Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலம் கடந்த ஞானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-01-28

காலம் கடந்த ஞானம்

தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்துக் காலங்காலமாகத் தமது அரசியல் அதிகாரப் போர்களை நடத்தி வரும் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களத் தலைமைகள், குரூர வடிவிலான அரச அடக்குமுறையை சிறுபான்மைத் தமிழர்கள் மீது ஏவிவிடுவதை ஒரு பழக்கமாகவும், அந்தப் பழக்கத்தின் மூலம் தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்வதை ஒரு வழமையாகவும் கைக்கொண்டு வருகின்றன.

அந்தத் துன்பியல் போக்கின் மிக மோசமான விளைவுகளையே இலங்கைத் தீவு எதிர்கொண்டு அந்தரித்து நிற்கின்றது.

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்கில். "காலம் கடந்த அரசியல் ஞானம்' தென்னிலங்கைக்குப் பிறப்பதும் ஓர் அம்சமாக அவதானிக்கத்தக்கதாக அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

இனப்பிரச்சினைக்கான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறை வைக்கப்படும்போதும், பேரினவாத அடக்குமுறைச் சிந்தனைக் கொழுப்பில் அதை எதிர்க்கும் தென்னிலங்கை, பின்னர் நிலைமை முற்றி மோசமடையும் போது பழைய சமரச முயற்சியை அது முன்வைக்கப்பட்ட சமயத்தில் வரவேற்றிருக்கலாமே என்று பின்னர் ஆதங்கப்படுவது வழமை. அதுவே இப்போதும் நடக்கின்றது.

ஐம்பதுகளின் பிற்பகுதியில் பண்டா செல்வா ஒப்பந்தம் மூலம் பிரதேச மன்றங்கள் ஊடாக அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படுவதற்கும்

அறுபதுகளின் நடுப்பகுதியில் டட்லி செல்வா ஒப்பந்தம் மூலம் மாவட்ட மன்றங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்கும்

மீண்டும் 1980 முற்பகுதியில், அரசு தமிழர் தரப்புப் பேச்சுகளில் இணக்கப்பாடு காணப்பட்ட அடிப்படையில் மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும்

முயற்சிகள் எடுக்கப்பட்டபோது அந்தந்தச் சமயங்களில் அவை கடும் எதிர்ப்புக்கு குறிப்பாக பௌத்த , சிங்களப் பேரினவாதத் தலைமைகளின் அளவிலாச் சீற்றத்துக்கு இலக்காகின.

அதனால் அந்த முயற்சிகள் இடைநடுவில் கைவிடப்பட்டு அந்த உடன்பாடுகளும் செயலிழந்து செத்துப் போயின.

1987இல் இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புப் போன்ற பிரசன்னத்துடன், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் உத்தேசத்திட்டம் இலங்கை இந்திய ஒப்பந்த வடிவத்தில் அழுத்த மாக நெருக்குதலாக முன்வைக்கப்பட்டது.

அதையும் தென்னிலங்கை பௌத்த, சிங்களப் பேரினவாதம் மிகக் கடுமையாக எதிர்த்தது. அச்சமயம், அதற்கு முன்னர் பிரஸ்தாபிக்கப்பட்ட பிரதேச மன்றங்கள் ஊடான அதிகாரப் பகிர்வு மற்றும் மாவட்ட மன்றங்கள் ஊடான அதிகாரப் பகிர்வு போன்றவற்றை நாம் சிறுபான்மையினருக்குக் கொடுத்து அப்போதே நிலைமையை ஒழுங்குபடுத்தி, பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே என்ற ஆதங்கம் தென்னிலங்கையில் எழவே செய்தது.

அதேபோல, 1987 88 ஆம் ஆண்டுகளில் முன்மொழியப்பட்டு, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் வலோற்காரம் காரணமாக சட்டமாக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தமும், அதற்கு அமைவான மாகாண ரீதியிலான அதிகாரப் பகிர்வும் தென்னிலங்கைத் தீவிரவாத அழுத்தம் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமலேயே போயிற்று.

அதன் பின்னர் 2002 இறுதியில் "ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையில் தீர்வைக் காண்பது' என்ற இணக்கப்பாட்டுக்கு சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசு புலிகள் ஆகிய இரு தரப்புகளும் சம்மதித்தன.

ஆனால் வழமைபோல அதுவும் நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் தூக்கிப் போட்ட காரணத்தால் நிலைமை முற்றி மோசமடைந்தது.

தீர்வுக்கான முயற்சிகள் சமஷ்டி நிலையையும் கடக்கும் சூழல் தென்படத் தொடங்கிய சமயத்திலேயே, 1987 இல் செத்துச் செயலிழந்து போன இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்தும் அதற்கு அமைய பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் செய்யப்பட்ட அதிகாரப் பகிர்வு குறித்தும் மீண்டும் பேசப்படுகின்றது.

இருபது வருடங்களுக்கு முன்னர் பிரேரிக்கப்பட்ட ஒன்றை, அப்போது அதனைக் கடுமையாக எதிர்த்த தென்னிலங்கையரே இப்போது அதனைச் சிலாகித்து நல்ல பிரமாதமான திட்டம் என்று ஏத்திப் புகழாரம் சூடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்வையும், அதன் அடிப்படையிலான மாகாண அரசையும் தாண்டி, "சமஷ்டி', "தனியரசு' ஆகிய பதங்கள் குறித்துப் பேசவேண்டிய சூழல் உருவாகியிருக்கும் இச்சமயத்தில்தான் ஆழக் குழிதோண்டிப் புதைத்து விடப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்வு குறித்து அலட்டிக்கொள்ளப்படுகின்றது.

இருபது வருடங்களுக்கு முன்னர் பிரஸ்தாபிக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு இப்போது காலம் கடந்துதான் வாகை சூடப்படுகின்றது.

இப்படி "பஸ்ஸைத் தவறவிட்ட பின்னர்' அது பற்றி சிலாகிக்கும் தெற்கின் போக்கு மாறப்போவதில்லை.

அந்த வரிசையில் சமஷ்டி மூலமான தீர்வுக்கான கடைசி வாய்ப்பும் இப்போது நழுவிப் போய்க்கொண்டிருக்கின்றது. அத்தகைய தீர்வு பிரேரிக்கப்பட்டு, அதற்கான வாய்ப்பு காலவதியான பின்னர், "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்' என்ற போக்கில், "அந்த வாய்ப்பையும் கூடத் தவறவிட்டோமே!' என்று தென்னிலங்கை ஆதங்கப்படவேண்டி நேரும்.

அப்போது விழித்துக்கொள்வது "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' போன்றதாகவே இருக்கும்.

http://www.sudaroli.com/editorial.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தின் இடத்தை இந்த சுடரெலி பிடிக்க போகின்றது போல இருக்கு :mellow:

நிதர்சனத்தின் இடத்தை இந்த சுடரெலி பிடிக்க போகின்றது போல இருக்கு :mellow:

:huh::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.