Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்போர் மூளும் அபாயம்!

சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்!

அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்!

கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர்.

சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்து வைத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "தி பாட்டம் லைன்" என்னும் ஆங்கில வாரஏடு பரபரப்பான செய் தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கம்போடியாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை புலிகள் ஏராளமாக தருவித்துள்ளனர். மேலும் பல்கேரியாவி லிருந்து டாங்கி எதிர்ப்பு உந்துகணை களையும் மற்றும் உக்ரைன், சைப்ரஸ், கம்போடியா, குரோஷியா ஆகியவற்றிலிருந்து ஏராளமான ஆயுதங்களையும் கொள்முதல் செய்து தங்கள் பகுதியில் குவித்து வைத்துள்ளனர் என்றும் எனவே சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகளைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்றும் இந்த இதழ் எச்சரிக்கை செய்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் கண்டனத் திற்கு சிங்கள அரசு ஆளாகியுள்ள சூழ் நிலையில் மீண்டும் போர் மூளுமானால் விடுதலைப்புலிகளை யாரும் குற்றம் சொல்ல முடியாது. போருக்கு சிங்கள அரசே காரணம் என உலகம் கூறும்.

இத்தகைய நல்ல சூழ்நிலை உருவாவதற்காகத்தான் விடுதலைப்புலிகள் இவ்வளவு காலம் காத்திருந்ததாக வும் கூறப்படுகிறது. புலிகளின் பொறுமை வீண்போகவில்லை.

பிப்ரவரி 4ம் தேதி நடைபெற விருக்கும் இலங்கையின் சுதந்திரப் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழ் நாட்டின் கடும் எதிர்ப்பின் விளைவாக ஊசலாடிக்கொண்டிருந்தார். ஆனால் சிங்கள அரசு போர் நிறுத்த உடன் பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்த போது அவரும் இலங்கைப் பயணத்தை ரத்து செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

விரைவில் மூளவிருக்கும் இறுதிக் கட்டப்போரில் சிங்கள இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழர் பகுதிகளை விடுதலைப்புலிகள் மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற போர் என்பது தமிழர் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத் துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவந்தது. ஆனால் இப்போது போர் சிங்களத் தலைநகரான கொழும்புவுக்கு இடம் மாறியுள்ளது. கொழும்பில் ஜனவரி முதல் வாரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று குண்டு வெடிப்புகளின் விளைவாக சிங்களர்கள் மத்தியில் பேரச்சம் உருவாகியுள்ளது.

அதிலும் இறுதியாக நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிங்கள அமைச்சர் டி.எம்.தசநாயாகா கொல்லப்பட்டது மக்க ளிடையே குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கியுள்ளது.

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் வான்படைத்தளபதி ஏர்மார் ஷல் ரோஷான்குணதிலகவைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது. ஏனெனில் குண்டுவெடித்த இடத்தை 3 நிமிடங்களுக்கு முன்னதாகத் தான் அவர் கடந்து சென்றிருக்கிறார். தாமதமாக வந்திருந்தால் நிச்சயமாக அவர் கொல்லப்பட்டிருப்பார் என இராணுவத் தரப்பு கூறுகிறது.

கடந்த மாதம் அனுராதபுரம் இராணுவ விமான தளத்தை கரும்புலிகள் தாக்கி 20க்கும் மேற்பட்ட விமானங்களை அழித்து விமான ஓடுதளங்களையும் அழித்துவிட்டனர். மிகுந்த பாதுகாப்புடன் கூடிய இராணுவ விமான தளம் இவ்வாறு அழிக்கப்பட்டது சிங்கள மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சிங்களருக்கு அனுராதபுரம் முக்கியமான நகரமாகும்.

அனுராதபுரம், கொழும்பு போன்ற சிங்கள நகரங்கள் புலிகளின் தாக்குதல் களிலிருந்து பாதுகாக்கப்படமுடிய வில்லை என்பதை அறிந்த சிங்களப் பொதுமக்கள் நடுவில் "நமது பகுதிகளுக் குள்ளேயே வந்து தாக்கும்

மேலும் படிக்க

http://www.kalakam.com/forum/viewtopic.php...&highlight=

Edited by காவல்துறை

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் கூறியது போல் (யார் என்று ஞாபகம் இல்லை) சிங்கள மக்களுக்கு நிறையவே அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.