ்கோடி சவுக்குக் காடுகள் மற்றும் ஓலைக்குடா, பாம்பன் கடற்பகுதியில் புலனாய்வுத் துறையினர் தீவிர சோதனையை நடத்தினர். கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப் பகுதிக்கு இரவில் எத்தனை படகுகள் வந்தன என்றும் விசாரிக்கப்பட்டது.

இராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படி யாரும் தங்கியுள்ளனரா என்றும் பொலிஸார் விசாரித்தனர்.

இராமாநாதபுரம் எஸ்.பி.திருஞானத்தின் உத்தரவுப்படி மண்டபம் அகதி முகாமிலும் பொலிஸார் விசாரணைளைத் தொடர்ந்தனர். மாவட்ட உளவுப் பிரிவுப் பொலிஸார் மட்டுமின்றி, 'கியூ' பிரிவுப் பொலிஸார், மாநில உளவுப் பிரிவினர், மத்திய உளவுப் பிரிவினா என்று மாறி மாறி அகதிகள் முகாமில் விசாரணைக்குச் சென்ற வண்ணம் இருந்தனர். இது தவிர இராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சிலரது வீடுகளுக்கும் பொலிஸார் சென்று விசாரணை செய்ததாக அறிய முடிந்தது.

இது தொடர்பாக எஸ்.பி. திருஞானத்திடம் கேட்ட போது 'பிரபாகரன் மனைவி படகில் வந்தார் எனக் கூறப்படுவது சிலரால் பரப்பி விடப்பட்ட வதந்தி' என்றார். இராமநாதபுரம் கலெக்கடர் கிர்லாஷ் குமாரிடம் கேட்ட போது, 'பிரபாகரனின் மனைவி தமிழகத்திற்குள் அகதியாக வந்துவிட்டார் என்று செய்தி பரவியதும், மாநில உளவுப் பிரிவு, மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் எஸ்.பி. ஆகியோரிடம் விசாரித்தேன் சந்தேகத்துக்குரிய அனைத்து இடங்களிலும் தேடி விட்டோம். எந்தத் தகவலும் கிடைக்கவில்ல. யாரோ வதந்தியைக் கிளப்பியுள்ளனர். ஆனாலும், தொடர்ந்து விசாரணையும், கண்காணிப்பும் நடந்து வருகிறது.' என்று தெரிவித்தார்.

இந்தத் தீவிர விசாரணைகள், தேடுதல்கள் பற்றிய தகவல்கள் தமிழம் எங்கும் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி விட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பில் ஏதோ ரஜனிகாந்தின் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதிறது போலதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..! இது குறித்து ஈழத்தமிழர் விவகாரங்களில் அக்கறையுள்ள தமிழக உறவுகள் தமிழக ஊடகங்களுக்கு கொஞ்சம் அறிவுறுத்துவது சிறந்தது.

அதுமட்டுமன்றி.. றோ மற்றும் உள்நாட்டு உளவு அமைப்புக்களும் இப்படி செய்திகளை ஊடகங்களில வெளியிட்டு.. புலிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர்.. தமிழ்செல்வன் .. சார்ள்ஸ் என்று தளபதிகள் கொல்லப்பட்டுட்டினம் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கினம்..... தோற்றுக்கொண்டிருக்கும் புலிகளுக்கு தமிழகம் ஆதரவு தர வேணுமா என்பது போல செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். இது தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு ஆதரவலை பெருகிடக் கூடாது என்பதற்காகத்தான் செய்யப்படுகிறது.

சமாதான காலத்தில்.. தமிழர் தரப்பில் இழப்புக்கள் அதிகம் தான். அதற்காக சிங்களம் இழப்புக்களை சந்திக்கவில்லை என்றும் இல்லைத்தானே..!

சிறீலங்கா.. லக்ஸ்மன் கதிர்காமரை இழந்தது.. மூன்றாம் நிலை இராணுவத்தளபதியை இழந்தது.. முதன்மை இராணுவத் தளபதி காயமடைந்து தப்பினார்.. கோத்தபாய மயிரிழையில் தப்பினார்.. அண்மையில் அமைச்சர் ஒருவர் மரணமானார்.. என்று அங்காலும் இழப்புக்கள் தொடர்வதையும் சிங்களவர்களும் அவர்களின் கூலிகளும் ஏதோ ஒருவகையில் அழிஞ்சு கொண்டிருக்கினம் என்றதை மறந்திட்டு.. புலிகளின் இழப்புக்களை மட்டும் முதன்மைப்படுத்துவதன் நோக்கம்...???! பிரபாகரன் காயம்.. என்றும் றோ தான் கதை கட்டி விட்டது.. டி பி எஸ் ஜெயராஜ் என்ற கூலிக்கு எழுதுபவர் மூலம்.. இப்ப புலிகள் தோற்பதால்.. மதிவதனி அக்காவே இருக்க இடமின்றி ஓடுறாங்க.. என்றும் காட்டுகிறார்கள்.. இவற்றின் நோக்கம் தமிழகத்தை குழப்பி.. அந்த மக்களின் ஆதரவை ஈழமக்கள் பெறுவதை தடுப்பதுதான்..!

இந்திய அமைதிப்படை காலத்தில் இப்படி எத்தனையைக் கேட்டிருப்பம்... இதோ புலிகளின் மானிப்பாய் பொறுப்பாளர் மயூரன் சரண்.. அந்தப் பொறுப்பாளர் கொல்லப்பட்டார்.. இந்தப் பொறுப்பாளர் கைது.. அங்க பெருந்தொகை ஆயுதங்கள் மூட்பு...புலிகள் அழிந்தார்கள்.. புலிகள் தலைவர் கொல்லப்பட்டார்... இதெல்லாம்.. நமக்குப் பழகிப் போச்சு. ஆனால் தமிழக உறவுகளுக்கு அப்படியல்ல..! :lol:

இந்தியப்படை செய்த ஒன்றைச் சொல்லுறன்..கேளுங்க.. யாழ் நீராவியடியில் ஒரு கோவில் வளவுக்குள் ஒரு துப்பாக்கி அநாதரவாகக் கிடந்தது. அதைக் கண்ட மக்கள்.. என்ன செய்யுறது என்று தெரியாமல்... அருகில் இருந்த இந்தியப்படை முகாமில் போய் சொன்னார்கள். அவர்கள் ஒரு பெரும் படையோட வந்து அதை மீட்டார்கள்.

அன்று மாலை இந்திய வானொலிச் செய்தியில்.. மக்கள் தந்த இரகசியத் தகவலின் படி புலிகளின் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்கள் மீட்பு என்று சொன்னார்கள்.. கேட்ட நமக்கு.. அடப்பாவிகளா என்ற அங்கலாய்க்க முடிந்ததே தவிர உண்மையை உலகுச் சொல்ல முடியவே இல்ல...! இப்படித்தான்.. மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் போலிப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இந்திய ஊடகங்கள் வியாபாரத்தைப் பார்க்கின்றனவே தவிர செய்தியின் தாக்கம் பற்றி சிந்திப்பதே கிடையாது..! :(

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.