Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முறிந்த பேச்சு மேசையின் பேரங்கள்..பகுதி 3

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------------------------------------------------------------

பகுதி- 03

சமஸ்டி - புராண சுயாட்சி முறையை

இப்படி திரித்த பின்னணி..

வழமையாகப் புலிகளின் மாவீரத் தின உரையை. தலைவர் பிரபாகரனின் சிந்தனை ஒட்டத்துக்கு அமைவாக தமக்குரிய சொல்லாட்சி. அரசியல் மதிநுட்ப்பம் . இராஜதந்திர அறிவு உலகின் யதார்த்த போக்கு பற்றிய தீர்க்க தரிசனம் ஆகியவற்றோடு தமிழிலும் அதே சமயம் அதன் ஆங்கல மொழி பெயர்ப்போடும் தயhரித்து வழங்குபவர் புலிகளின் மதியுரைஞர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான்.

மhவீரத் தினம் வருகின்ற நவம்பர் மாதத்தில் இந்த உரையை - உலகமே ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்ற புலிகளின் கருத்து நிலப்பாட்டை தெளிவு படுத்தகின்ற இந்த சரித்திரக் கீர்த்தி பெற்ற பேச்சை- தயார் செய்வதற்காக அவர் படும் பாடு சிரமம் அதில் ஆழ்ந்து உறைந்து மூழ்கிப் போகும். அவரின் பற்றுணர்வு போன்றவை அவரோடு நெருங்கி பழகியவர்களிற்க்கு நன்கு தெரியும். அது அவருக்கொரு பிரசவவேதனை

அச்சமயத்தில் தமிழர் தாயகத்தில் தலைவர் பிரபாகரனிற்கு பக்கத்தில் அவர் இருக்காமல் லண்டனில் இருந்தாலும் கூட தமக்கே உரிய தொடர்பாடல்கள் மூலம் தலைவர் பிரபாகரனின் மன உள்கிடக்கையை நன்கு புரிந்து கொள்வதிலும் அதற்கு உரிய அரசியல் உரை வடிவம் கொடுப்பதிலும் அவர் எடுக்கும் சிரமத்தை கருமமே கண்ணாகினார் என்று கூறலாம்.

அது மட்டுமல்ல திருவள்ளுவரின் திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை எழுதியதை போல தலைவர் பிரபாகரனின் மாவீரர்தின உரையை அடுத்து வருகின்ற பொது கூட்டத்தில்( அது அவர் இருக்கம் இடத்தை பொறுத்தது லண்டனிலும் இருக்கலாம் யாழ்ப்பாணத்திலும் இருக்கலாம் வன்னியிலுமாக அமையலாம்) அந்த மாவீரர் தின உரைக்கு அவர் கொடுத்திருக்கின்ற விளக்கம் - வியாக்கியானம் - சுவாரசியமாக சுவை பட அமையும் அதை கேட்டு சிலாபிக்காத ஈழத்தமிழ் உள்ளங்கள் குறைவு. தமக்கே உரிய நகைச்சுவையோடு சொற்க்களை - வசனங்களை - வெட்டி இடைநிறுத்தி சிரிப்புக்கும் மத்தியில் அரசியல் கருத்தை வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல அள்ளி வீசும் அவரது பாங்கு கேட்ப்பதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டிய விடயம்.

1991ம் அண்டு தொடங்கிய தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையிலிருந்து 2005ம் ஆண்டு வரையிலான மாவீரர் தின உரைகள் அணைத்திற்க்கும் வார்த்தை வடிவம் கொடுத்தவர் மதியுரைஞர் பாலசிங்கம்தான் . 2006 டிசம்பர் 15ம் தேதி தமிழ் கூறும் ஈழத்தை நட்டாற்றில் விட்டு நம்மை விட்டு பpரியும் கடைசி கட்டத்தில் - சரியாக அத்தினத்திற்கு 18 நாட்களிற்க்கு முன்னர் தலைவர் பிரபாகரன் ஆற்றிய மாவீரர் தின உரை மட்டுN இது வரை பாலசிங்கத்தினால் தயாரிக்கப் படாதது.

அச் சமயத்தில் கடும் சகயீனம் முற்றிருந்த அவருக்கு 2006 நவம்பர் 27 ம் தேதி தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரை மாவீர தின உரையின் விபரங்கள் இணையத்தளத்தில் அன்று மாலை வெளிவரும்வரை அதில் அடங்கியிருந்த விடயங்களில் எதுவுமே தெரிந்திருக்க வில்லையென்பதையும் பின்னாளில் தமிழீழ அரசியல்; சரிதத்தை வடிக்கும் ஆய்வாளர்களின் தகவலிற்காக இங்கு குறிப்பிட்டு கடந்து செல்கின்றேன்.

தலைவர் பிரபாகரனின் அரசியல் சிந்தனைக்கு மாவீர தின உரையில் வார்த்தை வடிவம் கொடுக்கும் அன்ரன் பாலசிங்னத்தின் சொல்லாட்சி குறித்து சக ஊடகவியளாளர்களிற்கு மற்ரொர கருத்தையம் இங்கு சுட்டி காட்டி செல்வது சமய சந்தர்ப்பத்திற்க்கு பொருத்தமானதென நினைக்கின்றேன்

ஈழ தமிழரின் விடுதலை போராட்டத்தின் முக்கிய - தனித்துவ - சக்தியாக விளங்குவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே இந்த அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி தெளிவு படுத்தி பல்வேறு அறிக்கைகளும் பேச்சுகளும் அவ்வப்போது வெளிவரும் . அவற்றில் பல தமிழில் இருக்கும் சர்வதேச பல சமுகத்திற்க்கான பல விடயங்கள் ஆங்கிலத்திலும் வெளிவரும்.

சில சமயங்களில் ஆங்கிலத்தில் வருவதை தமிழிலும் தமிழில் வெளிவருவதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டிய தேவைகள் ஏற்ப்படும் . அந்த வேலையை புலிகள் இயக்கமே அவ்வப்போது செய்வதுண்டு சில சமயங்களில் ஊடகவியாளார்களின் தலையில் இந்த வேலை பெறpநந்து விடும் . தமிழ் ஊடகமொன்றின் ஆசிரியர் நேரத்திற்கு பக்கத்தை அச்சிற்கு கொடுப்பதற்க்கு

காலத்தோடு போரடிக் கொண்டிருக்கும் போது நீண்ட அறிக்கை ஒன்று ஆங்கிலத்தில் வரும் அவசரத்தில் கண்ணா பின்னா என்று மொழி பெயர்த்து அந்த அறிக்கையின் அரசியல் மைய கருத்தையே சிதைத்து நாசமாக்கி விடும் செய்தியாளர்களும் இருக்கிறார்கள் . இவர்கள் எல்லேhரும் ஊடக வியலாளனாக தனது வாழ்வை தொடங்கி அரசியல் மதியுரைஞராக தன்னை விஸ்வருபமாக வளர்த்து கொண்ட அன்ரன் பாலசிங்கத்தை தங்களின் ஆதர்ச வழி காட்டியாக கொள்ள வேண்டும் . அரசியல் விடயத்தில் அவரை பின்பற்றுங்கள் என நான் கூறவில்லை ஈழ தமிழரின் அரசியல் பின்புலங்கள் நிறைந்த விடயங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்க்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்க்கும் மொழி பெயர்பதற்க்கு அவரிடம் படிக்க வேண்டுமென்றுதான் நான் கூற முற்ப்படுகிறன்றேன் .

அவருடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் அந்த வாய்ப்பு சிறிது கிட்டிய அனுபவத்தோடு தான் இதனை சக பத்திரிகையாளர்களோடு பகிந்து கொள்ள விரும்புகிறேன் . ஆங்கிலத்தில் வரும் அரசியல் அறிக்கைகளை தமிழாக்கம் செய்வதில் கருத்து கொலை இடம் பெற்றால் மதியுரைஞர் பாலாவிற்க்கு கோபம் பொத்து கொண்டு வரும் . என்னுடைய பத்திரிகையில் வரும் அத்தகைய செய்திகளிற்காக அவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அனுபவம் எனக்குண்டு. அதே சமயம் நல்ல மொழி பெயர்புக்களிற்க்காக வசிட்டர் வாயல் பிரம்மரிசி பாராட்டு வாங்கிய அனுபவம் இல்லாமலும் இல்லை.

ஆங்கிலத்தில் ( கநனநசயட pயசவல ) என்று பெயரை வைத்துக் கொண்டு தமிழில் தமிழரசு கட்சியென்று ( வினை) விதைத்தவர்கள் நம்மவைர்கள் . 2005 ம் ஆண்டு வரையான தலைவர் பிரபாகரனின் உத்தியோக புர்வ மாவீரர்தின உரைகளின் தமிழ் வடிவங்களையும் அவற்றின் ஆங்கில உரையாக்கங்களையும் ஒரு தடவை ஒப்பிட்டு பார்த்தால் அவரது மொழி பெயர்ப்பின் கன கச்சிதம் புரியும் . மொழி பெயர்ப்பிற்கு - உரையாக்கத்திற்கு - ஒரு புதுவித வழிகாட்டல் மாதிரியையே அவர் நெறிப்படுத்துவதை கhணலாம் அவை அணைத்தையும் ஒப்பிட்டு வாசித்து தேர்ந்த ஓர் ஊடகவியலாளனின் அரசியல் செய்தி மொழி பெயர்ப்பு - அதுவும் ஈழ தமிழர்களின் அரசியல் தொடர்பான செய்திகளின் மொழி மாற்றுகை - கைதேர்ந்த கலைஞனின கைவண்ணமாக நிச்சயமாக இருப்பதை காணமுடியும் .

பhலசிங்கத்தின் ஆங்கில - தமிழ் புலமை சொல்லாட்சி திறன் தக்க வாhத்ததையை உரிய இடத்தில் பயன்படுத்தும் நளினம் அல்லது நகாசு ஆகியன குறித்தும் அவை தொடர்பான அனுபவங்கள் குறித்து தனி கட்டுரை தொடரே வரையலாம் என்பதால் அதை இத்துடன் நிறுத்தி விடயத்திற்கு வருவோம்.

மேலும் படிக்க...

http://www.kalakam.com/forum/viewtopic.php?p=176#176

http://www.kalakam.com/forum/viewtopic.php?p=176#176

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.