Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார்

1/27/2008 7:34:39 PM

வீரகேசரி நாளேடு - கண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பது மலையக மக்களின் உடனடித் தேவைகளை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

தோட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தளை, கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இலவசமாக பத்து கிலோ அரிசியும் ஒரு கிலோ அரிசி மாவும் வழங்கினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் சந்திரசேகரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமாரன் உபதலைவர் ஏ.லோரன்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் சந்திர÷சகரன் கூறியதாவது:

அரிசி வழங்கும் வைபவம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உடனடி எதிர்பார்ப்பõக இருப்பினும் மலையக மக்களின் சகல கோரிக்கைகளையம் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார்.

மலையக மக்களின் பிரச்சினைகள் குறிப்பாக மலையக இளைஞர்களின் கோரிக்கைகள் அவர்கள் எதிர்பார்ப்புக்கள் பற்றிய தெளிவான கண்ணோட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது.

மலையக மக்களின் எதிர்கால சந்ததியினர் பெருந்தோட்ட தொழிலாளர்களாகவே தோட்டத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற அடக்கு முறையில் இருந்து விடுபட வேண்டுமென்பதே இன்றைய மலையக இளைஞர், யுவதிகளின் இதய துடிப்பாகும். மலையக மக்களின் குடியிருப்புக்கள் மாற்றப்பட வேண்டும். நவீன வீடமைப்பு திட்டம் அமுலாக்க வேண்டும். அவசியமான சகல உட்கட்டமைப்பு தேவைகளும் அம்மக்களுக்கு கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும். அத்துடன் மலையக மக்களின் அரசியல் உரிமைகளும், அந்தஸ்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

பாராளுமன்றம், மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஆகியவற்றில் மலையக மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் பிரதேச செயலகங்கள் மாற்றியமைக்கப்படல் வேண்டும். சகல அம்சங்களிலும் மலையக சமூகம் ஒரு மாற்றத்தை கண்டால் மட்டும் அது அபிவிருத்தியடைந்த சமூகமாக கருதமுடியும். ஜனாதிபதி தன் பதவிக்காலத்துக்குள் முப்பது சதவீத வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மலையக மக்களின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.

தொலைநோக்குப்பார்வையோடு, தெளிவான அரசியல் சிந்தனைகொண்ட தலைமையக ஜனாதிபதியை நாங்கள் இனம் காண்கின்றோம்.

மலையகத்துக்கான பல்கலைக்கழகம், உயர்கல்விக்கான வாய்ப்புகள், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் பிரதேச நிருவாகத்தில் மலையக மக்களுக்குள்ள நியாயமான உரிமைகள் போன்றவற்வற்றை செயற்படுத்த ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய இனப்பிரச்சினை என்றõல் அது வட கிழக்குதான் என்ற நிலைமையை மாற்றி மலையக மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகள் உள்வாங்கப்படல் வேண்டும். சுத்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை தலைவர்களில் இதனை மிகச் சரியாக புரிந்துகொள்கின்ற ஆற்றல் உள்ளவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நாங்கள் கருதுகின்றோம்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்து முடிக்க வேண்டுமென்ற பிரசாரத்தில் துளிர்விட்டு, பரந்துவிரிந்து, சுயநலத்தோடு உறுதியோடு நிற்கின்ற அரசியல் தைரியம் எங்களிடமுள்ளது. எனவே, ஜனாதிபதி அவர்கள் எமது அரசியல் பலத்தை புரிந்துகொள்ளும் வகையில் எம்மோடு ஒத்துழைப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன்.

இந்நிலையில் ஜனாதிபதி அவர்கள் மலையக மக்கள் மீதுள்ள ஈடுபாட்டையும் உணர்வையும் தெளிவுபடுத்தும் விதத்தில் செயற்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது.

இந்த அரசியல் இலக்கை நோக்கி வேகமாக பயணம் செய்ய ஜனாதிபதியின் செயற்பாடுகள் தூண்டுதலாகவும் உற்சாகமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைய வேண்டும். இதன் மூலம் மட்டுமே மலையக எதிர்கால சந்ததியினரை நாம் சரியாக வழிநடத்த முடியும்.

இப்படி சொல்லிக்கிட்டே உங்க பதவியை தக்க வையுங்க......

இல்லாட்டா..மகேஸ்வரன் போல உயிரையும் தக்க வைக்க முடியாதுல்ல :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.