Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஐந்து நாடுகள் பயண ஆலோசனை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஐந்து நாடுகள் பயண ஆலோசனை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்

1/20/2008 7:36:50 PM

வீரகேசரி நாளேடு - பாதுகாப்பற்ற சூழல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை காரணங்காட்டி, 5 முன்னணி நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பயண ஆலோசனை வழங்கியுள்ளன. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளே தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த நாடுகள் புத்தளத்துக்கு அப்பால் வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு பல ஆண்டுகளாக நிரந்தர பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன.

இந்நிலையில் அண்மைக் காலமாக யால உள்ளிட்ட தென்பகுதி சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், விடுதலைப் புலிகள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட விமானத் தாக்குதலையடுத்து, இலங்கையை பாதுகாப்பு அற்ற பிரதேசமாக வர்ணித்துள்ள மேற்படி நாடுகள் அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன.

இலங்கையின் எந்தப் பகுதியில் எந்த வேளையிலும் தாக்குதல் இடம்பெறலாம் என தெரிவித்த பிரித்தானிய அரசு, முக்கிய தேவைகள் அல்லாத நிலையில் அங்கு செல்வதை தவிர்க்குமாறு தனது பிரஜைகளுக்கு கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தது.

அதேவேளை இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களும், மோதல்களும் இடம்பெற்று வருவதனால் அங்கு செல்ல வேண்டாமென ஜேர்மன் அரசாங்கம் கடந்த வாரம் தனது பிரஜைகளை அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் வியாபார நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை கனேடிய அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

வன்முறைகள் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியிருந்தது. இதேவேளை இலங்கைக்கான பயணங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியா கடந்த 17 ஆம் திகதி தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மிகவும் ஆபத்து மிக்க பகுதியென வர்ணித்துள்ள ரஷ்யா, தனது பிரஜைகளை அங்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.