Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முறிந்த பேச்சு மேசையின் பேரங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவு தொடர்..

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஜக்கிய இலங்கைக்குள்

சமஸ்டி வழியில் தீர்வுகாண்பது பற்றிய விவகாரம் ஒரு சர்ச்சைக்குரிய விவாதமாக

வெடித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில். அதுபோலவே சர்ச்சைக்குரியதாக தொடங்கியிருக்கும்

இந்த அரசியல் அனுபவத் தொடரிலும் அதன் ஆரம்பத்திலேயே- இதன் வாசகர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம்

செய்ய வேண்டிய நிலமை எனக்கு இருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்காவின் ஜக்கிய தேசியக்கட்சி அரசுடனும். பின்னர் மகிந்தராஜபக்ச அரசுடனும் தமிழீழ

விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய ரேநடிப் பேச்சுக்கள் அணைத்தையும்- ஒன்றைக் கூடத் தவறவிடாமல்

- கவர் பண்ணிய ஒரே செய்தியாளன் என்ற பின்புலத்தில் இந்தப் பேச்சுகளின் இடையே

மைய இழையோட்டமாக நகர்ந்த ஓரிரு விடயங்களை- மிகவும் மதிநுட்ப்பத்துடன் சுட்சுமமாக இடம்பெற்ற

காய் நகர்த்தல்களை- இக்கட்டுரை தொடர் ஊடாக எனது அனுபவ பகிர்வின் வாயிலாக வாசகர்களுக்கு தெரியப்

படுத்தவது எனது நோக்கம்.

ஆகவே ஆரம்பத்திலேயே ஓர் உண்மையை வாசகர்களுக்கு கூறி வைத்து விடுகின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கா அரசுடன் நடத்திய பேச்சக்களின் போது சமஸ்டி முறை கட்டமைப்பின்

அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய ஒஸ்லோப் பிரகடனம் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள்

இணங்கினார்கள் என்று கூறப்பட்டாலும் கூட- அதனடிப்படையிலேயே பல்வேறு வாதங்களும் விவாதங்களும் இப்போது

முன்வைக்கப் பட்டாலும் கூட..

தமது சுதந்திர தாயகம் என்ற கோட்ப்பாட்டை விட்டு கீழிறங்கி சமஸ்டி கட்டமைப்புக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்

பிரபாகரனின் உடன்பாடின்றி பல்வேறு மட்டங்களிலும் நடந்த சுத்த கம்பக் என்பதே உண்மை.

அப்படியானால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலமை முன்வைத்த ஒரு யோசனைக்கு அமைய உள்ளக சுயநிர்ணயக்

கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று தாயகத்தில் ஜக்கியமான இலங்கைக்குள்

சமஸ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு ஒன்றைப் புலிகளுடன் சேர்ந்து ஆராய்ந்து பார்ப்பதற்கு தரப்புக்கள் இரண்டும் இணங்கிக் கொண்டன.

என்று 2002 டிசம்பரில் ரணிலின் இணக்கத்தோடு ஒஸ்லோவில் வைத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பிரகடனம் தவறானதா?

புலிகளின் பேச்சுக் குழுப் பிரதிநிதிகளையும் வைத்துக்கொண்டு இந்த அமைதி முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேயின் பொறுப்பாளரும்

அப்போதய பிரதி அமைச்சருமான விதா கெல்கிசன் விடுத்த அறிவிப்பு பொய்யானதா? சமர்ஸடி தீர்வு எதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின்

தலைவர் வே. பிரபாகரன் இணங்கவேயில்லை என்பதை விடுதலைப்புலிகளே இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் பகிரங்க படுத்த தேவையில்லை

அப்படி இருக்கம் போது இதனை அறிவிக்கும் அதிகாரம் உனக்கு எங்கிருந்து வந்தது?

அதை எப்படி நம்ப முடியும்?

இப்படியெல்லாம் வாசகர்களாகிய நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முன்னர் ஒரு சின்ன விளக்கத்தை

தர விரும்புகின்றேன். எனது பத்திரிகைதுறை ஆசான் இலங்கையில் தமிழ் இதழியல் துறையின் ஜாம்பவான்- அமரர் எஸ்.டி. சிவநாயகம் நான் கண்ட பாரதி என்ற தலைப்பிலே ஒரு கட்டுரைத் தொடர் வரைந்தார். அது பற்றிய முன்னறிவிப்பு வந்தபோதே அவசரக் குடுக்கையாக நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டு வைத்தேன்.

மகாகவி பாரதியார் இறக்கும்போது உங்களுக்கு வயது பத்து கூட ஆகியிருக்குமோ தெரியாது. நீங்கள் அவரைக் கண்ணால் கண்டு கூட இருக்க மாட்டீர்கள் அப்படியானால் நான் கண்ட பாரதி என்று எப்படி எழுதப் போகின்றீர்கள்? - என்று சாரப்பட- அதே சமயம் பவ்வியமாக- ஒரு கேள்வியை நான் போட்டு வைத்தேன் என்று நினைப்பு. இது அனேகமாக 1980-1981 ஆம் ஆண்டாக இருக்கமென்று எண்ணுகின்றேன்.

அவருடைய அந்தக் கட்டுரை தொடர் எனது நியாயமான கேள்விக்கு பதில் தருவது போலத்தான் ஆரம்பமானது. இதற்கு முன்னர் கம்பன் கண்ட ராமன் என்ற தலைப்பில் பலர் எழுதியுள்ளார்கள் ராமன் வாழ்ந்தது திரேதயுகம்@ அதற்க்கு பின்னர் துவாபர யுகம் வந்தது. அதற்க்குப்

பின்புதான் இப்போது கலியுகம். இந்தக் கலியுகத்தில் இற்றைக்கு சுமார் எண்ணுhறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கம்பர். இரண்டு யுககங்களுக்கு

முன்னர் வாழ்ந்த ராமனை கம்பன் கண்டு. தாசித்து காவியம் படைக்கலாம் என்றால். நான் பிறந்த காலத்தில் வாழ்ந்த பாரதியை நான் ஆத்மாhத்தமாக

தரிசித்து கட்டுரை வரைய முடியாதா

மேலும் படிக்க...

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=91

http://www.kalakam.com/forum/viewtopic.php?t=91

[

Edited by காவல்துறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.