Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசின் போக்குக் குறித்து பிரி. வெளிவிவகார அமைச்சர் விரக்தி

Featured Replies

இலங்கை அரசு சில இராணுவ வெற்றிகளைப் பெற்ற பின்னரும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுததுவது குறித்து ஆர்வமில்லமலிருப்பது கவலையளிப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரி. நடாளுமன்றரத்தில் இலங்கையின் தற்போதய நிலை குறித்து எழுப்படப்டட கேள்விக்கு பதிலளிக்கையிலலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளர்.

ஜனவரி முதாலாம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் இடம் பெற்ற படுகொலைகள், அரசு யுத்த நிறுத்த உடன்பாடிக்ககையிலிருந்து விலகுவது ஆகியன குறித்து லிபரல் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக இருதரப்பையும் மீண்டும் பேச்சு மேசைக்குக் கொண்டு வருவதற்கு பிரிட்டிஷ் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என அவர் வினவினார்.

வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹவல்ஸ் இதற்குப் பதிலளிக்கiயில், இலங்கையில், நிலைமை மோசமடைவது குறித்து தானும் ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நோர்வேக்கு உதவ பிரிட்டன் நீண்ட காலமாக முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட அயர்லாந்திற்கான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தனது அனுபவங்களை அடிப்டிடையாக வைத்து இலங்கையில் சமூகங்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்றார் எனவும் அம் முயற்சி மிகவும் கடினமானதாகக் காணப்பட்டதாகவும் ஹவல்ஸ் மேலும் குறிப்படடுள்ளார்.

இலங்கை அரசு சில இராணுவ மோதல்களில் வென்ற பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, அனைவரையும் உள்வாங்குவது ஆகியன குறித்து அக்கரையின்றி இருப்பதே எல்லாவற்றறையும் விட விரக்தியாளிப்பதாக பிரட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.

நல்லிணக்கமும் பேச்சுமே அவசியம். இல்லாவிடில் கொலைகள் தொடரும் என்பதை இலங்கை அரசுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப் போகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலமை மோசமடையும் ஐ.நா அமைப்புக்கள் அச்சம்

இலங்கை அரசு 16ம் திகதியுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதை தொடர்ந்து மேலும் வன்முறைகள் மூளலாம். இதனால் மனிதபிமான உதவி விநியோகம் பாதிக்கப்படுவதுடன் பணியாளர்களின் பாதுகாப்பும் மோசமடையலாம் என் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

வன்முறைகள் தீவிரமடையுமெனத் தான் அச்சம் கொண்டுள்ளார் என்று மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சேர்ந்த ஜோலா டொவெல் குறிப்பிட்டள்ளார்.

மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களுக்கு அதனை வழங்குவதில் தாக்கத்தை இது ஏற்படுத்தும். பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையைக் கவனத்தில் கொண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மனிதபிமான உதவிகளை வழங்கும் நடைமுறைககளை மீளாய்வு செய்கின்றன எனவும் பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வகுத்து வருகின்றன எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் தம்மால் இப்ணியாளர்களின் பாதுகப்பபை உறுதிப்படுத்த முடியாதென தெரிவித்துள்ளனர். எனவும் பொவெல் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக சிறுவர், குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் திறமையைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என 'யுனிசெவ்' அமைப்பின் பேச்சாளர் கேள்டென் வெய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரின் வட மேற்கு பகுதியிலிருந்து கடந்த சில வாரங்களில் 23 ஆயிரத்து 500 பேர் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகம் இலங்கையை தீவிர மோதல் பகுதியாக அறிவித்துள்ளதுடன் உள்நாட்டில் இடம் பெயர்ந்த நான்கு லட்சம் பேருக்கு உதவுவதற்கான முன்னெச்சரிக்கை திடட்டத்தையும் வகுத்துள்ளது.

மோதல் தீவிரமடைவதால் சிறுவர்கள் படையணிகளில் சேர்க்கப்படுவது அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.